குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சே சுந்த தக்சி சிக்கியுள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கணேமுல்ல சஞ்சீவகொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின்
தடுப்பு காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த சில நாட்களாக விசாரணைக்காக இஷாரா செவ்வந்தி அளுத்கம, தொடந்துவ மற்றும் மித்தெ னிய உள்ளிட்ட பல பகுதிக ளுக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார்.

இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங் கிய நிலையில், சஞ்சீவ கொலைக்குப் பிறகு அவர் பல நாட்கள் மறைந்திருந் ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்
துச் செல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், கெஹல் பத்தர பத்மேவின் அறிவுறுத் தலின் பேரில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய ஒரு இளம் பெண்ணைத் தேடிய ஜப்னா சுரேஷ், ‘தக்ஷி’ என்ற பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அவருக்கு சிங்களம் பேசத் தெரியாத நிலையில், வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதா கவும் கூறி சுரேஷ் அந்த பெண்ணை நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply