யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதி யில் உள்ள வீடொன்றுக்குள் முகமூடியுடன் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச் சாட்டில் கேகாலையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது  செய்யப்பட்டுள்ளார்.

யட்டியாந்தோட்டை -அலகொலவத்தை, பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.

சண்டிலிப் பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடெ டன்றினுள் கடந்த திங்கட்கிழமை, முகமூடிகள் அணிந்தவாறு நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று நுழைந்து வீட்டின் முன் நிறுத் தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து விட்டு, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக் கிளை கொள்ளையடித்து தப்பி சென்று இருந்தது.

பின்னர் கொள்ளையடித்து சென்ற மோட்டார் சைக்கிளை வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூ ரத்தில் உள்ள மாகியப்பிட்டி சந்திக்கு அருகில் நடு வீதியில் வைத்து தீ
மூட்டி விட்டு தப்பிச் சென்று ள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, வந்த நிலையில் நவாலி பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த யட்டியாந்தோட்டையை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஒரு கைக்கு ண்டு மற்றும் கஜேந்திரா வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைதான இளைஞனை மானிப்பாய் பொலிஸார் தடுத்துவைத்து விசாரித்து வரு கின்றனர்.

வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட ஏனைய மூவரையும் அடை யாளம் கண்டுள்ள நிலையில் அவர் களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

 

Share.
Leave A Reply