கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசமாக சிக்கிய கொழும்பு இளைஞர்

 

இரண்டு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தை அடைந்த சந்தேகநபர்

சந்தேகநபரான இளைஞர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 

Share.
Leave A Reply