தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்

பல ஆண்டுகளாக அச்சிடப்படாத சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் குவிந்து கிடப்பதாக ஆட்பதிவு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளில் 2006 முதல் 2010 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பிறந்த பாடசாலை மாணவர்களின் அடையாள அட்டைகளும் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு ஒரு கடிதம் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என்று ஆட்பதிவு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300,000 பாடசாலை மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிப்பதாகவும், 2005 இல் பிறந்த குழந்தைகளின் தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணி தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

Share.
Leave A Reply