முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு மீண்டும் புதன்கிழமை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நலம் மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, விசாரணைக்காக மெய்ந்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். இதன் போது அவரது உடல் நிலை குறித்த விசேட காரணிகளைக் கருத்திற் கொண்டு ஆகஸ்ட் 26ஆம் திகதி தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.

Share.
Leave A Reply