சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற கிளிநொச்சி – உருத்திரபுரத்தை சேர்ந்த இளைஞன் பெலா ரஸ் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
உருத்திரபுரத்தைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தரான குறித்த இளைஞன் ஆட்கடத் தல் காரர்கள் மூலம் சட்டவி ரோதமாக வெளிநாடு சென்ற நிலையில், நேற்றுமுன்தினம் பெலாரஸ் எல்லையில் அந் நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதன்போது அவருடன் இருந்த மற்றுமொரு இலங் கையரும் சுட்டுக் கொல்லப் பட்டதாக அந் நாட்டு தகவல் கள் தெரிவித்துள்ளன.
குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகு திக்குள்ளால் மற்றுமொரு நாட்டுக்குள் நுழைய முயற்சி த்த நிலையில் பெலார ஸ் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

