மேர்வின் சில்வாவிற்கு எதிரான காணி மோசடி வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள காணி மோசடி வழக்கு குறித்து நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் சட்ட ஆலோசனை கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வழக்கினை எதிர்வரும் ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி வரை ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

