மட்டக்களப்பு ஏறாவூரில் இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வீடு வந்து மீண்டும் கடமைக்கு திரும்பாது இரண்டு வருடமாக தலைமறைவாகி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் 5 கிராம் 410 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் நேற்று(05) கைது செய்துள்ளதுடன் இராணுவ சீருடை ஒன்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இராணுவ முகாமில் கடமையாற்றி

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து சம்பவ தினமான நேற்று காலை ஏறாவூர் கலைமகள் பாடசாலை வீதியில் பொலிஸார் புலனாய்வு பிரிவினர் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 இதன்போது ஐஸ் போதை பொருள் வியாபாரத்துக்கு எடுத்து கொண்டு சென்ற நிலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் குறித்த வியாபாரியை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்ததுடன் இவரிடமிருந்து 5 கிராம் 410 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.

குறித்த நபர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்துள்ள நிலையில் விடுமுறையில் வீடு வந்து மீண்டும் கடமைக்கு திரும்பாது தலைமறைவாகி வந்ததுடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரின் வீட்டில் இருந்து இராணுவ சீருடையைத் மீட்டுள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூரில் இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வீடு வந்து மீண்டும் கடமைக்கு திரும்பாது இரண்டு வருடமாக தலைமறைவாகி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் 5 கிராம் 410 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் நேற்று(05) கைது செய்துள்ளதுடன் இராணுவ சீருடை ஒன்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இராணுவ முகாமில் கடமையாற்றி

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து சம்பவ தினமான நேற்று காலை ஏறாவூர் கலைமகள் பாடசாலை வீதியில் பொலிஸார் புலனாய்வு பிரிவினர் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 இதன்போது ஐஸ் போதை பொருள் வியாபாரத்துக்கு எடுத்து கொண்டு சென்ற நிலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் குறித்த வியாபாரியை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்ததுடன் இவரிடமிருந்து 5 கிராம் 410 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.

குறித்த நபர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்துள்ள நிலையில் விடுமுறையில் வீடு வந்து மீண்டும் கடமைக்கு திரும்பாது தலைமறைவாகி வந்ததுடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரின் வீட்டில் இருந்து இராணுவ சீருடையைத் மீட்டுள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply