ஜம்மு காஷ்மீர் பொலிஸ் நிலையத்தில் வெடி பொருட்கள் வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழண்டுள்ளனர்.
அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள்
3000 கிலோகிராம் வெடிப்பொருளின் ஒரு தொகுதி பொலிஸ் நிலையத்துக்குள் வெடித்து சிதறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த வேளை திடீரென அவை வெடித்ததால் தடயவியல் குழு, பொலிஸார் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதில் காயமடைந்த 27 பேரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

