அரபுலக சர்வாதிகாரிகள் தான் ஜனநாயகம், நீதி, அரபு மக்களின் நல்வாழ்வு மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணல் என்பனவற்றுக்கான முதன்மை தடையாக உள்ளனர் என்று வாதிடுகின்றார் பிரபல பிரிட்டிஷ்-பலஸ்தீன-ஜோர்டானிய கல்விமானும் அரசியல் ஆர்வலருமான டாக்டர் அஸாம் தமீமி.

டாக்டர் அஸாம் தமீமி.
மத்திய கிழக்கின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை விவரித்த டாக்டர் தமீமி “இஸ்ரேல் அரபு ஆட்சியாளர்ளைக்கொண்ட பாதுகாப்பு சுவரால் பாதுகாக்கப்படுகின்றது.
அரபு மக்கள் ஒரு சிறையில் வசித்து வருகின்றனர். அவர்களின் சிறைச்சாலைகள் அவர்களின் ஆட்சியாளர்களாவர்.
அந்த ஆட்சியாளர்கள் தமது மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்றனர். மேலும் அவர்களின் செல்வத்தைத் திருடி வேறு இடங்களுக்கு கடத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சோகம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து வருகின்றது. இது முஸ்லிம் மத்திய கிழக்கிற்கு எதிரான மேலைத்தேச தீய வடிவமைப்புகளுக்கு உதவுகின்றது.

map-of-ottoman-empire(துருக்கி பேரரசு)
அரபு முஸ்லிம் நாடுகள் துருக்கி பேரரசின் ஒரு பகுதியாக இருந்தன. முதலாம் உலகப் போரின்போது துருக்கியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
வெற்றியாளர்களான பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு காலனித்துவ சக்திகள் கைப்பற்றப்பட்ட மத்திய கிழக்கைப் பிரித்து சிறிய அரசுகளை உருவாக்கி அவற்றில் தங்கள் நலன்களுக்காக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரபு அடிமைகளை அதிகாரத்தில் நிறுவினர்.
இந்த அடிமைகளின் சந்ததியினர் தான் தங்கள் மேலைத்தேச எஜமானர்களால் பாதுகாக்கப்பட்டு இன்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.
இந்த ஆட்சிகள் இன்று அரசியல் ரீதியான தமது சுய இருப்பை தக்கவைத்துக் கொள்ள அமெரிக்க-இஸ்ரேலிய நலன்களுக்கு சேவை செய்கின்றன.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலைமை என்னவென்றால் இந்த சர்வாதிகாரிகள் தங்கள் அரசியல் இருப்புக்காக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்காவை மட்டுமே இன்றும் நம்பி உள்ளனர்.
இந்த விசுவாசத்துக்குப் பகரமாக அவர்கள் பிராந்தியத்திற்கு எதிராக அமெரிக்க- – ஐரோப்பிய- – இஸ்ரேலிய திட்டங்களை செயல்படுத்துகின்றார்கள்.
அண்மைக் காலங்களில் தொடங்கி தற்போதும் இடம்பெற்று வரும் காஸாவில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலையையும், மேற்குக் கரையில் நடைபெற்று வரும் பாரம்பரிய சியோனிச காட்டுமிராண்டித் தனத்தையும் ஆதரித்ததன் மூலம் அரபுலக சர்வாதிகாரிகளின் அமெரிக்க, இங்கிலாந்து-, ஐரோப்பிய விசுவாசம் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றை நோக்குகையில் அரபு சர்வாதிகாரிகளை அதிகாரத்தில் அமர்த்தும் போது பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசுகளும் பிற்காலத்தில் அவர்களோடு இணைந்து கொண்ட அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளும், பலஸ்தீனர்களை தங்கள் வீடுகளிலிருந்தும் நிலங்களிலிருந்தும் அகதி முகாம்களுக்குள் விரட்டியடித்து பலஸ்தீனில் இஸ்ரேலின் ஒரு செயற்கையான காட்டுமிராண்டித்தனமான அரசை உருவாக்கினர் என்பதைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டி உள்ளது.
முஸ்லிம் மத்திய கிழக்கு அறியாமையுடனும் வளர்ச்சியடையாமலும் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வதற்கும், துருக்கிப் பேரரசு போன்ற ஒரு பலம்மிக்க சக்தியாக மீண்டும் தலை நிமிராமல் தடுப்பதற்கும் உரிய ஒரு வழியாக இது இருந்தது.
அன்று முதற் கொண்டே இஸ்ரேல் அண்டை நாடுகளுக்கு எதிராக ஏராளமான போர்களைத் தொடுத்துள்ளது. மற்றும் எகிப்திய, சிரிய, ஜோர்டானிய மற்றும் லெபனானின் பிரதேசங்களையும் அது கைப்பற்றி உள்ளது.
அவற்றை இஸ்ரேல் அமெரிக்க – ஐரோப்பிய ஆதரவுடன் சட்டவிரோதமாக தன்னோடு இணைத்துக் கொண்டது. இஸ்ரேல் இதுவரை 30 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் மீதான மிகப்பெரிய அளவிலான இனப்படுகொலைகளைப் புரிந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்களின் ஆதரவுடன் இந்த காட்டுமிராண்டித்தனங்கள் அனைத்தும் கவனிக்கப்படாமல் மூடி மறைக்கப்பட்டு விட்டன. அதே நேரத்தில் அரபு சர்வாதிகாரிகள் இந்த விடயத்தில் ஒட்டுமொத்தமாக அலட்சியமாகவே இருந்துள்ளனர்.
இதற்கிடையில் 1979இல் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சி அங்கு ஆட்சியில் இருந்த மேலைத்தேச சார்பு பஹ்லவி வம்சத்தை 1979இல் கவிழ்த்தது.
புதிய புரட்சி இஸ்லாத்தின் புகழை மீட்டெடுப்பது பற்றி பேசத் தொடங்கியது. அதே நேரத்தில் இஸ்ரேலை கடுமையாக எதிர்த்ததோடு பலஸ்தீன மக்களையும் அவர்களின் போராட்டத்தையும் ஆதரித்தது.
அரபு சர்வாதிகாரிகள் முஸ்லிம்களாக இருந்ததால் அவர்கள் அமெரிக்கா தலைமையிலான மேற்கு மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மாறாக அவர்கள் ஈரானுக்கு விரோதமாக அமெரிக்க--ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய சதிகாரர்களின் பக்கம் நின்றனர்.
அவர்கள் சவூதி அரேபியா மூலம் ஈராக் சர்வாதிகாரி சதாம் ஹுசைனை ஈரான் மீது படையெடுக்க வற்புறுத்தச் செய்து எட்டு ஆண்டுகால ஈராக்--ஈரான் போரைத் தூண்டினர். இது கிட்டத்தட்ட இரு நாடுகளையுமே அழித்தது. இரு நாடுகளிலும் சுமார் இரண்டு மில்லியன் மக்களையும் கொன்றது.
ஏனைய அரபு சர்வாதிகாரிகளும் கூட அமெரிக்க–ஐரோப்பிய--இஸ்ரேலிய ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக சதாம் ஹுசைனை ஆதரித்தனர்.
பின்னர் அமெரிக்க மற்றும் ஐரோப்பியர்கள் சதாம் ஹுசைனை ஏமாற்றி குவைத் மீது படையெடுக்கவும் தூண்டினர்.
இதனால் குவைத் நெருக்கடி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்காவும் மற்றும் ஐரோப்பாவும் இஸ்ரேலும் இந்தப் பிராந்தியத்திற்குள் நுழைந்து குண்டுவீசி குவைத், ஈராக் மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தின.
தமது தேவைகள் முடிந்ததும் ஈராக்கிற்கு சாவு மணி அடிக்கும் நோக்கில் அமெரிக்க-, ஐரோப்பிய யுத்த வெறியர்கள், ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யாக குற்றம் சாட்டினர்.
அமெரிக்கா தலைமையிலான யுத்த வெறியர்கள் ஈராக் மீது படையெடுத்து கிட்டத்தட்ட அபிவிருத்தி அடைந்திருந்த இந்த எண்ணெய் வளம் நிறைந்த பண்டைய நாட்டை ஒரு கல்லறையாக மாற்றினர்.
எகிப்தின் ஹோஸ்னி முபாரக், டமஸ்கஸின் கசாப்புக்கடைக்காரன் என வர்ணிக்கப்படும் சிரியாவின் கொடுங்கோலன் ஹபீஸ் அல் ஆசாத் ஆகியோரும் ஏனைய வளைகுடா நாடுகள் மற்றும் பிற அரபு சர்வாதிகாரிகளும் அமெரிக்கா தலைமையிலான இந்த போரை ஆதரித்தனர்.
அதன் பின்னர் 2011 அரபு வசந்தம் தொடங்கியது. தொடர்ச்சியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கிளர்ச்சிகள் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சிகள் என அது பரவியது.
இது துனிசியா, எகிப்து மற்றும் லிபியாவில் கொடுங்கோலர்களை பதவியில் இருந்து தூக்கி வீசியது. அந்த காலப் பகுதியில் அந்தப் பிராந்தியத்தில் மக்கள் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து வந்தனர். இன்று போரினால் பாதிக்கப்பட்ட லிபியா கிட்டத்தட்ட அமெரிக்க-இஸ்ரேலிய யுத்த பிரபுக்களால் தான் ஆளப்படுகின்றது.
அரபு சர்வாதிகாரிகளின் துரோகத்தின் உச்சம் அவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியர்களுடன் இணைந்து காஸாவில் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதற்கும் காஸாவை அழிப்பதற்கும் ஆதரவளித்தமையாகும். 2023 அக்டோபர் 8, இல் தொடங்கிய இந்த படுகொலை இன்றுவரை தடையின்றி தொடர்கின்றது.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக இஸ்ரேல் காஸால் குண்டுவீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மிகவும் பைத்தியக்காரத்தனமானது என்றும் வர்ணிக்கப்படுகின்றது. எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அண்டை நாடுகளில் உள்ள அரபு சர்வாதிகாரிகள் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்தையும், உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட இடங்களில் ஒன்றான காஸாவின் அழிவையும் ஆதரித்தனர்.
தன்னை ஒரு சியோனிஸ வாதி என்று பெருமையுடன் அழைத்துக் கொண்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் இணைந்து சுமார் 30 பில்லியன் டொலர்களை இதுவரை இஸ்ரேலுக்காக செலவழித்துள்ளனர்.
அத்தோடு இஸ்ரேலின் இனப்படுகொலையில் அதிநவீன ஆயுதங்களையும் அரசியல் ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
உண்மையில் இந்த இனப்படுகொலை அமெரிக்க ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. மறுபுறம் இதே டொனால்ட் ட்ரம்ப் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமை தனது முன்னைய பதவி காலத்தில் இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார்.
அது தான் இஸ்லாத்தின் முதல் கிப்லா (தொழுகை மற்றும் பிரார்த்தனைக்கான) திசையான மஸ்ஜித் அல் அக்ஸா அங்கு தான் அமைந்துள்ளது.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான இத்தகைய விரோதப் போக்கு அமெரிக்காவிடம் இருந்தபோதிலும், சவூதி, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரக சர்வாதிகாரிகள் இந்த நாடுகளுக்கு ட்ரம்ப் விஜயம் செய்தபோது அவருக்கு ஆடம்பரமான வரவேற்பை வழங்க போட்டியிட்டனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான அரசியல் சார்பு விசுவாசத்தை புலப்படுத்த அரபு சர்வாதிகாரிகள் ஜெருசலேம், மஸ்ஜித் அல் அக்ஸா மற்றும் இஸ்லாம் ஆகியவற்றை கைவிட்டு விட்டதை வெளிப்படையாக உலகுக்கு எடுத்துக் காட்டி அவர்கள் ட்ரம்பை மகிழ்வித்து தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக பில்லியன் கணக்கான டொலர்களை அமெரிக்காவில் முதலீடும் செய்தனர்.
இதனால்தான் டாக்டர் தமீமி, “நாங்கள் பலஸ்தீனை விடுவிக்க மட்டும் முயற்சிக்கவில்லை பலஸ்தீனமும் உம்மாவை (உலக முஸ்லிம் சமூகத்தை) விடுவிக்கின்றது” என்று கூறுகின்றார்.
காஸாவைப் பற்றி நாம் பேசும்போது பரந்த முஸ்லிம் உலகத்திலிருந்து அந்த மக்கள் தனிமைப்படுத்தப்படுவதைப் பற்றி அடிக்கடி பேசுகின்றோம்.
அதேபோல் முஸ்லிம் நாடுகளை குறிப்பிடும் போது அவர்கள் பலஸ்தீன காரணத்தை கைவிட்டுவிட்டதாக கூறுவதும் இயல்பானதே.
ஆபிரகாம் உடன்படிக்கைகள் பெரும்பாலும் முஸ்லிம் உலகம் ஒரு சர்ச்சைக்குரிய உறுப்பினரை புறக்கணித்துள்ளமைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிடப்படுகின்றன.
ஆனால், உண்மையில் அப்படித்தான் இருக்கின்றதா, பலஸ்தீனர்களின் எதிர்கால அதிர்ஷ்டம் முஸ்லிம் ஆட்சியாளர்களுடன் இணைக்கப்பட்டுள்ளதா “என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
லத்தீப் பாரூக்
தொடா்புடைய கட்டுரைகள்

