யாழில் வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த கதிரன் ஐயாத்துரை (வயது 73) என்பவரே இவ்வாறு கடந்த 21-01-2026 அன்று உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 19ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டு, துவிச்சக்கர வண்டியுடன் வீதிக்குள் நுழைய முயற்சித்துள்ளார்.
இதன்போது காங்கேசன்துறை பக்கத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தபோது, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அவர் உடனடியாக அந்த இடத்தில் மயங்கிய நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
யாழில் நிலைதடுமாறி வீதியில் விழுந்த முதியவருக்கு நேர்ந்த கதி…! | Elderly Man Dies After Road Accident Tellippalai
இதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

