அஸ்­கி­ரிய, மல்­வத்த, அம­ர­புர பீடங்­களின் மகா­நா­யக்க தேரர்கள் கையெ­ழுத்­திட்ட கடிதம் ஒன்று ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இது சாதா­ர­ண­மான ஒரு விடயம் அல்ல. மகா­நா­யக்­கர்கள் எப்­போ­தா­வது சில பிரச்­சி­னை­களை முன் நிறுத்தி, அர­சாங்­கத்­திற்கு அல்­லது ஜனா­தி­ப­திக்கு கடிதம் எழு­து­வது வழமை.

மூன்று பௌத்த பீடங்­களின் மகா­நா­யக்­கர்­களும் கூட்­டாக கடிதம் எழு­து­வது அசா­தா­ர­ண­மா­னது.

பார­தூ­ர­மான விட­யங்கள் அல்­லது பிரச்­சி­னைகள் குறித்தே அவர்கள் கூட்­டாக கடி­தங்­களை எழு­து­வார்கள்.

இலங்­கையில் பௌத்த பாரம்­ப­ரியம் மற்றும் பௌத்த பீடங்­களின் அர­சியல் செல்­வாக்கு தொடர்­பாக அறிந்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு, மகா­நா­யக்­கர்­களின் இந்தக் கடிதம் எந்­த­ள­வுக்கு பார­தூ­ர­மா­னது என்­பதைப் புரிந்து கொள்­வது கடி­ன­மல்ல..

கணக்­காய்­வாளர் நாயகம் பத­விக்கு ஒரு­வரை நிய­மிக்க வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தியே மகா­நா­யக்­கர்கள் தற்­பொ­ழுது கூட்­டாக கடிதம் எழு­தி­யுள்­ளனர்.

41 ஆவது கணக்­காய்­வாளர் நாயகம், 2025 ஏப்ரல் 08ஆம் நாள் ஓய்­வு­பெற்ற பின்னர், அந்தப் பதவி வெற்­றி­ட­மாக உள்­ளது.

2025 ஏப்ரல் 09ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் 05ஆம் திகதி வரை பதில் கட­மை­களை நிறை­வேற்ற, தர்­ம­பால கம்­மன்­பில நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

அதற்குப் பின்னர், அந்தப் பத­விக்கும் யாரும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை, பதில் கடமை ஆற்­று­ப­வரும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

நாட்டின் முக்­கி­ய­மான ஒரு பதவி நிரப்­பப்­ப­டாமல் இருப்­பது குறித்து கவலை தெரி­வித்து, மகா­நா­யக்­கர்கள் இப்­போது கடிதம் எழு­த­வில்லை.

அந்தப் பத­விக்கு யாரை­யேனும் ஒரு­வரை நிய­மிக்­கு­மாறு கூறியும் கடிதம் எழு­த­வில்லை.

அவர்கள், 2025 ஏப்ரல் 09ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் 05ஆம் திகதி வரை பதில் கட­மை­களை நிறை­வேற்­றிய கணக்­காய்­வாளர் நாயகம் திணைக்­க­ளத்தின், மிகவும் மூத்த மற்றும் அனு­பவம் வாய்ந்த அதி­கா­ரி­யான தர்­ம­பால கம்­மன்­பி­லவை, கணக்­காய்­வாளர் நாய­க­மாக நிய­மிக்க வலி­யு­றுத்­தியே கடிதம் எழு­தி­யுள்­ளார்கள்.

வேறு திணைக்­க­ளங்­களில் இருந்து அல்­லது வெளியில் இருந்து ஒரு­வரை கொண்டு வரு­வதை விட கணக்­காய்­வாளர் நாயகம் திணைக்­க­ளத்­துக்குள் உள்ள மூத்த அதி­கா­ரியை நிய­மிப்­பது தான் சிறந்­தது என்று அவர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்கள்.

இது அரச நிர்­வா­கத்தில் ஏற்­பட்­டுள்ள சீர்­கேட்டை தடுப்­ப­தற்கு பௌத்த பீடங்கள் தலை­யிட முற்­ப­டு­வதை காட்­டு­கி­றது.

அரச நிர்­வா­கத்தில் பௌத்த பீடங்­களின் செல்­வாக்கை அல்­லது தலை­யீட்டை இது மீண்டும் நிரூ­பிப்­ப­தாக உள்­ளது.

அதே­வேளை, அர­சாங்­கத்தின் மீதான பௌத்த பீடங்­களின் தலை­யீ­டுகள் தொடர்­பாக, புதிய சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு என ஒன்று இருந்­தாலும்,அதனை விட மேலான ஒரு சக்­தி­யாக இருப்­பது பௌத்த பீடங்­கள்தான்.

பௌத்த பீடங்­களே அர­சி­யலை தீர்­மா­னிக்­கின்­றன. அர­சி­யல்­வா­தி­களின் செல்­நெ­றி­களை வகுக்­கின்­றன.

அவர்கள் தடு­மா­று­கின்ற போது அல்­லது தடம் மாறு­கின்ற போது, அவர்­களை சரி­யான வழிக்கு கொண்டு வரு­வதில் அல்­லது அவர்­களை மாற்­று­வ­திலும் பௌத்த பீடங்­களே முக்­கிய பங்­காற்­று­கின்­றன.

ஆட்­சி­யா­ளர்கள் தவ­றான வழியில் செல்­லு­கின்ற போது அதனை தடுத்து சரி­யான வழிக்கு கொண்டு வரு­வ­தற்கு மகா சங்­கத்­திற்கு பொறுப்பும் அதி­கா­ரமும் உள்­ள­தாக பௌத்த பீடங்கள் நம்­பு­கின்­றன.

அவ்­வா­றான அதி­காரம் பௌத்த பீடங்­க­ளுக்கு உள்­ள­தாக சிங்­கள பௌத்­தர்­களை நம்ப வைப்­ப­திலும் அவை வெற்றி பெற்­றி­ருக்­கின்­றன.

மகா சங்கம் அல்­லது பௌத்த பீடங்கள் அர­சி­யலில் அல்­லது அரச நிர்­வா­கத்தில் தலை­யி­டு­கின்ற பொழுது அது நியா­ய­மா­னது என்று நம்­பு­கின்ற நிலை­யிலே சிங்­கள பௌத்­தர்கள் இருக்­கி­றார்கள்.

அது நியா­ய­மற்­ற­தாக இருந்­தாலும் கூட, பெரும்­பான்மை சிங்­கள பௌத்­தர்­களால் அது ஏற்றுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

தற்­போ­தைய அர­சாங்­கமும் பௌத்த பீடங்­க­ளுடன் நெருக்­க­மான உற­வையே பேணி வந்­தது.

ஜே.வி.பி. அல்­லது தேசிய மக்கள் சக்தி ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்னர் பௌத்த பீடங்­க­ளுடன் நெருக்­க­மான தொடர்­பு­களை கொண்­டி­ருந்­த­தில்லை.

ஆனால், அதி­கா­ரத்­துக்கு வந்த பின்னர், அதனை தக்க வைத்துக் கொள்­வ­தற்கு பௌத்த பீடங்­களின் தயவு தேவை என்­பதை உணர்ந்து, ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க, மகா­நா­யக்க தேரர்­க­ளுடன் தொடர்ச்­சி­யான சந்­திப்­புக்­களை நடத்தி வந்­தி­ருக்­கிறார்.

புத்­தாண்டு தினத்­தன்று கூட அவர் மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து ஆசி பெற்­றி­ருந்தார்.

அந்த சம­யத்­திலும் கூட, கணக்­காய்­வாளர் நாயகம் பத­விக்கு நிரந்­த­ர­மாக எவரும் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

தற்­கா­லி­க­மாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த தர்­ம­பால கம்­மன்­பி­லவின் பத­விக்கு காலம் கூட நீடிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அந்த சம­யத்தில் மகா­நா­யக்க தேரர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் அந்த விட­யத்தை தனிப்­பட்ட முறையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கலாம். பொருத்­த­மா­ன­வரை நிய­மிக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­யி­ருக்­கலாம்.

இப்­போது வெளிப்­ப­டை­யாக எழு­திய கடி­தத்தின் ஊடாக, அவர்கள் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்க முனைந்­தி­ருக்­கி­றார்கள்.

கணக்­காய்­வாளர் நாயகம் பத­விக்கு தமக்கு நெருக்­க­மான ஒரு­வரை நிய­மிப்­பதன் ஊடாக, அர­சாங்கம் தனது தவ­று­களை மறைக்க முற்­ப­டு­கி­றது என்ற குற்­றச்­சாட்டு இப்­பொ­ழுது வலு­வாக எழுந்­தி­ருக்­கி­றது.

கடந்த கால அர­சாங்­கங்­களை மோச­மாக விமர்­சித்த தேசிய மக்கள் சக்­தியின் ஆட்­சியில் இப்­பொ­ழுது முறை­கே­டுகள், மோச­டிகள் குறித்த குற்­றச்­சாட்­டுக்கள் வரத் தொடங்கி இருக்­கின்­றன.

தர­மற்ற நிலக்­கரி இறக்­கு­மதி குறித்த குற்­றச்­சாட்டு, தர­மற்ற மருந்து இறக்­கு­மதி தொடர்­பான குற்­றச்­சாட்டு, கொழும்பு துறை­மு­கத்தில் இருந்து கொள்­க­லன்கள் விடு­விக்­கப்­பட்­டது தொடர்­பான குற்­றச்­சாட்டு என மூத்த அமைச்­சர்­க­ளுடன் தொடர்­பு­பட்ட பல குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனாலும் அர­சாங்கம் அதனை ஏற்றுக் கொள்­வ­தாக இல்லை. இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கள் உண்மை அல்­லது பொய் என நிரூ­பிப்­ப­தற்கு கணக்­காய்­வாளர் நாயகம் திணைக்­க­ளத்தின் கணக்கு ஆய்வு அறிக்­கைகள் முக்­கி­ய­மா­னவை.

ஆனால், கணக்­காய்­வாளர் நாயகம் பத­விக்கு ஒருவர் இல்­லாத சூழலில் இந்த முறை­கே­டுகள் தொடர்­பான விட­யங்கள் வெளி­வ­ரு­வது தடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அதே­போல இந்த பத­விக்கு தமக்கு நெருக்­க­மான ஒரு­வரை கொண்டு வரு­வதன் ஊடாக, எதிர்­கா­லத்தில் அர­சாங்­கத்தின் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் வரு­கின்ற பொழுது, அதனை மறைப்­ப­தற்கு அல்­லது பாது­காத்துக் கொள்­வ­தற்கு வச­தி­யாக இருக்கும்.

அதன் அடிப்­ப­டை­யி­லேயே கணக்­காய்­வாளர் நாயகம் பத­விக்கு பொருத்­த­மான ஒரு­வரை நிய­மிப்­பதில் இழு­பறி நிலை நீடிக்­கி­றது.

பொருத்­த­மற்­ற­வர்கள் முன்­மொ­ழி­யப்­பட்ட போது, அர­சி­ய­ல­மைப்பு பேரவை அவற்றை நிரா­க­ரித்­தது.

இந்த சூழலில் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் மாற்­றங்கள் இடம்­பெற்­றுள்ள சூழலில், அர­சாங்கம் கணக்­காய்­வாளர் நிய­ம­னத்­திற்கு யாரை முன்­மொ­ழியப் போகி­றது என்று எதிர்­பார்த்­தி­ருந்த சூழலில் தான், மகா­நா­யக்க தேரர்கள் இவ­ரைத்தான் நிய­மிக்க வேண்டும் என அழுத்தம் திருத்­த­மாக கூறி­யி­ருக்­கின்­றனர்.

இது அரச நிர்­வா­கத்தில் பௌத்த பீடங்­களின் முக்­கி­ய­மான தலை­யீ­டு­களில் ஒன்று.

அவர்கள் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தில் தலை­யீடு செய்ய முனை­கின்­றனர் என்­பது வெளிப்­ப­டை­யாக தெரி­கி­றது. இதனை பௌத்த பீடங்­களின் கட­மை­யாக அவர்கள். குறிப்­பி­டு­கி­றார்கள்

கோட்­டா­பய ராஜபக் ஷ அர­சாங்கம் பத­வியில் இருந்த போது, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­பட்­டி­ருந்­தது.

அந்த சம­யத்தில் அமைச்­ச­ர­வையை கலைப்­பது, இடைக்­கால அர­சாங்­கத்தை நிய­மிப்­பது உள்­ளிட்ட ஆறு பரிந்­து­ரை­களை முன்­வைத்து கோட்­டா­பாய ராஜபக் ஷவுக்கு மகா­நா­யக்க தேரர்கள் கடிதம் எழு­தி­னார்கள். அதனை கோட்­டா­பய ராஜபக் ஷ செவி­ம­டுக்­க­வில்லை.

அதன் பின்னர் அவர்கள் மீண்டும் நான்கு பரிந்­து­ரை­களை முன்­வைத்து கடிதம் எழு­தி­னார்கள்.

அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்க தவ­றினால் சங்க சபாவை கூட்­டுவோம் என்றும் அவர்கள் எச்­ச­ரித்­தி­ருந்­தனர்.

அதன் பின்னர் ஏப்ரல் மாதம் சங்க சபா கூட்­டப்­பட்­ட­துடன், பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ பதவி விலக வேண்டும் என்றும் அனைத்து கட்சி அமைச்­ச­ரவை உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

பின்னர் மே மாதம் 9ஆம் திகதி நெருக்­கடி இன்னும் தீவி­ர­ம­டைந்த நிலையில், மகா­நா­யக்­கர்கள் கூட்­டாக எழு­திய கடி­தத்தில், பாரா­ளு­மன்­றத்தை கலைத்து இடைக்­கால அரசு ஒன்றை நிர்­வ­கிக்­கு­மாறு கேட்டுக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றாக காலத்­துக்கு காலம் மகா­சங்­கங்கள் அல்­லது பௌத்த பீடங்கள் அர­சி­யலில் தமது ஆதிக்­கத்தை செலுத்தி வந்­தி­ருக்­கின்­றன.

தற்­போ­தைய அர­சாங்கம் அவ்­வா­றான தலை­யீட்­டுக்கு இட­ம­ளிக்­காத வகையில் மகா­நா­யக்­கர்­க­ளுடன் தொடர்பை பேண முயன்றது.

ஆனால், அரசாங்கத்தின் போக்கில் பௌத்த பீடங்கள் திருப்தி அடையவில்லை.

அது தவறிழைக்கிறது அல்லது தவறு இழைக்க முனைகிறது அல்லது தவறை மறைக்க முற்படுகிறது என்ற சந்தேகம் மகாநாயக்கர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் தான் குறிப்பிட்ட ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறு வலியுறுத்தும் கடிதத்தை கூட்டாக அவர்கள் அனுப்பியுள்ளனர்.

இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சந்திக்கின்ற ஒரு முக்கியமான ஒரு சவால்.

தர்மபால கம்மன்பிலவை நியமிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் அழுத்தம் கொடுத்துள்ள நிலையில், மற்றொருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க முற்படுவது, அரசாங்கத்துக்கும் பௌத்த பீடங்களுக்கும் இடையில் விரிசலை தோற்றுவிக்கும்.

அதேவேளை பௌத்த பீடங்களின் இந்த அழுத்தங்களுக்கு அடிபணிந்தால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீதான இமேஜ் சரிந்து விடும்.

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் விடயத்தில் அரசாங்கம் கையாண்ட தவறோ அணுகுமுறை அதனை நெருக்கடிக்குள் சிக்க வைத்திருக்கிறது.

இதேநிலை சட்ட மா அதிபர் விவகாரத்திலும் கூட ஏற்படலாம்.

-சத்­ரியன்-

Share.
Leave A Reply