அம்பாறை மாவட்டம் கடற்தொழில் பிரதிப் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் ஞாயிற்றுக்கிழமை (08) ஆழ் கடலில் மீன்பிடிக்க செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் அவ்வள்ளம் கடலில் மூழ்கியுள்ளது.
சாய்ந்தமருது நடுத்துறை என்னும் இடத்தில் இருந்து வளமையாக கடலுக்குச் செல்வது வழக்கமாக இருந்த. நிலையில் மீன் பிடி நடவடிக்கைக்காக தயார் நிலையில் வைத்திருந்த. 40 அடி நீளமான வள்ளம் நேற்று காலை கடலில் மூழ்கி காணப்பட்டது. இதன் பெறுமதி 1 கோடி 30 இலட்சம் எனத் தெரியவருகிறது.
இவ் வள்ளமானது சுமார் ஒரு கோடிக்கு மேற்பட்ட பெறுமதி உடையது என வள்ள உரிமையாளர் ஏ ஆர் முபாரிஸ் தெரிவித்தார். இவ்விடயமாக கடத்தொழிலாலாளர்கள் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார்கள்.





