மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றக் கிளையில் விசித்திரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. தனது மனைவியைக் கடத்தியதாகக் கணவர் ஒருவர் தொடுத்த வழக்கிலேயே இந்தத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் விரும்பியே தனது தங்கையின் கணவருடன் சென்றதாகத் தெரிவித்தார்.
இதில் மேலும் ஒரு திருப்பமாக (Twist), அவரது தங்கை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், “தனது கணவர் தனது அக்காவுடன் வாழ்வதில் எனக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை” எனக் கூறினார்.
அத்தோடு நில்லாமல், “நானும் அக்காவின் கணவருடன் தான் வாழப்போகிறேன்” என அவர் கூறியதைக் கேட்டு நீதிமன்றமே அதிர்ச்சியடைந்தது.
இதனைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த நீதிபதி, “இது ஒரு தனிப்பட்ட குடும்ப விவகாரம்” என்று கூறி, கடத்தல் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

