ஸ்பெயின் நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது.
உலகம் முழுவதும் 35 லட்சத்து 23 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 21 லட்சத்து 35 ஆயிரத்து 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 50 ஆயிரத்து 524 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 41 ஆயிரத்து 898 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 394 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது.
அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்துக்கு அடுத்தப்படியாக ஸ்பெயின் நாட்டில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஸ்பெயினில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது.

