இலங்கை பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயல்படுவார் என கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் ஜூலை 9ம் தேதி நடந்த போராட்டத்துக்குப் பிறகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகத் தயார் என தெரிவித்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் 37வது சரத்தின் முதல் பிரிவின் கீழ் இந்த நியமனம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்ததாக இலங்கை அதிகாரிகள் கூறினார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply