கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை ஞாயிற்றுக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடற்கரை சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது.

இந்த செயற்கை கடற்கரைக்கு மேலதிகமாக அதற்கு அருகில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply