மஹவ – நாகொல்லாகம வீதியில் விஹேனேகம சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து, நேற்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.