சுமார் இரண்டரை மாத காலமாக காணாமல்போயுள்ள நபர் ஒருவரை கண்டுபிடிக்க கொட்டதெனியாவ பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா – கொட்டதெனியாவ, மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த மே மாதம் 20 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்திற்கு கடந்த மே மாதம் 22 ஆம் திகதி முறைப்பாடு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள நபரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

காணாமல்போயுள்ள நபரின் விபரங்கள் பின்வருமாறு ;

பெயர் – ரங்கொத் பெட்டிகே பாலித்த புஸ்பகுமார

வயது – 45

முகவரி – கித்துல்வல பட்டதொலவத்த, கொட்டதெனியாவ, மீரிகம

அங்க அடையாளங்கள் – 05 அடி 05 அங்குலம் உயரம்

இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் 071 – 8591634 அல்லது 033 – 2272222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply