அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள  ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்தித்து கடந்த திங்கட்கிழமை (01) மாலை கலந்துரையாடினார்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அம்பாறையிலுள்ள விவசாயிகள் சங்கப் பிரநிதிகளையும் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கி  வரும்  பிரச்சினைகள் குறித்தும்  கேட்டறிந்து கொண்டார்.

மேலும் சஜித் பிரேமதாச அம்பாறை பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

Share.
Leave A Reply