காந்தா

இந்த ஹீரோவின் நடிப்பில் ஒரு படம் வெளிவருவது என்றால் கண்டிப்பாக நல்லா இருக்கும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்றுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.

தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் காந்தா.

1950களில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தை ரிலீஸுக்கு முன் பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். துல்கர் சல்மானின் நடிப்பு, இயக்குநர் இப்படத்தை அமைத்துள்ள விதம் என படம் வேற லெவலில் உள்ளது என அனைவரும் பாசிட்டிவ் விமர்சனம் தெரிவித்துள்ளார்கள்.

Share.
Leave A Reply