வாகரை பொலிஸ் பிரிவின் உரியங்கட்டுவ பகுதியில் உள்ள வீட்டில் 22 வயது இளம்பெண் ஒருவர் நேற்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார். தட்டமுனை பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண், கணவருடன் ஏற்பட்ட தகராறின் போது மின்விசிறி கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணைக்கு பின், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொலை செய்த பிறகு, 25 வயதுடைய கணவர் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

