வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கும் இந்த ஆண்டில் இதுவரை 52,866 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டில், வெளிநாட்டுத் தூதரகக் கிளைகளின் மூலம் 61,229 விண்ணப்பங்கள் பெறப்பட்டதோடு, 59,285 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடவுச்சீட்டு வழங்கும் செயல்முறையில், சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் துல்லியம் சரிபார்க்க வேண்டியிருப்பதால் சில நேரங்களில் அனுமதி வழங்க தாமதம் ஏற்படலாம் என அமைச்சர் விளக்கமளித்தார். இது நாடு ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு மாதத்திற்குள் அனுமதிகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

