நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது 6ஆவது ஊழல் தொடர்பான கோப்பை சமர்ப்பித்ததாகவும், சோலர் பவர் திட்டத்தில் சில தமிழ் எம்.பிக்கள் மீண்டும் தலையிட்டதாகவும் கடுமையாக குற்றம்சாட்டினார். வடக்கில் மின்சாரத் தட்டுப்பாட்டால் மக்கள் வாடுகின்ற நிலையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் ஊழல் தொடர்பான பெரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் தெரிவித்ததாவது,
ஊழல் தொடர்பாக ஏற்கனவே ஐந்து கோப்புகளை சமர்ப்பித்துள்ள நிலையில்,
ஆறாவது முக்கிய ஊழல் கோப்பையும் தற்போது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கிறேன் என குறிப்பிட்டார்.
40 வருடப் போரால் பாதிக்கப்பட்ட இனத்தை இன்னும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்
அர்ச்சுனா தனது உரையில் உணர்ச்சி வசப்பட்டு,
-
“40 வருடம் போரால் அழிந்த இனத்தை சில கட்சிகளே இன்னும் திரும்பத் திரும்ப அழிக்கின்றன”
-
“ஆளுமை இல்லாத அரசியல் முடிவுகள் மக்களின் வாழ்வை இன்னும் நாசமாக்குகிறது”
என்றும் கடுமையாக சாடினார்.
ரணில் அரசின் சோலர் பவர் திட்டம் – இந்திய கம்பனி பின்னணி
அவர் மேலும் கூறியதாவது:
-
2024 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் சோலர் பவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது
-
இந்த திட்டத்தை ஒரு இந்திய கம்பனி முன்னெடுத்தது
-
அந்த கம்பனியைச் சுற்றி இருந்த வழக்குகள் நீதிமன்றத்தில் தீர்ந்த பின்னரும்
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் நேரடியாக தலையிட்டு திட்டத்தை முன்னெடுத்ததாக குற்றம்சாட்டினார்
வடக்கில் மின்சார தட்டுப்பாடால் மக்கள் துன்பம்
அர்ச்சுனா குறிப்பிடுகையில்:
-
“முல்லைத்தீவு, கிளிநொச்சி, பூநகரி மக்கள் மின்சாரம் பெறுவதற்கே எவ்வளவு துன்பப்படுகிறார்கள்”
-
“அந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியவர்கள் ஊழல் திட்டங்களில் கைகோர்க்கிறார்கள்”
என்று ஆவேசமாக கூறினார்.
நாடாளுமன்றத்தில் எல்லை மீறும் பேச்சு – எதிர்க்கட்சிகளின் அதிருப்தி
அர்ச்சுனாவின் உரை பல இடங்களில் அதிக செறிவாகவும் நேரடியாகவும் இருந்ததால்,
மேலும் சில எம்.பிக்களை நேரடியாக குறிவைத்து பேசினார் என்பதால்,
அமர்வில் எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின்றன.

