மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் தற்­போது நிலவி வரும் போர் வெறும் பிராந்­திய மோத­லாக மட்டும் சுருங்­கி­வி­டாமல், ஒட்­டு­மொத்த உலக நாடு­களின் பொரு­ளா­தார நிலைத்­தன்­மைக்கும் பெரும் அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்­ளது.

இந்தப் போரின் தீவி­ரமும், இது இன்னும் எத்­தனை நாட்­க­ளுக்கு நீடிக்­கப்­போ­கி­றது என்­பதும்தான் வருங்­கால உலகப் பொரு­ளா­தா­ரத்தின் திசையைத் தீர்­மா­னிக்கப் போகின்­றன.

தற்­போது இலங்­கையில் எரி­பொ­ருட்­கள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதி­க­ரித்­துள்­ளன. இது பொருட்­களின் விலைகள், சேவைக் கட்­ட­ணங்­களில் அதி­க­ரிப்பை ஏற்­ப­டுத்­து­வ­துடன் மக்­க­ளுக்கே வாழ்க்கை சுமையை அதி­க­ரிப்­ப­தாக அமையும்.

கடந்த காலங்­களில் மிக மோச­மான பொரு­ளா­தார நெருக்­க­டி­களைச் சந்­தித்து, தற்­போது மெல்ல மெல்ல மீண்டு வர முயற்­சிக்கும் இலங்­கையைப் போன்ற நாடு­க­ளுக்கு, மத்­திய கிழக்கு போர் வடுக்கள் மீண்டும் ஒரு கறுப்பு நிழலைப் படியச் செய்­துள்­ளன.

இன்னும் இரண்டு அல்­லது மூன்று வாரங்­க­ளுக்கு இந்த யுத்தம் இதே வேகத்தில் தொட­ரு­மானால், இலங்கை மீண்டும் ஒரு பாரிய பொரு­ளா­தார முடக்­கத்தைச் சந்­திக்க வேண்­டி­யி­ருக்கும் என்­பது கசப்­பான உண்­மை­யாகும்.

விநி­யோகச் சங்­கிலி முடக்கம்

மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு இடையே நிலவும் நேரடி மோதல்கள், சர்­வ­தேச வர்த்­தகப் பாதை­களில் பெரும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

குறிப்­பாக, ஈரானின் கட்­டுப்­பாட்டில் உள்ள கடல் வழித்­த­ட முடக்கங்கள் உல­க­ளா­விய விநி­யோகச் சங்­கி­லியைச் சீர்­கு­லைத்­துள்­ளன.

இலங்­கையின் பிரத்­தி­யேக பொருளாதார கடல் எல்­லைக்­குள்­ளேயே ஈரா­னியக் கப்பல் ஒன்றின் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல், இந்தப் போர் எமது அண்மைய எல்லைவரை வந்­து­விட்­டதைக் காட்­டு­கி­றது. இத்­த­கைய சூழல் கப்பல் போக்­கு­வ­ரத்தில் தாம­தத்­தையும், காப்­பு­றுதிச் செலவு அதி­க­ரிப்­பையும் ஏற்­ப­டுத்தி, இறு­தியில் நுகர்வோர் மீதான விலை­யேற்­ற­மாக உரு­வெ­டுக்­கி­றது.

ஹோர்முஸ் நீரிணை நெருக்­கடி

உல­க­ளா­விய எரி­பொருள் விநி­யோ­கத்தில் ஈரானின் கட்­டுப்­பாட்டிலுள்ள ‘ ஹோர்முஸ் நீரிணை’ மிக முக்­கி­ய­மான ஒரு கேந்­திர நிலை­ய­மாகும்.

தற்­போது நிலவும் போர் கார­ண­மாக இந்தப் பாதை தற்­கா­லி­க­மாக முடக்­கப்­பட்­டி­ருப்­பது, உலக நாடு­க­ளுக்கு விடப்­பட்ட பெரும் சவா­லாகும்.

உல­க­ளா­விய எரி­பொருள் தேவையில் இரு­பது சத­வீதப் போக்­கு­வ­ரத்து இந்தப் பாதை­யி­லேயே தங்­கி­யுள்­ளது. ஈரான் ஒரு சில கப்­பல்­க­ளுக்கு மட்டும் நிபந்­த­னை­க­ளுடன் அனு­மதி வழங்­கி­னாலும், பெரும்­பா­லான சரக்குக் கப்­பல்கள் மாற்றுப் பாதை­களைத் தேடி அலை­கின்­றன.

இது எரி­பொருள் விலையைச் சர்­வ­தேசச் சந்­தையில் பன்­ம­டங்கு உயர்த்த வழி­வ­குக்கும். தற்­போது சர்­வ­தேச சந்­தையில் எரி­பொ­ருட்­களின் விலைகள் 100 டொலர்­களை தாண்­டி­யுள்­ளன.

பின்னர் குறிப்பிட்ட வீதத்தில் குறைந்தது. இந்த பின்னணிலேயே இலங்­கை­யிலும் எரி­பொ­ருட்­களின் விலைகள் அதி­க­ரித்­துள்­ளன.

சிங்­கப்பூர், இந்­தியா மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகள் இந்தப் பாதை­யையே பெரிதும் நம்­பி­யுள்­ளன. இந்­தியா தனது மொத்த எரி­பொருள் இறக்­கு­ம­தியில் முப்­பது சத­வீ­தத்தை இந்த வழி­யா­கவே பெறு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கைக்கு ஏற்­படும் நெருக்­கடி என்ன?

இலங்கை நேர­டி­யாக ஹோர்முஸ் நீரிணை வழி­யாக எரி­பொ­ருளைப் பெறா­விட்­டாலும், எரி­பொ­ரு­ளுக்­காகச் சார்ந்­தி­ருக்கும் இந்­தியா மற்றும் சிங்­கப்பூர் ஆகிய நாடுகள் அந்தப் பாதை­யையே நம்­பி­யுள்­ளன.

அந்த நாடு­களில் எரி­பொருள் தட்­டுப்­பாடு அல்­லது விலை உயர்வு ஏற்­படும் போது, அங்­கி­ருந்து சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட எரி­பொ­ருளைப் பெறும் இலங்­கையும் நிச்­ச­ய­மாகப் பாதிக்­கப்­படும்.

அடுத்த சில வாரங்­க­ளுக்குப் போர் நீடித்தால், இலங்­கையில் எரி­பொ­ரு­ளுக்குத் தட்­டுப்­பாடு ஏற்­ப­டு­வ­துடன், விலையும் கணி­ச­மாக உயரும் நிலமையே நீடிக்கிறது.

எரி­பொருள் என்­பது ஒரு நாட்டின் பொரு­ளா­தாரத் தேரின் அச்­சாணி போன்­றது. அதன் விலை­யேற்றம் போக்­கு­வ­ரத்து, மின்­சாரம், கல்வி, மருத்­துவம் மற்றும் உற்­பத்தித் துறை­களில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி, மக்­களின் அன்­றாட வாழ்வைச் சுமை­மிக்­க­தாக மாற்றும்.

எரி­பொருள் விலை உயரும் போது, அது நாட்டின் ஒட்­டு­மொத்த உற்­பத்திச் செலவை அதிகரிக்கச் செய்யும். விவ­சாயம், மீன்­பிடி, கைத்­தொழில் மற்றும் சேவைத் துறைகள் அனைத்தும் எரி­பொ­ரு­ளி­லேயே தங்­கி­யுள்­ளன.

விவ­சா­யி­க­ளுக்குத் தேவை­யான உரம் உள்­ளிட்ட உள்­ளீ­டுகள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வதால், நாட்டின் உணவுப் பாது­காப்­பிற்கே அச்­சு­றுத்தல் ஏற்­ப­டலாம்.

போக்­கு­வ­ரத்துச் செல­வுகள் அதி­க­ரிக்கும் போது சந்­தையில் உணவுப் பொருட்­களின் விலையும், மருந்துப் பொருட்­களின் விலையும் ஏழை எளிய மக்­களின் எட்­டாக்­க­னி­யாக மாறும். இது பொது­வான பண­வீக்­கத்தை மட்­டு­மன்றி, உணவுப் பண­வீக்­கத்­தையும் மிக உய­ரிய நிலைக்குக் கொண்டு செல்லும் அபாயம் உள்­ளது.

சுற்­று­லாத்­துறை

அந்­நியச் செலா­வணி

இலங்­கையின் அந்­நியச் செலா­வணி வரு­வாயில் சுற்­று­லாத்­துறை மிக முக்­கிய பங்கு வகிக்கிறது.

ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து வரும் சுற்­றுலாப் பய­ணிகள் பெரும்­பாலும் மத்­திய கிழக்கு வான்­வ­ழி­யா­கவும், அந்தப் பகுதி விமான நிலை­யங்கள் ஊடா­க­வுமே இலங்கை வரு­கின்­றனர்.

போர் கார­ண­மாக வான்­வழிப் போக்­கு­வ­ரத்துப் பாதைகள் மாற்­றப்­ப­டு­வதும், விமான நிலை­யங்கள் முடக்­கப்­ப­டு­வதும் சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கையை வெகு­வாகக் குறைத்துள்ளது.

கடந்த ஆண்டில் சுற்­று­லாத்­துறை மூலம் ஈட்­டப்­பட்ட வரு­மானம் நாட்டின் பொரு­ளா­தார மீட்­சிக்கு பெரும் உத­வி­யாக இருந்­தது.

ஆனால், தற்­போ­தைய பதற்றம் டொலர் உள்­வ­ரு­கையைக் கடு­மை­யாகக் குறைத்து, இலங்­கையின் அந்­நியச் செலா­வணி கையி­ருப்பைச் சரி­வ­டையச் செய்யும். மத்­திய வங்­கியின் தக­வ­லின்­படி 2025 இல் இலங்கை சுற்­றுலாத்துறை ஊடாக 3.7 பில்­லியன் டொலர்­களை ஈட்­டி­யது.

மேலும் இலட்­சக்­க­ணக்­கான இலங்­கை­யர்கள் மத்­திய கிழக்கு நாடு­களில் பணி­பு­ரிந்து வரு­கின்­றனர். அவர்கள் ஆண்­டு­தோறும் அனுப்பும் பில்­லியன் கணக்­கான டொலர்கள்தான் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தைத் தாங்கிப் பிடிக்­கின்­றன.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் ஊடாக 2025இல் 7 பில்­லியன் டொலர்கள் இலங்­கைக்கு வந்­துள்­ளன.

போர்க்­காலச் சூழலில் அந்த நாடுகளில் வேலை­வாய்ப்­புகள் குறை­யலாம் அல்­லது அங்­கி­ருந்து இலங்­கை­யர்கள் வெளி­யேற வேண்­டிய சூழல் உரு­வா­கலாம்.

இது அந்­நியச் செலா­வணி வரு­கையைக் குறைப்­ப­துடன், நாட்டில் வேலை­யில்லாத் திண்­டாட்­டத்­தையும் அதி­க­ரிக்கும். சுற்­றுலா வரு­மானம் மற்றும் வெளி­நாட்டுப் பணப்­ப­ரி­மாற்றம் ஆகிய இரண்­டுமே ஒரே நேரத்தில் பாதிக்­கப்­ப­டு­வது இலங்கைப் பொரு­ளா­தா­ரத்தைச் சங்­கிலித் தொடர் நெருக்­க­டிக்குள் தள்­ளி­விடும்.

ஏற்­று­மதித் துறையில் ஏற்­படும் சரிவு

மத்­திய கிழக்கு நெருக்­க­டியால் எரி­பொருள், எரி­வாயு விலை உயர்வு உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் ஐரோப்­பிய மற்றும் அமெ­ரிக்க நாடு­களில் வாழ்க்கைச் செலவு அதி­க­ரிக்கும் போது, அங்­கி­ருக்கும் மக்­களின் கொள்­வ­னவுத் திறன் குறையும்.

இது இலங்­கை­யி­லி­ருந்து ஏற்­று­மதி செய்­யப்­படும் ஆடை மற்றும் ஏனைய உற்­பத்திப் பொருட்­க­ளுக்­கான தேவையை வீழ்ச்­சி­ய­டையச் செய்யும். குறிப்­பாக, ஆடை ஏற்­று­மதி மூலம் கிடைக்கும் பெரும் வரு­மானம் போர் கார­ண­மாகக் குறைய வாய்ப்­புள்­ளது.

அதே­போன்று தேயிலை ஏற்­று­ம­தியும் பாதிக்­கப்­ப­டலாம். இலங்­கைக்கு வருடம் ஒன்­றுக்கு கிட்­டத்­தட்ட 2 பில்­லியன் டொலர்கள் தேயிலை ஏற்­று­ம­தியில் கிடைக்­கி­றது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படும். சர்­வ­தேசச் சந்­தையில் எரி­பொருள் விலை உயர்வால் உற்­பத்திச் செலவு அதி­க­ரிப்­பதும், அதேசமயம் விற்­பனை குறை­வதும் இலங்கை ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்குப் பெரும் நட்­டத்தை ஏற்­ப­டுத்தும். இது நாட்டின் வர்த்­தகப் பற்­றாக்­கு­றையை மேலும் விரி­வ­டையச் செய்யும்.

ஏற்­க­னவே பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­களின் உத­வி­யுடன் மீண்டு வரும் இலங்கை, வரும் ஆண்­டு­களில் வெளி­நாட்டுக் கடன்­களைத் திருப்பிச் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர் தனனாத் பெர்னாண்டோ இந்­நே­ரத்தில் டொலர் வரு­மானம் குறைந்தால், கடனைத் திருப்பிச் செலுத்­து­வதில் சிக்­கல்கள் எழும்.

இது டொல­ருக்கு நிக­ரான ரூபாவின் மதிப்பை மீண்டும் வீழ்ச்­சி­ய­டையச் செய்யும். ரூபாவின் மதிப்பு குறையும் போது இறக்­கு­மதி செய்­யப்­படும் எரி­பொருள், மருந்து மற்றும் உணவுப் பொருட்­களின் விலை மேலும் உயர்ந்து, வாழ்க்கைச் செலவு உயரும் இது தொடர்பில் அவதானம் அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்­த­கைய இக்­கட்­டான சூழலைச் சமா­ளிக்க அர­சாங்கம் மிகவும் விவே­க­மா­கவும், விரை­வா­கவும் செயற்­பட வேண்டும்.

பொரு­ளா­தார நிபு­ணர்­களைக்கொண்ட உயர்­மட்டக் குழுக்­களை அமைத்து, வர­வி­ருக்கும் சவால்­களை முன்­கூட்­டியே கணிக்க வேண்டும்.

எரி­பொருள் சிக்­கனம் குறித்த விழிப்­பு­ணர்வை மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­து­வ­துடன், கையி­ருப்பில் உள்ள டொலர்களைச் சரியான முன்னுரிமை அடிப்படையில் நிர்வகிப்பது முக்கியமாகும். அத்தியாவசியத் தேவைகளான உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கு எவ்விதத் தடையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் முதன்மைக் கடமையாகும்.

மத்திய கிழக்கு போர் என்பது சர்வதேசப் பிரச்சினை என்றாலும், அதன் பொருளாதாரத் தாக்கங்கள் உள்ளூர் மட்டத்தில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தக் கூடியவையாக உள்ளன.

2022 ஆம் ஆண்டு சந்தித்த கசப்பான அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, இலங்கை இந்த நெருக்கடியைத் திறம்படக் கையாள வேண்டும்.

முறையான திட்டமிடல், சிக்கனமான செலவீனம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய மேலாண்மை இருந்தால் மட்டுமே, மீண்டும் ஒரு பொருளாதாரப் படுகுழியில் விழுவதிலிருந்து நாட்டைப் பாதுகாக்க முடியும். இந்தப் போர்க் காலத்தில் அரசாங்கம் எவ்வளவு நுட்பமாக மூலோபாய ரீதியில் செயற்படுகிறது என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது.

ரொபட் அன்டனி

Share.
Leave A Reply