இலங்கையின் சுற்றுலா உட்கட்டமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நேற்று (28.04.2026) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வரும் சிவனொளிபாத மலை மற்றும் எல்ல ஆகிய சுற்றுலாத் தலங்களில் கேபிள் கார் (Cable Car) கட்டமைப்புகளை நிறுவுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை (Feasibility Studies) முன்னெடுப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அறிக்கைகளைப் பெறுவதற்கும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 25-ஆம் திகதி முதல் 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு விசா இல்லாத பயண வசதியை (Visa-free entry) அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், யால உள்ளிட்ட 19 தேசிய பூங்காக்களில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகளை நீக்கி, நவீன கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் கொள்ளுப்பிட்டி முதல் கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய ஒரு பிரத்யேக சுற்றுலா வலயத்தை (Dedicated Tourism Zone) உருவாக்கி, அதன் மூலம் நாளொன்றுக்குச் சுமார் 3,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் சுற்றுலாப் பணிக்குழு இலக்கு நிர்ணயித்துள்ளது.

Share.
Leave A Reply