“பல நாள் அண்ணன் என்னிடம் தவறாக பழகினான். சரி என்று அப்பாவிடம் இதுபற்றி கூற அப்பாவும் என்னிடம் அதே பாணியில் தவறாக பழக ஆரம்பித்தார்” என்று தனக்கு நடந்த அனைத்தையும் தனது தாயிடம் அழுது புலம்பினாள்.

இன்று அவள் வயிற்றில் வளரும் குழந்தை அண்ணனுடைய குழந்தையா? தந்தையுடைய குழந்தையா? என்று தெரியாத நிலையில் திலினியும் ஒரு குழந்தையை சுமக்கின்றாள்.

“அப்­பாடா ஒரு­வா­றாக இன்­றைய பொழுது கழிந்து விட்­டது. மீண்டும் நாளை இதே போராட்டம் எங்கள் வீட்டில் தொட­ரத்தான் போகின்­றது.

நாளுக்கு நாள் அதி­க­ரித்து செல்லும் வாழ்க்கை செல­வு­களை என்னால் சமா­ளிக்க முடி­ய­வில்லை. ஒரு பக்கம் நகைகள் அனைத்­துமே அடகு வைக்­கப்­பட்டு மீட்க முடி­யாத நிலை­யி­லுள்­ளன.

அடுத்த பக்கம் எங்­க­ளுக்­கென்று உள்ள இந்த வீடும் முத­லா­ளி­யிடம் வட்­டிக்கு அட­கி­லுள்­ளது. அது எல்லா­வற்­றையும் விட ஆசை­யா­சையாய் பெற்­றெ­டுத்த என்­னு­டைய இரு பிள்­ளை­களும் பசி­யாற சாப்­பிட்டு எத்­தனையோ நாட்கள் ஆகிவிட்டன.

எனவே எங்கள் குடும்­பத்­துக்கு ஒரு விடிவு வர வேண்டும் என்றால் நான் இரண்டு வரு­டத்­துக்கு வெளிநாட்­டுக்கு சென்று பணம் சம்­பா­திப்­பது மட்­டுமே ஒரே வழி.

இரண்டு வரு­டங்கள் அங்கு கஷ்­டப்­பட்டால் இங்கு இருக்கும் பிரச்­சி­னைகள் அனைத்­தையும் தீர்ந்து விட்டு நிம்­ம­தி­யாக இருக்­கலாம்”

என்ற தன்­னு­டைய முடி­வினை தன் கண­வ­ரிடம் தெரி­வித்து வெளி­நாட்டு பய­ணத்­துக்­காக ஆயத்தமாகினாள் விம­லாவதி. (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.)

கணவன், இரு பிள்­ளைகள் என்ற விம­லா­வ­தியின் குடும்­பத்தில் வறுமை தலை விரித்­தா­டி­யது. கணவன் லக்மால் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) நாட் கூலி சம்­ப­ளத்­துக்கு வேலைக்கு சென்று வந்தான்.

அதுவும்  ஒவ்­வொரு நாளும் வேலை கிடைக்­க­வில்லை. பிள்­ளைகள் இரு­வர்­களில் மூத்­தவன் நிரோஷ், கல்வி பொதுத்­தராதரப் பரீட்சை எழு­திய போதும் உயர்­த­ரத்தை தொடரும் அள­வுக்கு பெறுபேறுகள் போதாமை கார­ண­மாக வீட்­டி­லேயே இருந்­து­விட்டான்.

இளை­யவள் திலினி ஒன்­பதாம் தரத்தில் கல்வி கற்­கின்றாள். இந்­நி­லையில் தான் விம­லா­வதி தனது குடும்­பத்தின் நன்­மையைக் கருத்­திற்­கொண்டு ஊரி­லுள்ள தரகர் ஒரு­வரின் மூலம் பல்­வேறு கனவுகளை சுமந்­த­வாறு குவைத் நகரை நோக்கி பய­ண­மானாள்.

அதன்­படி அங்­குள்ள முத­லாளி ஒரு­வரின் வீட்டில் பணிப்­பெண்­ணாக பணி­பு­ரிய ஆரம்­பித்தாள். அவளின் அதிஷ்­டமோ என்­னவோ அவள் சென்ற வீட்டின் எஜ­மானி விம­லா­வ­தியை தனது குடும்­பத்தில் ஒரு­வரை போல் பார்த்­துக்­கொண்டாள்.

எனவே விம­லா­வதி நேரத்­துக்கு இலங்­கை­யி­லி­ருக்கும் தனது குடும்­பத்தின் செல­வு­க­ளுக்கு பணத்தை அனுப்­பி­ய­துடன், அடிக்­கடி அவர்­க­ளுடன் தொலை­பே­சி­யிலும் தொடர்புக் கொண்டாள்.

ஆயினும் சில மாதங்­களின் பின் நிலைமை தலை­கீ­ழாக மாறி­யது. இலங்­கையில் வசிக்கும் தனது கணவ­ரி­டமும் , பிள்­ளை­க­ளி­டமும் இருந்து எந்த தக­வல்­களும் வர­வில்லை.

அவர்­க­ளுடன் தொலைபே­சியில் தொடர்புக் கொள்ள முயற்­சிக்கும் ஒவ்­வொரு தட­வையும் பாவ­னை­யா­ள­ரி­ட­மி­ருந்து பதி­லேதும் கிடைக்கவில்லை என்ற வாடிக்­கை­யாளர் சேவை நிலை­யத்தின் பதில் மட்­டுமே கிடைக்­கப்­பெற்­றது. எனவே விம­லா­வதி கதி கலக்கி போனாள்.

தனது உற­வு­களை பிரிந்து சோகங்­களை சுகமாய் ஏற்று வந்­த­வ­ளுக்கு கணவன், பிள்­ளை­க­ளுடன் தொலை­பே­சியில் உரை­யா­டு­வது மட்­டுமே ஒரே ஆறு­த­லா­க­வி­ருந்­தது.

அதுவும் இப்­போது இல்லை என்­பதை அவளால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. எனவே இலங்கையில் வசிக்கும் தனது தங்­கை­யுடன் தொடர்­பினை ஏற்­ப­டுத்தி “நான் எனது கண­வ­ருக்கு தொலை­பேசி அழைப்பை  ஏற்­ப­டுத்த பல­முறை முயற்சி செய்தேன்.

ஆனால், தொலை­பேசி நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களும் எனக்கு அழைப்பை ஏற்படுத்தவில்லை. ஆகவே நீ எங்கள் ஊருக்கு சென்று வீட்டின் நிலை­மையை பார்த்து எனக்கு தெரிவிப்­பாயா? “என்று விமா­ல­வதி தன் தங்­கை­யிடம் கெஞ்சி மன்­றா­டினாள்.

அதன்­படி விம­லா­வ­தியின் தங்கை அக்­காவின் வீட்­டுக்கு சென்ற போது அவளின் கண­வரை வாசலிலேயே சந்­திக்­கின்றாள்.

குடி­வெ­றியில், நாற்­ற­மான சாராயப் போத்­தலை கையில் ஏந்­திய­வாறு வரு­கின்றான்.

எனவே அவ­னிடம் கதைக்க விரும்­பாமல் நேராக வீட்­டுக்குள் சென்று  பிள்­ளை­களை பார்ப்போம் என்று வீட்­டுக்குள் செல்ல முயற்­சித்­த­வளை விம­லா­வ­தியின் கணவர் வழி­ம­றுத்து “எங்கு செல்­கின்றாய் இங்கு எவளும் வர தேவை­யில்லை. என்று” வாயி­லி­ருந்து வெளி­வந்த எல்லா கெட்ட வார்த்­தை­க­ளாலும் தீட்­டித்­தீர்த்தான்.

எனவே அவன் எதையோ மறைக்க தான் வீட்­டுக்குள் போக­வி­டாமல் தடுக்­கின்றான் என்­பதை புரிந்­துக்­கொண்ட அவள் அக்கம் பக்­கத்­தி­லி­ருந்­த­வர்­க­ளிடம் சென்று விசா­ரிக்­கின்றாள்.

அப்­போது தான் ஊரார் தெரி­வித்த தக­வல்­களின் படி விம­லா­வ­தியின் மகள் திலினி 6 மாதங்­க­ளாக வெளியில் வர­வில்லை. தந்­தையும், மகனும் சேர்ந்து பிள்­ளையை ஏதோ செய்து விட்­டார்கள் என்­பது தெரி­ய­வந்­தது.

அதன்பின் அவள் நடந்த அனைத்­தையும் முழு­மை­யாக தனது அக்கா விம­லா­வ­தி­யிடம் கூறாமல். “நீ உட­ன­டி­யாக இலங்­கைக்கு வா வீட்டில் ஏதோ அசாம்­ப­விதம் நடந்­துள்­ளது போல் தெரி­கின்­றது” என்று தெரி­வித்தாள்.

அதன்­படி விம­லா­வதி தனது குவைட் எஜ­மா­னி­யிடம் நான் உட­ன­டி­யாக இலங்­கைக்கு போக வேண்டும் என அனு­மதி கேட்டாள்.

அவளும் தனது சொந்த பணத்தில் விம­லா­வ­திக்கு விமான பயண சீட்­டினையும் எடுத்துக் கொடுத்து, கையோடு சம்­பள பணத்­துக்கு மேல­தி­க­மா­கவும் சிறிது பணத்­தையும் கொடுத்து அனுப்­பினாள்.

எனவே மீண்டும் குவைட்­டி­லி­ருந்து தனது வீட்­டுக்குச் சென்ற போது வீட்டில் ஆங்­காங்கே சிகரட் துண்­டு­களும், பழைய சாராயப் போத்­தல்­களும் கிடந்­தன.

தொடர்ந்து வீட்­டினுள் நுழைந்­த­வ­ளுக்கு வீட்டின் அடுப்­பங்­க­ரையில் தான் உயிர் கொடுத்து உரு­வாக்­கிய ஆசை மகள், இன்­னு­மொரு உயிரை சுமந்­த­வளாய் வயிற்றில் குழந்­தை­யோடு இருந்தாள். விம­லா­வதி அதிர்ச்­சியில் உறைந்து போனாள்.

தனது ஆசை மகளை கட்­டி­ய­ணைத்து “இது என்­னம்மா கோலம். இதற்­கா­கவா இத்­தனை நாள் கஷ்­டப்­பட்டேன். உனது இந்த நிலை­மைக்கு காரணம் யார்? என்று கேட்டாள்.

அதற்கு அவளோ “பல நாள் அண்ணன் என்­னிடம் தவ­றாக பழ­கினான். சரி என்று அப்­பா­விடம் இது­பற்றி கூற அப்­பாவும் என்­னிடம் அதே பாணியில் தவ­றாக பழக ஆரம்­பித்தார்” என்று தனக்கு நடந்த அனைத்­தையும் தனது தாயிடம் அழுது புலம்­பினாள்.

இன்று அவள் வயிற்றில் வளரும் குழந்தை அண்­ண­னு­டைய குழந்­தையா? தந்­தை­யு­டைய குழந்­தையா? என்று தெரி­யாத நிலையில் திலினியும் ஒரு குழந்தையை சுமக்கின்றாள்.

இந்த நிலையில் தந்தையும், சகோதரனும் சிறை வாசம் அனுபவித்து வருகின்றார்கள். எனவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பல பெண்களின் குடும்ப வாழ்க்கையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணமே உள்ளன.

இந்நிலையில் சில சம்பவங்கள் வெளிவந்த நிலையில் பல சம்பவங்கள் நான்கு சுவர்களுக்குள்ளேயே புதைக்கப்பட்டு விடுகின்றன என்பதே உண்மை.

Share.
Leave A Reply