டமாஸ்கஸ்: சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மக்களை ஈவு இரக்கம் இன்றி கொலை செய்வதற்கு பெயர் போனவர்கள்.

இந்நிலையில் அந்த அமைப்புக்கு எதிரான ஏமனைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவர் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை தரையில் வரிசையாக குப்புற படுக்க வைத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கியால் மிருகத்தனமாக சுட்டுக் கொலை செய்யும் பாதக செயல் அந்த வீடியோவில் உள்ளது.

அந்த வீடியோ 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிரியாவில் உள்ள தக்பா விமானப்படை தளம் அருகே எடுக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

வீடியோவை பார்த்த உலக மக்கள் கோபம் அடைந்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் என்று பலர் கொந்தளித்துள்ளனர்.

தீவிரவாதிகள் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொலை செய்துள்ளனர்.

முன்னதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 1, 700 ஈராக் ராணுவ அதிகாரிகளை இரவு பகலாக கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2E45F4BE00000578-3310486-image-a-57_14470826635242E45F4D400000578-3310486-image-a-58_14470826655142E45F4E000000578-3310486-image-a-59_14470829158832A77D50E00000578-3158173-image-a-21_14367065947700DDCB6E000000514-3310486-image-a-61_1447083878578in this photograph, a group of Syrian government soldiers are detained before their execution in the ancient Roman amphitheatre in Palmyra

2E45F47500000578-0-image-a-49_1447082473059

 An ISIS militant starts firing at point blank range at a group of captured Assad troops after the jihadi group overran Tabqa airbase in August 2014

Share.
Leave A Reply