கொரனோ வைரஸ் குணமாக குறிப்பிட்ட ஒரு யோகா செய்தால் போதும் என சென்னையில் யோகா டீச்சர் கூறிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முகுந்தி என்ற யோகா டீச்சர், தன்னிடம் கொரனோ தாக்குதலை கட்டுப்படுத்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட யோகாசனம் ஒன்று உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 3 ஆண்டுகளாக யோகா மூலம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறினார்.
இதனை அடுத்து ‘சலப்பாசனம்’ என்ற யோகாவை 5 நாட்கள் செய்தால் கொரனோ வைரஸ் தாக்கவே தாக்காது என்றும், கேன்சர், எய்ட்ஸ் போன்ற நோயாளிகளை கூட இந்த யோகாவால் குணப்படுத்த முடியும் என அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
அப்போது இதனை எப்படி நிரூபிக்க முடியும் என பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். உடனே தனது கணவரை குப்புற படுக்க வைத்து ஒரு யோகசனத்தை செய்து காட்டியுள்ளார்.
பின்னர் ஒரு சிட்டிங்கிற்கு 3 ஆயிரம் ரூபாய் செலவாகும் என பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கொரனோ வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என அறிவித்துள்ளது.
மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் ஊத்தாப்பம் சாப்பிட்டால் கொரனோ வைரஸ் குணமாகும் என ஹோட்டல் ஒன்று அறிவிப்பு பலகை வைத்தது குறிப்பிடத்தக்கது.