புஸ்ஸல்லாவ நீவ் மெல்போட் தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் திவியராஜன் (வயது 23) என்ற இளைஞன் நேற்று (2) இரவு வீட்டில் யாரும் இல்லாத வேலையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று (03) காலையில் தந்தை உறவினர் வீட்டுக்குச் சென்று வீடு திரும்புகையில் இவர் தூக்கில் தொங்கியதை கண்டுள்ளார். பின் அயலவர்களின் உதவியுடன் புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் குறித்த இளைஞன் கொண்டு செல்வதற்கு முன்னதாக இவர் இறந்துள்ளார். பின் சடலம் பிரேத அறையில் வைக்கபட்டு பிரேத பரிசோதகரின் பிரேத பரிசோதனை¸ புஸ்ஸல்லாவ பொலிஸ் விசாரணை மற்றும் வாக்கு மூலங்களின் பின்னர் பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
சடலம் நாளை (4) நல்லடக்கம் செய்யபடும். இந்த தற்கொலைக்கு காதல் தான் காரணம் என சந்தேகிக்கபடுகின்றது. மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.