அசல் – நகல் பிரச்­சி­னைகள் எல்­லாத்­ து­றை­க­ளிலும் விஸ்­வ­ரூபம் எடுக்­கத்­தொ­டங்­கி­யுள்­ளன. குறிப்­பாக, அசலை ஒத்த போலிகள் மக்கள் மத்­தியில் அவர்­களை அறி­யா­ம­லேயே பர­வ­ல­டையும் நிலையில் அது தொடர்பில் விழிப்­பாக  இருக்­க­வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்நிலையில் தான்  மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்­க­விடம் வந்த ஒருவர் இலட்­சக்­க­ணக்­கான நாண­யத்­தாள்கள் காணாமல் போய்விட்ட­தாக முறை­யிட்டார்.

ஆம், இலங்கை மற்றும் வெளிநாட்டு நாண­யத்­தாள்­களை அச்­சிடும் அச்­ச­கத்தின் பாது­காப்புப் பிரி­வுக்குப் பொறுப்­பா­ன­வரே இவ்­வாறு  பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறை­யிட்டவராவார்.

அதா­வது, தமது அச்­ச­கத்தில் அச்­சி­டப்­பட்ட 500 ரூபா நாண­யத்­தாள்கள் காணாமல்போயுள்­ளன என்­பதே அந்த முறைப்­பா­டாகும்.

முறைப்­பாடை தொடர்ந்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் விசா­ர­ணை­களை கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வுக்கு கைய­ளித்தார்.

குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பதில் பணிப்­பாளர் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் நுவான் வேதி­சிங்­கவின் விஷேட ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய விசா­ர­ணைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டன.

விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொலி­ஸா­ருக்கோ அதிர்ச்­சியே காத்­தி­ருந்­தது. ஏனெனில், இலங்­கையின் பொரு­ளா­த­ரத்தை அல்­லது சீரான நாணய சுற்­றோட்­ட­தையே பாதிக்கச் செய்யும் செயற்­பாடு மேற்கொள்ளப்பட்­டுள்­ள­மையும் அதுவும் 125 பாது­காப்பு கண்­கா­ணிப்பு கமெ­ராக்­களை தாண்டி அந்த திருட்டு இடம்­பெற்­றி­ருப்­ப­துமே அதற்­கான கார­ண­மாகும்.

அத்­துடன் வெளி நாட்டு, உள் நாட்டு நாண­யத்­தாள்­களை அச்­சிடும் குறித்த அச்­ச­கத்தில் இடம்­பெற்­றுள்ள அந்தத் திருட்­டா­னது இலங்­கையின் வர­லாற்றில் அவ்­வா­றா­ன­  தொரு இடத்தில் இடம் பெற்ற முதல் திருட்டு என்று கூட சொல்­லலாம்.

முறைப்­பாட்­டினைத்  தொடர்ந்து  விசா­ர­ணை­யினைத் தொடர்ந்த கொழு ம்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலிஸார் அந்த திருட்டு தொடர்பில் தக­வல்­களை திரட்­ட­லா­யினர்.

கடந்த நவம்பர் மாதம் இலங்­கையில் நடை­பெற்ற பொது நல­வாய மாநாட்டை குறிக்கும் வித­மாக அல்­லது அந்த சந்­தர்ப்­பத்தை அனுஷ்­டிக்கும் வித­மாக வெளி­யி­டப்­பட்ட 500 ரூபா நாண­யத்­தாள்­களும் ஏனைய சாதாரண 500ரூபா நாண­யத்­தாள்­க­ளுமே திரு­டப்­பட்­டுள்­ளமை பொலி­ஸாரால் உறுதி செய்­யப்­பட்­டது.

ஏனெனில் பொது நல­வாய மாநாட்டை குறிக்கும் வித­மாக 5 மில்­லியன் 500 ரூபா நோட்­டுக்­களும் சாதா­ரண 500 ரூபா நோட்­டுக்கள் 45 மில்­லி­யனும் அச்­சி­டப்­படும் போதே இந்த திருட்டுச் சம்­பவம் பதி­வா­கி­யுள்­ளது.

இங்­கி­லாந்தில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் விஷேட தாள் வகை ஒன்றில் இந்த நண­யத்­தாள்கள் அச்சிடப்­படும்  நிலையில் அவ்­வா­றான ஒரு தாளில் 45 நோட்­டுக்­களை அச்­சிட முடியும்.

இந் நிலையில் பொது நல­வாய அரச தலை­வர்­களின் மா நாட்டை பிர­தி­ப­லிக்கும் 500 ரூபா நாண­யத்­தாள்கள் அச்­சி­டப்­பட்ட அவ்வாறான 24 தாள்­களும் சாதா­ரண 500 ரூபா அச்­சி­டப்­பட்ட 39 தாள்­களும் திரு­டப்­பட்டுள்ளமை பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­தன.

அப்­ப­டி­யானால் பொது நல­வாய அரச தலை­வர்­களின் மாநாட்டை குறிக்கும் 500 ரூபா நாண­யத்­தாள்கள் 10,80 உம் சாதா­ரண 500 ரூபா நாண­யத்­தாள்கள் 1755 உம் திரு­டப்­பட்­டுள்­ளன என்­பதை தெரிந்து கொள்ள முடிந்­தது.

பெறு­ம­தியின் அடிப்­ப­டையில் பார்க்கும் போது பொது நல­வாய அரச தலை­வர்­களின் மாநாட்டைக் குறிக்கும் வித­மான 500 ரூபா நாண­யத்­தாள்­களின் பெறு­ம­தி­யா­னது 5 இலட்­சத்து 40 ஆயி­ர­மாகும். திரு­டப்­பட்ட சாதாரண 500 ரூபா நாண­யத்­தாள்­களின் பெறு­மதி 8 இலட்­சத்து 97 ஆயி­ரத்து 500 ரூபா ஆகும்.

அப்­ப­டி­யானால் திரு­டப்­பட்­டுள்ள 500 ரூபா நாண­யத்­தாள்­களின் மொத்த பெறு­மதி 14 இலட்­சத்து 37 ஆயி­ரத்து 500 ரூபா­வாகும்.

இது­வரை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களின் பிர­காரம் திருடப்­பட்ட நாண­யத்­தாள்கள்  ஒரேநேரத்தில் அன்று வெவ்வேறு சந்­தர்ப்­பங்­களில் திரு­டப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

இந் நிலையில், பொலி­ஸாரின் சந்­தேகம் அந்த அச்­ச­கத்தில் சேவை செய்த நபர் ஒருவர் மீது திரும்­பி­யது. இதனை அடுத்து கடந்த வெள்­ளி­யன்று (21.02.2014) கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வினர் விஷேட சுற்றிவளைப்­பொன்­றினை மேற் ­கொண்­டனர்.

இதன்போது பிய­கம பிர­தே­சத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்­தனர். சந்­தேக நபரை கைது செய்த கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலிஸார் அவ­ரது வீட்டை சோத­னைக்கு உட்­ப­டுத்­தினர்.

இதன்போது சந்­தேக நபரின் வீட்­டி­லி­ருந்து 2 இலட்­சத்து 65 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான 500 ரூபா நாணயத்தாள்கள் 530 பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டன.

இதனை அடுத்து சந்­தேக நபரை தடுத்து வைத்து கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் மேலும் பல விட­யங்கள் வெளிச்­சத்­துக்கு வந்­தன.

policeபொதுநல­வாய அரச தலை­வர்­களின் மாநாட்டை ஒட்­டியும் சாதா­ர­ண­மா­கவும் மொத்தம் 50 மில்­லியன் 500 ரூபா நாண­யத்­தாள்கள் அச்­சி­டப்­பட்­டுள்­ளன. இதன் போது நாண­யத்­தாளின் இலக்கம் அச்­சா­வ­தற்கு முன்னர் குறித்த சந்­தேக நபரால் அந்த நாண­யத்­தாள்கள் திரு­டப்­பட்­டுள்­ளன.

நாண­யத்தாள் அச்­சிடும் பணியில் அதன் இலக்­க­மா­னது இறு­தி­யி­லேயே அச்­சி­டப்­ப­டு­வதால் அதற்கு முன்­ன­ரான அனைத்து அச்சுப் படி முறை­களும் பூர்த்தி செய்­யப்­பட்ட நாண­யத்­தாள்­களே சந்­தேக நபரால் திருடப்பட்டுள்­ளன.

அதனால் அவரால் திரு­டப்­பட்­டுள்ள நாண­யத்­தாள்­களில் இலக்­கங்கள் எதுவும் இல்லை என்­பதும் பொலிஸ் விசா­ர­ணை­களில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் தான் திரு­டிய அந்த 500 ரூபா நாண­யத்­தாள்­களை புழக்­கத்தில் விட நாண­யத்­தாள்­க­ளுக்கு இலக்­கங்கள் தேவை பட்­டதால் அதனை அச்­சிட விஷே­ட­மாக இரு இறப்பர் முத்­தி­ரை­களை சந்­தேக நபர் பயன்ப­டுத்­தி­யுள்ளார்.

தற்­போது பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள அந்த இரு இறப்பர் முத்­தி­ரை­களில் ஒன்று சிவப்பு நிறத்­தையும் மற்­றை­யது கறுப்பு நிறத்­தையும் கொண்­டன.

இந்த இறப்பர் முத்­தி­ரைகள் கிரி­பத்­கொடை பிர­தே­சத்­தி­லேயே விஷே­ட­மாக நாண­யத்­தா­ளுக்கு இலக்­கங்­களை அச்­சிடும்படி­யாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன.

rupeee-1குறித்த நாண­யத்தாள் அச்­ச­கத்தில் நாண­யத்­தாளின் இலக்கம் அச்­சா­வ­தற்கு முன்னர் அந்த நாண­யத்­தாள்­களை திரு­டி­யுள்ள சந்­தேக நபர் பெண்கள் கழி­வ­றைக்குச் சென்று தான் அணிந்­தி­ருந்த ‘பூட்’ சப்­பாத்துக்களுக்குள் மறைத்து அவற்றை வெளியே எடுத்­து­வந்து இந்த திருட்டுச் சம்­ப­வத்தை அரங்­கேற்­றி­யுள்­ள­தாக குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

சந்­தேக நபரை தடுப்புக்காவல் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யதில் மேலும் சில தக­வல்­க­ளையும் பொலி­ஸாரால் தெரிந்து கொள்ள முடிந்­தது.

ஏனெனில் சந்­தேக நபரால் போலி­யாக இலக்­க­மி­டப்­பட்ட 9 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான நாண­யத்­தாள்கள் பணச் சுற்­றோட்­ட­த்துக்குள் விடப்­பட்­டுள்­ளமை அதில் தெரி­ய­வந்துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன தெரி­விக்­கிறார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹ­ணவின் தக­வல்­களின் பிர­காரம் இவ்­வாறு போலி­யாக இலக்­க­மி­டப்­பட்ட 500 ரூபா நாண­யத்­தாள்கள் 1800 நாணயச் சுற்றோட்­ட­துக்குள் புழக்­கத்தில் விடப்­பட்­டுள்­ளன.

X/25 524376 என்­பதே அந்த போலி நாண­யத்­தாள்­களின் இலக்கம் என்­பதை விசா­ர­ணை­களில் பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ள­தா­கவும் குறித்த போலி 500 ரூபா நோட்டு குறித்து மிக அவ­தா­ன­மாக செயற்­ப­டு­மாறும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண பொது­மக்­களைக் கேட்­டுக்­கொன்­டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி மாலை விஷேட ஊடக அறிக்கை ஒன்­றினை வெளி­யிட்ட பொலிஸ் தலை­மை­யகம் 500 ரூபா போலி நாண­யத்­தாள்கள் பணச் சுற்றோட்­டதில் கலந்து புழக்­கத்தில் உள்ள நிலையில் எவ­ரது கைக்­கேனும் அவ்­வா­றான போலி நாண­யத்­தாள்கள் கிடைத்தால் உடன் அருகில் உள்ள பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று அதனை ஒப்­ப­டைக்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யி­ருந்­தது.

நாணயத் தாள்­களை அச்­சிடும் அச்­ச­கத்­தி­லேயே இடம்­பெற்ற  இந்த திருட்டை அடுத்து அங்கு பாது­காப்பு ஏற்­பாடுகள் மேலும் விஸ்­த­ரிக்­கப்­பட்டு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அறியமுடி­கி­றது.

மத்­திய வங்­கியின் வர்த்­தக நிதிப் பிரிவின் அத்­தி­யட்­சகர் ஜே.பீ.ஆர்.கரு­ணா­ரத்­னவின் தக­வல்­களின் அடிப்­ப­டையில் குறித்த அச்­ச­கத்தின் பாது­காப்பு ஏற்­பா­டு­களில் இருந்த சில சுதந்­தி­ர­மான நடைமுறை­களால் இந்த

திருட்டு இடம்பெற்­றி­ருக்­கலாம் என ஊகிக்க வேண்­டி­யுள்­ளது.

எவ்­வா­றா­யினும் புழக்­கத்தில் விடப்­பட்­டுள்ள 9 இலட்சம் ரூபா­வுக்கும் அதி­க­மான பெறுமதி கொண்ட 500 ரூபா நாண­யத்­தாள்­க­ளையும் நாணயச் சுற்­றோட்­டதில் இருந்து நீக்­கு­வது மத்­தி­ய­வங்­கியை பொறுத்­த­வரை ஒரு பாரிய பணி­யாகும். ஒரே

இலக்கத்தைக் கொண்ட அந்த நாணயத் தாள்கள் பணச் சுற்­றோட்­டதை பெரிதும் பாதிக்­கலாம்.

police-1இந்த துணி­கரத் திருட்டு மற்றும் போலி நாண­யத்தாள் விநியோகம் என்பன தொடர்பான விசாரணைகளை மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவின் விஷேட ஆலோசனைக் கமைய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் நுவான் வேதி சிங்க, குற்றத்தடுப்புப் பிரிவி பொறுப்பதிகாரி  நெவில் சில்வா, பொலிஸ் பரிசோத கர்களான எரங்க பெர்ணான்டோ, ரஜீவ  ஹெட்டி ஆராச்சி, பொலிஸ் சார்ஜன் ரோஹண, கான்ஸ்ட பிளான புஷ்பகுமார ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழு மேற்கொண்டிருந்தது.

போலி நாணயத்தாள்களை வைத்திரு ப்பது தண்டனைக்குரிய குற்றம் என்ற

அடிப்படையில் அது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும். போலி நாணயத்தாள்கள் பொதுமக்களின் கைக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் அது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு எமது பாதுகாப்பை உறுதி செய்வதுடன் நாட்டின் சீரான பணச் சுற்றோட்டதுக்கும் எம்மாலான பங்களிப்பினை நல்குவோம்.

– எம்.எப்.எம்.பஸீர் –

Share.
Leave A Reply