கடந்த மார்ச் வர்த்தமானி மூலம் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தமையின் சூடு ஆறவில்லை. இவ்வாரம் இவ ர்களின் மொத்தநிதி ஏனைய நிதிச் சொத்து கள், பொருளாதார வளங்கள் என்பனவற்றை முடக்கும் வர்த்தமானி அறிவித்தலை யும் இலங்கையரசு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை புலம்பெயர் சமூகமும் அமைப்புக ளும் மீளுருவாக்கம் செய்கின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே இந்த தடையை இலங்கை அரசாங்கம் விதித்திருந்தது. அதன் தொடர்நிலையாகவே இந்த சொத்து முடக்கம் தற்பொழுது செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று பிரகடனப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரின் எல்லா சொத்துகளும் மற்றும் நிதி, பொருளாதார வளங்கள் இவர்களினால் சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்களின் கைவசமுள்ள சொத்துகள் அனைத்தும் முடக்கப்படுமென தெரிய வருகின்றது.
ஏற்கெனவே, புலம்பெயர் அமைப்புகளையும் மற்றும் தனிநபர்களையும் தடை செய்தமை தொடர்பில் சர்வதேச மனித உரிமை காண்காணிப்பகம், கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் தமது எதிர்ப்பைக் காட்டியிருப்பதோடு குறித்த தடையை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்ற கரு த்தையும் வெளியிட்டிருக்கின்றன.
இந்தத் தடை சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்வரும் கோரிக்கையை அரசாங்கத்திற்கு அண்மையில் விடுத்திருந்தது. இலங்கை அரசு பயங்கரவாதத்தை மீள எழு ச்சி பெறவைப்பதற்கு உதவுகின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை தடை செய்துள்ளது.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்ற சிந்தனையை கூட்டமை ப்பு கொண்டுள்ளது. இந்த அணுகுமுறைக்கு தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில அமைப்புக்கள் துணை நிற்கின்றன.
எனவே, புலம் பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை குறித்து இலங்கை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் கோரியிருந்தார்.
இதேவேளை, 16 புலம்பெயர் அமைப்புகளுக்கு அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது சம்பந்தமாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
ஜெனீவா தீர்மானத்துக்கு பழி தீர்க்கும் வகையிலேயே புலம் பெயர் அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை செய்து ள்ள அமைப்புகளில் சிலவற்றையே நாம் அறிவோம்.
அவர்கள் இலங்கையில் நிலையான அரசியல் தீர்வும் சமாதானமும் ஏற்பட வேண் டும் என்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். அவ்வாறான அமைப்புக்க ளையும் பயங்கரவாதத்துடன் தொடர்புப ட்டவை என்று ஒரு தலைப்பட்சமாக கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது என சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான எதிர்ப்புக்கு மத்தியில் மீண்டும் சொத்து முடக்கம் என்ற பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் காலப் பகுதியிலிருந்து பல்வேறு சர்வதேச மயப்படுத்தப்பட்ட சம்பவங்களும் நிகழ்வுகளும் நடந்தேறிவிட்டன. நடந்து கொண்டிருக்கின்றன.
யுத்த முடிவின் பின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்தது. இது போல யுத்தத்துக்குப் பின்னரே புலம் பெயர் நாடுகளில் பல்வேறு அமைப்புகள் உருவாகி அவை தீவிரமாக செயற்பட ஆரம்பித்தன.
இந்த அமைப்புகளை பொறுத்த வரை புலம் பெயர் நாடுக ளில் இவை செயற்பட ஆரம்பிக்க ப்ப ட்ட போதும் இவற்றின் அடிப்படையான நோக்கம் தாயக மண்ணில் மீண்டும் அமை தியும் சமாதானமும் வரவேண்டும்.
அதற் கான அடிப்படையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்பதை மேற்படி அமைப்புகள் தம் அமைப்பின் தாரகமந்திரமாக கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம்.
துர்ப்பாக்கிய வசமாக இந்த அமைப்பு கள் மீதும் புலம்பெயர் சமூகத்தின் மீதும் சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டுகள் இன்று அவர்கள் தாயகத்திற்கு திரும்ப முடியாத நிலையொன்றை உருவாக்கியிருப்பதுடன் அவர்களுக்கும் தாயகத்துக்கும் இருக்கின்ற பந்தங்க ளுக்கு ஆப்பு வைக்கும் நிலையொன்றே உருவாக்கப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.
புலம்பெயர் அமைப்புகளின் சொத்து முடக்கம் விவகாரத் தில் எல்லா சொத்துக்களும் மற்றும் நிதி, பொருளாதார வளங்கள் அவர்களினால் சட்ட ரீதியாக நியமிக்கப்பட்டவர்களின் கைவசமுள்ள சொத்துகள் என்ற பல்வேறு முடக்கங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
இவர்களுக்கு தாயக மண்ணிலு ள்ள அசையும் சொத்துகள் அசையா சொத்து கள், நிதி, பொருளாதார வளங்கள் என்ற பரப்பளவைப் பார்க்கின்ற போது ஒரு குண்டுமணியளவு சொத்தைக் கூட இவர்கள் தாயக மண்ணில் வைத்திருக்க முடியாது உரிமைப்படுத்த முடியாது என்ற சட்டரீதியான பிரகடனமாக இது அமுல் படுத்தப்படவுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களால் சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்க ளின் வசமுள்ள சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன என இந்தப் பிரகட னம் கூறுகிறது.
பொதுவாக கூறப் போனால் சர்வதேசரீதியில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் இத்தகைய அமைப்புக்கள் அந்தந்த நாடுக ளின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும் குறித்த நாட்டின் இணக்கப்பாட்டுடனும் செயற்பட்டு வருவதாகவே எடுத்துக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இலங்கையரசாங்கத்தின் இந்த அறிவிப்பை அல்லது கோரிக்கையை பெரும்பாலான நாடுகள் ஏற்று கொண்டு நடைமுறைப்படுத்துவதாக தெரியவில்லை.
கனடா, அமெரிக்கா இந்த அறிவிப்பை கண்டு கொள்ளாத நிலை யில் ஜெனீவாவும் இலங்கைக்கு ஆதரவு நல்கிட்ட அவுஸ்திரேலியாவும் இதனை ஏற் றுக் கொள்ளவில்லையென்றே சொல்ல வேண் டும்.
தமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்பட்டு வரும் காரணத்தி னால் அந்த அமைப்புகளின் செயற்பாடுகளு க்கு தடை விதிக்க முடியாது என பலநாடு கள் காரணம் காட்டுகின்றன.
இதேவேளை, ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் இலங்கை அரசா ங்கத்தால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோர் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென இலங்கை அரசை கோரி வருகின்ற போதும் இலங்கை அரசாங்கம் ஆதாரங்களை சமர்ப்பிப்பதில் கால தாமதம் செய்து வருகின்றது என சுட் டிக் காட்டப்படுகிறது.
இவ்வகை தடை விதிப்பும் சொத்து முடக்கலும் கொண்டு வரப்பட்டமைக்கான மூல கார ணம் புலம் பெயர் அமைப்புகளின் பின்னணியிலேயே சர்வதேசம் செயற்பட்டு வருகின்றது.
ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு இவர்கள் உதவி வருகின்றார்கள் என்ற பிரதான குற்றச்சாட்டுக்கள் இந்த புலம் பெயர் அமைப்புகள் மீது பொறிக்கப்படுகின்றன.
இலங்கையில் இன நெருக்கடிகள் ஏற்ப ட்ட காலத்திலிருந்து கடந்த மூன்று தசாப்த காலத்துக்கு மேலாக வட கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்தும் புலம் பெயர்ந்தும் சென்ற தமிழ் மக்களில் புலம்பெயர் சமூகம் என்ற வகையில் சுமார் 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் 40 க்கு மேற்பட்ட நாடுகளில் அடைக்கலம் கோரி அந்தஸ்து பெற்று வாழ்பவர்களாகவும் அந்த நாட்டுப் பிரஜைகள் ஆகிக் கொண்டவர்களாகவும் இரட்டை நாட்டு பிரஜைகளாக வாழுகின்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள் என்று கணக்கிட்டுக் காட்டப்படுகின்றது.
இதில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், டென்மார்க், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர் சமூகம் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு பல்வேறு அபகீர்த்திகளையும் கெடுதிகளையும் உண்டாக்கி வருகின்றன என்று இலங்கைய ரசாங்கம் அவர்கள் மீது பழி சுமத்தி வருவது ஒருபுறமிருக்க தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு குறிப்பிட்டது போல் அமெரிக்கா வால் கொண்டுவரப்பட்ட 2012, 2013, 2014 ஆகிய பிரேரணை நிறைவேற்றம் முழுவதற்குமான பின்னணி வகிப்பவர்கள் புலம் பெயர் அமைப்புகளும் சமூகமுமாகும் என்ற அபிப்பிராயத்தின் காரணமாகவே இலங்கையரசாங்கம் சீற்றமும் சினமும் கொண்டிருக்கின்றது என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.
அதிலும் இவ்வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அதன் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்ற சர்வதேச விசாரணையும் இலங்கைக்கு நெருக்கடி நிலையொன்றைக் கொண்டுவரப் போகின்றது என எதிர்க்கட்சி கள் எச்சரித்து வருகின்ற நிலையில் ஆட்சி யாளர்கள் இந்தப் போக்கை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்ப புலம்பெயர் அமை ப்புகளின் தடை விதிப்பை மேற்கொள்கின்றார்கள் என்ற அபிப்பிராயமும் பொதுவாகக் கூறப்படுகின்றது.
இருந்த போதிலும் அண்மைக் காலங்களில் புலம் பெயர் தேசங்களில் புலிகளை மீள் உருவாக்கம் செய்வதற்கு அந்தந்த நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்ற அமை ப்புகள் தீவிர முயற்சிகளை மேற்கொ ண்டு வருகின்றன என்பதற்கு அடையாளமாக அண்மையில் மலேசியாவிலிலிருந்து மூவர் நாடு கடத்தப்பட்டு இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதுபோலவே விடுதலைப்புலி அமைப்பை மீள உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படும் 40 புலம் பெயர் தமிழர்களுக்கு எதிராக ரெட்நோட்டீஸ் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
இந்தவகையில் தான் கடந்த 15 ஆம் திகதி மலேசியாவில் வைத்து சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த சங்கரலிங்கராஜா குசாந்தன் (வயது 45), நல்லூரைச் சேர்ந்த மகாதேவன் கிருபாகரன் (வயது 42), அதேயூரைச் சேர்ந்த செல்லத்துரை கிருபானந்தன் ஆகிய மூவரும் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய நாட்டின் இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள மனித உரிமை அமைப்புக்கள் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மலேசியாவைப் பொறுத்தவரை அதன் செயற்பாடுகள் அனைத்தும் கடந்த இரண்டு தசாப்த காலத்துக்கு மேலாக இலங்கையரசாங்கத்துக்கு சார்பாகவே இருந்து வந்துள்ளன என்பது கவனத்துக்குரிய விடயமாகும்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து குறிப்பாக வட கிழக்கிலிருந்து பெருந்தொகையான ஊழிய நகர்வுகள் மலேசியாவை நோக்கி இடம்பெற்றுள்ளன. அங்கு வாழுகின்றவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் இலங்கை மண்ணைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் அமைப்புகள் உருவாக்கப்ப ட்ட உருவாகிய நோக்கம் பற்றி புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர் பரமேஸ்வரன் வழ ங்கிய செவ்வியொன்றில் பின்வருமாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
முன்னைய நாட்களில் தாயக மண்சார்ந்த பிரதேச அபிவிருத்தி, மீள்குடியேற்றம், கல்வி மேம்பாடு, உளவியல் பரிகரணம், பொருளாதாரவிருத்திகள் என்ற அடிப்ப டையிலேயே புலம் பெயர் அமைப்புக் கள் இயங்கி வந்தன 2009 ஆம் ஆண்டு போருக்குப்பின் ஏற்பட்ட தாயக நிலைகள் சர்வதேச பின்னணியில் அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அரசியல் தீர்வை நோக்கி நகர முடியுமென்ற இலட்சியத்துடன் செய ற்பட்டு வருகின்றோம்.
கவன ஈர்ப்புப் போராட்டங்களும் அகிம்சை போராட்ட ங்களுமே எங்கள் பரிகரணமாக பயன்படுத்தப்படுகிறது என சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இன்றைய நிலையில் புலம்பெயர் அமைப்புகளை முற்றாக துவம்ஷம் செய்துவிட வேண்டுமென்ற நோக்கில் இலங்கையரசாங்கமும் இலங்கையரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்ற நோக்கில் புலம் பெயர் அமைப்புக்களும் செயற்பட்டு வருவதாக விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.
எது எவ்வாறு இருந்த போதிலும் புலம் பெயர் அமைப்புகளின் நலம் சார்ந்த விடயத்தில் அவை தம் மண்ணில் தம் மக்கள் நல்லதொரு தீர்வைப் பெற்று அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டுமென்பதில் அதிக கரிசனை கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது ஒரு கசப்பான உண்மையே.
வட கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து இன்னும் தம் சொந்த மண்ணுக்கு திரும்ப முடியாமலிருக்கும் தம் உறவுகளின் மீள் குடியேற்றம், மறுவாழ்வு, வாழ்வாதாரம், கல்வி என்பவற்றில் அதிக அக்கறைப்பாடு கொண்டவர்களாகவே அவர்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கும் நிலையில் அவ ர்களின் தொப்புள்கொடி உறவை வெட்டி விடுவது போல் புலம் பெயர் சமூகத்துக்கு எதிராக பல்வேறு கெடுபிடிகளும் தடைக ளும் சவால்களும் ஏற்பட்டுக் கொண் டே யிருக்கின்றன.
ஒரு கிராமத்தவர் சொன்னது போல் போற போக்கைப் பார்த்தால் வெளி நாடு சென்ற எவருமே இனி தாய கத்தை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிலைமைகள் கடுமையாகிக் கொண்டு போகின்றன எனக் குறிப்பிட்டார்.
எனவே புலம் பெயர் அமைப்புக்கள் மீது கண்டன கணைகளை வீசுவதைத் தவிர்த்து ஆரோ க்கியமிக்க அரசியல் சூழலை உரு வாக்கும் வகையில் அரசியல் தீர்வொன்று கொண்டு வரப்படு மானால் எல்லாம் ஓடி அடங்கி விடுமென் பதை அரசு உணர்ந்து நடக்க வேண்டும்.