கொள்­ளுப்­பிட்­டியில் பொலிஸார் மேற்­கொண்ட திடீர் சுற்­றி­வ­ளைப்பில் தனியார் விடு­தி­யொன்றில் விப­சா­ரத்தில் ஈடு­பட்ட 10பெண்கள்இ விடுதி முகா­மை­யாளர் மற்றும் விப­சார நிலை­யத்தின் உரி­மை­யாளர் ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பொலிஸ் மா அதி­பரின் பணிப்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் புல­னாய்­வுப்­பி­ரிவு பணிப்­பா­ளரும்இ திட்­ட­மிட்ட மற்றும் போதைப்­பொருள் தடுப்பு பிரிவின் பதில்­ப­ணிப்­பா­ள­ரு­மான ரீ.கணே­ச­நாதன் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரே சுற்­றி­வ­ளைப்பில் ஈடு­பட்டு கைது­செய்­தனர்.

இவ்­வி­டயம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

கொள்­ளுப்­பிட்­டிப்­ப­கு­தியில் நீண்­ட­கா­ல­மாக இயங்­கி­வந்த தனியார் விடு­தி­யொன்றில் வெளிப்­பி­ர­தே­சங்­களைச் சேர்ந்த பெண்­களை பயன்­ப­டுத்தி விப­சாரம் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­துள்­ளது. பெண்­ணொ­ரு­வரே குறித்த செயற்­பாட்டை மேற்­கொண்டு வந்­துள்ளார்.

கைது செய்­யப்­பட்­ட­வர்கள் அநு­ரா­த­புரம், அம்­பாறை, மாத்­தறை, அவி­சா­வளை, போன்ற வெளிப்­பி­ர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்கள் என்­ப­துடன் 20,22,25 வய­து­டைய யுவ­தி­க­ளாவர். விடு­தியின் முகா­மை­யா­ளரும்இ விப­சார விடு­தியை நடத்­திய உரி­மை­யா­ள­ரான பெண்ணும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவர்கள் நீண்­ட­கா­ல­மாக ஐயா­யிரம் முதல் பத்­தா­யிரம் ரூபா வரை­யி­லான பணத்­துக்­காக விப­சா­ரத்தில் ஈடு­பட்­ட­தாக விசா­ர­ணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட அனைவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply