ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, September 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உலகம்»சர்வதேச விவகாரம்
    உலகம்

    சர்வதேச விவகாரம்

    AdminBy AdminAugust 7, 2014No Comments5 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அந்தப் போர்க்களம் விசித்­தி­ர­மா­னது. ஒரு சது­ரங்கப் பலகை போன்­றது. ஒரு­வரை ஒருவர் வெட்டிச் சாய்க்க முனையும் இரு ராஜாக்கள். இவர்­க­ளுக்கு குதி­ரைப்­ப­டை­களும், யானைப் படை­களும் உண்டு. காலாட்­ப­டை­களும் இருக்­கின்­றன.

    ஒரு ராஜா வேக­மாக முன்­னே­றுவார். எதிரித் தரப்பு காலாட்­ப­டையை துவம்சம் செய்வார். சண்டை நிறுத்­தப்­படும். மற்­றைய ராஜா தொடங்­குவார். அவரும் முன்­னே­றக்­கூடும். மந்­தி­ரிகள் ஆலோ­சனை சொல்­வார்கள். சண்டை நிறுத்­தப்­படும்.

    சற்று நிதா­னித்துப் பார்த்தால் சது­ரங்கப் பல­கை­யெங்கும் இரத்­தக்­கறை படிந்­தி­ருக்கும். அப்­போது சது­ரங்கப் பல­கையில் ஒரு ராஜா மிகவும் பல­வீ­ன­மாக இருப்பார். மற்­ற­வரின் பலம் அதி­க­மா­ன­தாக இருக்கும். எனினும், இவர்­களில் எந்த ராஜாவும் எதி­ரியை முற்று முழு­தாக ஒழித்துக் கட்டும் முயற்­சியில் வெற்றி பெற்­ற­தில்லை.

    சது­ரங்கப் பலகை மத்­திய கிழக்கு மண் என்றால் எல்­லோ­ருக்கும் புரியும். ஒரு ராஜாவின் பெயர் இஸ்ரேல். மற்­றைய ராஜாவின் பெயர் ஹமாஸ். இந்தப் பல­கையில் எத்­த­னையோ நகர்­வுகள். போர் தர்­மத்தை கிஞ்­சித்தும் மதிக்­காமல், அடுத்­த­வரின் காய்­களை வெட்டித் தள்ளும் முயற்­சிகள்.

    சில சம­யங்­களில் சது­ரங்கப் பலகை அமை­தி­யாக இருக்கும். சில சம­யங்­களில் சடு­தி­யாக காய்கள் நகர்த்­தப்­படும். போரும் போர் நிறுத்­தமும் சக்­கரம் போல சுழன்று கொண்டே இருக்கும். இந்த சக்­கரம் எப்­போது நிற்கும், எந்த இடத்தில் ஸ்தம்­பிதம் அடையும் என்­பதை எவரும் ஊகிக்க முடி­யாது. ஊகிக்க முனைந்­த­வர்கள் தோற்றுப் போவார்கள்.

    2008ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இது தான் யதார்த்தம். 2008ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி இஸ்­ரே­லிய தரப்பில் இருந்து முத­லா­வது காய் நகர்த்­தப்­பட்­டது. அதற்கு இஸ்­ரே­லிய தரப்பு Operation Cast Lead என்று பெய­ரிட்­டது. ஹமாஸ் தரப்பும் முன்­னே­றி­யது. ஹமாஸின் தரப்பில் இதற்கு அல்-ஃ­புர்கான் யுத்தம் என்று பெயர். அடுத்­த­டுத்து காய்கள் வெட்­டப்­பட்­டன.

    மூன்று வாரங்கள் நீடித்த யுத்­தத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்கள் பலி­யா­கின. ஈற்றில் இரா­ணுவ ரீதி­யாக எமக்கே வெற்றி என்று இஸ்ரேல் முழங்­கி­யது. இஸ்­ரேலின் தரப்பில் 12 மணித்­தி­யால போர் நிறுத்தம். ஹமாஸ் தரப்பில் ஒரு வார­கால யுத்த நிறுத்தம் அறி­விக்­கப்­பட்­டது. சது­ரங்கப் பல­கையில் காய்கள் நகர்த்­தப்­ப­ட­வில்லை. அமைதி நீடித்­தது.

    முன்­னைய விளை­யாட்­டுக்­களின் முடி வில் சது­ரங்­கப்­ப­லகை எப்­ப­டி­யி­ருக்­குமோ, இம்­முறை அதை­வி­டவும் மோச­மாக இருந்­தது. இம்­முறை கறுப்பு வெள்ளைக் கட்­டங்கள் யாவும் குரு­தியில் நனைந்து செந்­நி­ற­மாக மாறி­யி­ருந்­தன. பழைய சக்­கரம் போரும், போர் நிறுத்­த­மு­மாக சுழன்று கொண்­டே­யி­ருந்­தது. ஒரு தட­வை­யல்ல, இரு தட­வைகள் அல்ல. ஆறு தட­வைகள். ஆறா­வது தட­வையும் போர் நிறுத்தம் சாத்­தி­யப்­ப­ட­வில்லை என்­பது தான் துர­திர்ஷ்­ட­மான விடயம்.

    சது­ரங்கப் பல­கையில் இஸ்­ரே­லிய, ஹமாஸ் தரப்­புக்­களின் காய் நகர்த்­தல்­களை உன்­னிப்­பாக அவ­தா­னித்துக் கொண்­டி­ருந்­த­வர்­களும் எதுவும் புரி­ய­வில்லை. முன்­னெப்­போதும் இல்­லாத வகையில், அடுத்­த­வரை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்று தீவிர கங்­கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்­கி­யுள்ள இரு­த­ரப்­புக்கள் ஏன் போர் நிறுத்­தங்­க­ளுக்கு இணங்க வேண்டும் என்று பலரும் அதி­ச­யப்­பட்­டார்கள். அந்த அதி­ச­யத்தால் விளைந்த ஆச்­சரி­யத்தின் சாயல் மறையும் முன் மீண்டும் சண்டை ஆரம்­பித்­தது.

    முதலில் ஜூலை 15ஆம் திகதி எகிப்து முன்­மொ­ழிந்த போர் நிறுத்தம். இரு­த­ரப்­பு­களும் எது­வித நிபந்­த­னை­களும் இல்­லாமல் துப்­பாக்­கி­க­ளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும், அதனைத் தொடர்ந்து கெய்­ரோவில் சமா­தானப் பேச்­சுக்­களை தொடங்க வேண்டும் என்ற கட்­ட­ளை­க­ளுடன் எகிப்து முன்­மொ­ழிந்த யோச­னையை இஸ்ரேல் ஏற்றுக் கொண்­டது. இதில் இஸ்­ரே­லுக்கு சலு­கைகள் அதி­க­மெனக் கூறி, ஹமாஸ் நிரா­க­ரித்­தது.

    இரு நாட்­க­ளுக்குப் பின்னர், ஐக்­கிய நாடுகள் சபையின் ஐந்து மணித்­தி­யால போர் நிறுத்தம். காஸா மக்­க­ளுக்கு சுவா­சிப்­ப­தற்­கேனும் கொஞ்சம் இடை­வெளி விடுங்கள் என்ற கோரிக்­கை­யுடன் ஐ.நா. செய­லாளர் நாயகம் போர் நிறுத்த யோச­னையை முன்­மொ­ழிந்தார். சுவா­சிக்க இடை­வெளி அளித்தால், ஹமாஸ் ஆயு­தங்­களை சேர்த்து விடு­மெனக் கூறி இஸ்ரேல் மீண்டும் தாக்­கு­தலை ஆரம்­பித்­தது.

    அடுத்து ஜூலை 20ஆம் திகதி. காஸாவின் ஷிஜாய்யா பிர­தே­சத்தில் அக­தி­க­ளுக்கு அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை வழங்­கு­வ­தற்­காக செஞ்­சி­லுவைச் சங்கம் இரு மணித்­தி­யா­லங்கள் சண்­டையை நிறுத்தச் செய்­தது. இத­னையும் இஸ்ரேல் முறித்துக் கொண்­டது.

    அடுத்து, அமெ­ரிக்க ராஜாங்க செய­லாளர் கோன் கெரி களத்தில் இறங்­கினார். அவர் ஜூலை 25ஆம் திகதி நிரந்­தர சமா­தா­னத்­திற்கு வழி­வ­குக்கக் கூடிய ஒரு­வார கால போர் நிறுத்­தத்தைப் பிரே­ரித்தார். இத­னையும் இஸ்ரேல் நிரா­க­ரித்­தது. இதன்­மூலம் ஹமா­ஸிற்கு கிடைக்கும் அனு­கூ­லங்கள் அதிகம் என்­பது இஸ்­ரேலின் தரப்பில் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டு. சமா­தானப் புறா­வாகச் சென்ற ஜோன் கெரி, இஸ்­ரே­லிய ஊட­கங்கள் தமது சிற­கு­களில் பூசப்­பட்ட கரி­யுடன் பறந்து சென்றார்.

    அடுத்து நோன்புப் பெருநாள் வந்­தது. இம்­முறை இஸ்­ரேலும், ஹமாஸும் 12 மணி­நேர போர் நிறுத்­தத்­திற்கு இணங்­கின. காஸா மக்கள் குண்­டு­ம­ழைக்கு மத்­தி­யிலும் பெருநாள் கொண்­டாட இட­ம­ளிக்கும் போர் நிறுத்­தத்தை 12 மணித்­தி­யா­லத்தைத் தாண்டி ஒரு மணி­நே­ரமும் நீடிக்க முடி­ய­வில்லை. மீண்டும் சண்டை தொடங்­கி­யது. பெருநாள் தினத்­தன்று சற்று உலவி வரலாம் என்று அகதி முகாமில் இருந்து வெளியே சென்ற பிள்­ளை­களும் இஸ்­ரேலின் ஏவு­க­ணைகள் தாக்கி மர­ணத்தைத் தழு­வி­னார்கள்.

    கடை­சி­யாக கடந்த வியா­ழக்­கி­ழமை ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கி மூனும், அமெ­ரிக்க ராஜாங்க செய­லாளர் ஜோன் கெரியும் சேர்ந்து கொண்­டார்கள். மனி­த­நேய நிவா­ரணப் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­கா­க­வேனும் 72 மணித்­தி­யால போர் நிறுத்­தத்தை கடைப்­பி­டிக்­கு­மாறு அவர்கள் கோரிக்கை விடுத்­தார்கள்.

    இம்­முறை சமா­தானப் பேச்­சுக்­கான போர் நிறுத்தம் என்­றெல்லாம் பேச­வில்லை. பசித்­த­வர்­க­ளுக்கு உண­வ­ளிக்­கவும், காயப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கவும், இறந்­த­வர்­களைப் புதைக்­கவும் துப்­பாக்­கி­க­ளுக்கு ஓய்வு கொடுங்கள் என்று இரு­வரும் கேட்­டார்கள். வெள்­ளிக்­கி­ழமை காலை ஆரம்­பித்த போர் நிறுத்தம் சில மணித்­தி­யா­லங்கள் மாத்­தி­ரமே நீடித்­தது. இரு தரப்­புக்­களும் மீண்டும் சண்­டை­யிட்­டன. ஹமாஸ் இயக்கம் இஸ்­ரே­லிய படை­வீ­ரரை கடத்­தி­யது.

    இந்த மாற்­றங்கள் காஸா நெருக்­க­டிக்கு இப்­போ­தைக்கு ஓய்வு கிடை­யாது என்­பதை தெளி­வாக பறை­சாற்றி நிற்­கின்­றன. எதிர்­கா­லத்­திலும் எத்­த­னையோ உயிர்கள் பலி­யாகப் போகின்­றன என்­பதைத் தெளி­வாக எடுத்­து­ரைக்­கின்­றன.

    இதில் முக்­கி­ய­மான விடயம் யாதெனில், காஸா யுத்­தத்தை ஒட்­டு­மொத்த உல­கமும் ஆட்­சே­பிப்­பது தான். துப்­பாக்­கி­க­ளுக்கு ஓய்வு கொடுக்­கப்­பட்டு, மனித அவ­லங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்டும் என சர்­வ­தேச சமூகம் விரும்­பி­ய­போ­திலும், அந்த விருப்­பத்தை நிறை­வேற்ற முடி­யாத நிலைமை தான் மத்­திய கிழக்கின் துர­தி­ர்ஷ்டம்.

    இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், இரு விட­யங்­களைப் பதி­லாகக் கூற முடியும். முத­லா­வது விடயம், இஸ்­ரேலின் ஆளுந்­த­ரப்பு எதிர்­கொள்ளும் அர­சியல் நிர்ப்­பந்தம். இரண்­டா­வது விடயம் மத்­திய கிழக்கின் கூட்­டணி நிர்ப்­பந்­தங்கள்.

    காஸா யுத்தம் எத்­தனை உயி­ரி­ழப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தாலும், ஹமாஸ் இயக்கம் இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண் டும் என்­பது இஸ்­ரே­லி­யர்­களின் நாட்­ட­மாகும். இந்தப் போர் தொடர வேண்டும் என்­ப­தையே 87 சத­வீத இஸ்­ரே­லி­யர்கள் விரும்­பு­வ­தாக கடந்த வாரம் நடத்­தப்­பட்ட கருத்துக் கணிப்பில் தெரி­ய­வந்­துள்­ளது.

    இந்த விருப்­பத்­திற்கு இணங்­கினால் தான், தமது அர­சியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்­பதை பெஞ்­சமின் நெத்­தன்­யாஹு அறிந்து வைத்­தி­ருக்­கிறார். ஜோன் கெரியின் நட்பை விடவும் இஸ்­ரே­லிய மக்­களின் வாக்­குகள் அவ­ருக்கு முக்­கி­ய­மா­னவை.

    அடுத்து, கூட்­ட­ணிகள் என்ற விட­யத்தை ஆராய்வோம். காஸா நெருக்­க­டியில் பல நாடு­களும் இயக்­கங்­களும் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. இஸ்ரேல், எகிப்து, சவூதி அரே­பியா ஆகி­யவை ஒரு புறத்தில் இருக்­கின்­றன. மறு­பு­றத்தில் கட்டார், துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் ஹமாஸ் இயக்­கத்தை ஆத­ரிக்­கின்­றன. சம­கால அர­சியல் நில­வரம் கார­ண­மாக, எந்தப் பக்­கத்­துடன் சேர்­வ­தெனத் தெரி­யாமல் அமெ­ரிக்கா தடு­மா­று­கி­றது.

    அமெ­ரிக்கா சொல்லி இஸ்ரேல் கேட்­க­வில்லை என்றால், அது வியப்­பிற்­கு­ரிய விடயம் தானே. ஜோன் கெரி முன்­மொ­ழிந்த போர் நிறுத்­தத்தை இஸ்ரேல் நிரா­க­ரித்­த­மைக்­கான காரணம், இந்தக் கூட்­டணி சிக்கல் தான். கட்­டாரும், துருக்­கியும் வரைந்து ஹமாஸின் ஒப்­பு­தலைப் பெற்ற போர் நிறுத்­தத்தைத் தான் அவர் முன்­மொழிந்தார்.

    எகிப்து முன்­மொ­ழிந்த போர் நிறுத்­தத்தை ஹமாஸ் நிரா­க­ரித்­தது என்றால் அதற்கும் கூட்­டணி நெருக்­கடி தான் காரணம். எகிப்தின் சம­கால தலைவர் அப்­துல்லா அல் சிஸி ஹமாஸின் தவிர்க்க முடி­யாத கூட்­டா­ளி­யான முஸ்லிம் சகோ­த­ரத்துவ இயக்­கத்தின் பரம எதிரி. முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்­கத்தை பயங்­க­ர­வாத இயக்­க­மாக முத்­திரை குத்­தி­யவர். அவ­ருடன் சேர்ந்து இஸ்­ரே­லிய அர­சாங்கம் வகுத்த போர் நிறுத்­தத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்பது ஹமாஸின் கேள்வி.

    மத்திய கிழக்கு நெருக்கடியுடன் சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பும் தனியாக போர் நிறுத்தத்தை முன்வைக்க முடியாது. இந்தத் தரப்புகளுக்கு இடையிலான கூட்டணிகள் அவ்வளவு சிக்கலானவை.

    அமெ­ரிக்கா ஹமா­ஸுடன் பேசாது. ஏனெனில், அமெ­ரிக்­காவில் ஹமாஸ் பயங்­க­ர­வாத இயக்­க­மாக பட்­டியல் இடப்­பட்­டுள்­ளது. இஸ்­ரேலும், ஹமாஸும் பரம வைரிகள் என்­பதால், அவையும் பேசப் போவ­தில்லை. முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்­கத்தை தடை­செய்த எகிப்தை ஹமாஸ் நம்ப மாட்­டாது. சவூதி அரே­பி­யாவை ஈரானும், எகிப்தை கட்­டாரும் சகித்துக் கொள்ளப் போவதில்லை.

    இந்த நிலையில், இந்த சகல தரப்பினருக்கும் பொதுவான ஒருவரைத் தேடிக் கண்டுபிடிப்பது தான் சண்டையை நிறுத்துவதற்கு சிறந்த வழியாக அமையும்.

    அது எந்தளவுக்கு சாத்தியம் என்பதில் தான், காஸா யுத்தத்தின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

    Post Views: 57

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    காதலனை தோழிக்கு விருந்தாக்க ஆசைப்பட்ட காதலி.. அந்த நேரத்தில் அப்படி.. கட் ஆன ‘அந்த’ உறுப்பு

    September 27, 2023

    பொலிஸாரிடம் தப்பி ஓடிய இரு இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு.

    September 27, 2023

    நானும் தமிழ் பேசுவேன்!” அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி மாஸ் சம்பவம்! இதை எதிர்பார்க்கல

    September 26, 2023

    Leave A Reply Cancel Reply

    August 2014
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jul   Sep »
    Advertisement
    Latest News

    இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்

    September 28, 2023

    பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!

    September 28, 2023

    ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்

    September 28, 2023

    ரூ.23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்

    September 27, 2023

    கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்!

    September 27, 2023
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்
    • பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!
    • ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்
    • ரூ.23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version