¨ராஜீவ்­காந்தி திடீர் முடி­வு­க­ளையே எடுத்தார். அவ­ருக்கு கொள்கை வகுப்­பா­ளர்­களின் கருத்­துக்­களை செவி­ம­டுக்க நேரமிருக்­க­வில்லை…”

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிர­பா­க­ரனின் உறு­திப்­பாட்­டைப்­பு­ரிந்து கொள்ள இந்­திய அரசு, புல­னாய்வு அமைப்­புகள், இரா­ணுவம் என்று எல்­லோ­ருமே தவ­றி­விட்­ட­தாக இரா­ணுவப் புல­னாய்வுத் துறையின் முன்னாள் அதி­கா­ரி­யான கேணல் ஹரி­கரன் தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் மத்­திய அமைச்சர் நட்­வர்சிங் எழு­தி­யுள்ள நூலில், இந்­தியப் படை­களை இலங்­கைக்கு அனுப்­பு­வ ­தற்கு முன்னர் அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யைப்­பெ­ற­வில்லை என்று கூறப்­பட்­டுள்­ளது. அது­தொடர்பில் கரு த்து தெரிவிக்கையிலேயே கேணல் ஹரி­கரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது­குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ராஜீவ்­காந்தி திடீர் முடி­வு­க­ளையே எடுத்தார். அவ­ருக்கு கொள்கை வகுப்­பா­ளர்­களின் கருத்­துக்­களை செவி­ம­டு க்க நேரம் இருக்­க­வில்லை.

இலங்கை – இந்­திய உடன்­படிக்கையில் கையெழுத்­தி­ட்ட மறுநாள், அணி­வ­குப்பு மரி­யாதையின் போது ராஜீவ்­காந்தி கடற்­படைச் சிப் பாய் ஒரு­வரால் தாக்­கப்­பட்டார். அப்­போது, ஜெனரல் சுந்­தர்­ஜியின் கருத்தை ராஜீவ் கேட்டார்.

இரா­ணுவத்தள­ப­தி­யா­க­வி­ருந்த அவர், விடு­த­லைப்­பு­லி­களை 72 மணி­நே­ரத் தில் தோற்­க­டித்து விட முடியும் என்று கூறினார்.

இலங்­கையின் கள நிலை­வ­ரங்கள் குறித்து ஜெனரல் சுந்­தர்­ஜிக்கு எந்த யதார்த்­தமும் தெரி­யாது. அத­னா­லேயே இலங்­கை­யி­லி­ருந்து 19 மாதங்­களின் பின்னர், இந்­திய அமை­திப்­படை அவ­மா­னத்­துடன் திரும்­பி­யது.

ஆனால், வடக்கில் இந்­திய அமை­திப்­படை நிலை கொண்­டி­ருந்­தமை, தனது இரா­ணு­வத்தை திசை திருப்­பு­வ­தற்கும், நாட்டின் பிற­ப­கு­தி­களில் கிளர்ச்­சி­களை அடக்­கு­வ­தற்கும் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்த்­த­ன­வுக்கு உத­வி­யது.

தெரி­வுகள் இல்­லாத இலங்கை

குறிப்­பாக, யாழ்ப்­பா­ணத்தில் 1987 ஆம் ஆண்டு ஜூனில் `ஒப்­ப­ரேசன் பூமாலை’ நட­வ­டிக்கை மூலம், இந்­தியா உணவுப்பொதி­களை வீசிய பின்னர், எந்த வெளி­நாட்டு உத­வி­களும் வராத நிலையில், உடன்படிக்கையில் கையெழுத்­தி­டு­மாறு ஜே.ஆரின் கையை இந்­தியா முறுக்­கி­ய­போது, அவ­ருக்கு சிறி­ய­ளவு தெரி­வு­களே இருந்­தன.

இந்­தி­யாவின் கவ­லை­களை இலங்கை புறக்­க­ணித்தால், இந்­தியா படை­ப­லத்தைப் பயன்­ப­டுத்த தயங்­காது என்­பதை இது வெளிப்­ப­டுத்­தி­யது.

இந்த நட­வ­டிக்கை, இலங்­கையில் தமி­ழர்­களின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்றும் வகையில் பங்­க­ளாதேஷ் பாணியில், இந்­தியா சுதந்­திர தமி­ழீ­ழத்தை ஏற்­ப­டுத்தி விடுமோ என்ற அச்­சத்­தையும் மூட்­டி­யது. ஆனால், உடன்படிக்கை ஒன்­று­பட்ட இலங்­கைக்கு இந்­தி­யாவின் ஆத­ரவை உறு­திப்­ப­டுத்­தி­ய­துடன், சுதந்­திர தமி­ழீ­ழத்­துக்­கான போரையும் தணித்­தது.

அடி­ப­ணிய மறுத்த பிர­பா­கரன்

இறு­தியில், ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன, விடு­தலைப்புலி­க­ளுடன் இந்­தி ­யாவைப் போரிட வைத்தார். இந்­தி­யா­வி­லி­ருந்து திரும்­பி­யதும், இந்­தி­யாவின் வரி­சையிலுள்ள கால் விர­லாக இருக்­க­மாட்டேன் என்று விடு­தலைப் புலி­கள் அமைப்பின் தலைவர் பிர­பா­கரன் சுது­ம­லையில் நிகழ்த்­திய உரையை இந்­திய அரசு கவ­ன­மாக எடுத்­துக்­கொண்­டி­ருக்க வேண்டும்.

புலிகள் தமது ஆயு­தங்­களை பெய­ர­ள­வுக்கே ஒப்­ப­டைத்­தனர். பயன்­ப­டுத்த முடி­யாத, பய­னற்ற ஆயு­தங்­களே ஒப்­ப­டைக்­கப்பட்டன. இந்­ திய அரசும், புல­னாய்வு அமைப்­பு கள், இரா­ணுவம் என்று எல்­லோ­ருமே தமி­ழீ­ழத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான போராட்­டத்­துக்குத் தலைமை தாங்கும் பிர­பா­க­ரனின் உறு­திப்­பாட்­டைப்­பு­ரிந்து கொள்ளத் தவறி விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply