மட்­டக்­க­ளப்பு மாவட்டம் வாழைச்­சேனை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட கிரான்-­கோ­ர­கல்­லி­மடு பிர­தே­சத்தில் வசித்து வந்த மன­நலம் குன்­றிய யுவ­தியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் யுவ­தியின் மாமா முறை­யான நப­ரைக்­கைது செய்ய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச் சம்­பவம் பற்­றித்­தெ­ரிய வரு­வ­தா­வது,

மன­நலம் பாதிக்­கப்­பட்ட குறித்த யுவதி சம்­பவ தின­மான இரவு பதி­னொரு மணி­ய­ளவில் வீட்­டில்­தூங்­கிக்­கொண்­டி­ருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்­லாத சந்­தர்ப்­பத்தைப் பார்த்து பக்­கத்து வீட்டில் வசித்­து­வந்த அந்த யுவ­தியின் மாமா முறை­யான சந்­தே­க­நபர் குறித்த யுவ­தியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தி­யுள்ளார்.

இது­தொ­டர்­பாக குறித்­த­ யு­வ­தியின் பாது­கா­வ­லர்கள் பொலிஸில் முறைப்­பாடு செய்­யவே சந்­தே­க­ந­ப­ரைக்­கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரிவித்­தனர்.

வாழைச்­சேனை வைத்­தி­ய­சா­லையில் குறித்த யுவதி அனு­ம­திக்­கப்­பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply