ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, September 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»செய்திகள்»மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்களுக்கு வீடுகள் நிர்மாணித்து கொடுக்க நடவடிக்கை
    செய்திகள்

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்களுக்கு வீடுகள் நிர்மாணித்து கொடுக்க நடவடிக்கை

    AdminBy AdminAugust 21, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றிருப்போரின் நலன் கருதி ‘ரட்டவிரு பியச’ வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பன்னீராயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

    அதன் முதற்கட்டமாக 2,000 வீடுகளின் நிர்மாண பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அவற்றில் ஐநூறு வீடுகள் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ளன என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். பதுளை ரிவர்சைட் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    அவர் தொடர்ந்தும் பேசுகையில்;

    மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரிபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளேன். இதனடிப்படையில் 2,500 பேருக்கு கல்விப்புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருப்பதுடன் இவ்வாண்டில் மேலும் மூவாயிரம் சிறார்களுக்கு கல்விப் புலமைப்பரிசில்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளேன்.

    அத்துடன் கணினி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆங்கில மொழியினை கற்பிக்கும் வேலைத்திட்டம் உள்ளிட்டு அக்குடும்பங்களின் மேம்பாட்டு வேலைத்திட்டம் ஆகியனவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுச் சென்று நாடு திரும்பிய பெண்கள் நெசவுக் கைத்தொழிலில் ஈடு படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இச்சுய முயற்சி தொழில் வாய்ப்புக்கள் மூலம் ஆகக்கூடுதலான வருமானங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இதனால் அப்பெண்கள் மீளவும் வெளிநாடுகளுக்கு செல்லத் தயக்கம் காட்டுகின்றனர்.

    தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்களுக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐந்து வயதுகளுக்கு குறைந்த சிறு பிள்ளைகள் இருக்கும் தாய் மார்கள் எக்காரணம் கொண்டும் தொழில் வாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கிடையாது.

    தொழில் வாய்ப்புகளுக்கு செல்லும் பெண்களின் குடும்ப பின்னணிகள் குறித்து ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படும். இவ்விடயங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  பணியக உத்தியோகத்தர்கள் பெரும் அர்ப்பணிப்புக்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    பெண்களினதும் அவர்களினதும் குடும்ப நன்மைக் கருதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கைகளை எடுக்கும் போது பெண்கள் அமைப்பினர் எமக்கெதிராக போராட்டங்களை மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கிலும் எமது பணியகத்திற்கு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இது போன்ற பெண்கள் அமைப்பினர் ஒரு சில அரசியல் கட்சியினர் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்த விரும்புவதில்லை. அவர்களுக்கு பிரச்சினைகள் இருக்க வேண்டும்.

    பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் கூட ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகளை உருவாக்கி அதில் குளிர் காய்ந்து வருகின்றனர். இத்தகைய விடயங்கள் மூலமே அவர்களின் வாழ்க்கை நடைபெற்று வருகின்றது.

    பதுளை மாவட்டத்திலிருந்து மூன்று ஆசனங்களை குறைத்தமையானது மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளுக்கமைய பூமியின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை ஆகியவற்றுக்கமையவே   மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டினை எதிர்கட்சியினர் உண்மைக்கு புறம்பானவகையில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    நடைபெறப் போகும் ஊவா மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எவ்வித சவாலும் இல்லை. கூட்டமைப்பு இலகுவாகவே அமோக பெரும்பான்மை பலத்துடன் ஊவா மாகாண சபையில் ஆட்சியைக் கைப்பற்ற எமது நாட்டில் சக்திமிகு எதிர்கட்சியொன்றில்லை.

    நவீன யுகத்திற்கமைய எதிர்கட்சி மாற்றமடையவில்லை. பலவீனமான எதிர்கட்சியே எமது நாட்டில் இருந்து வருகின்றது.

    இந்நாட்டிற்கு ஆகக்கூடிய அன்னிய செலவாணியைத் தேடித்தரும் தொழில் துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்பே இருந்து வருகின்றது. அத்துறை சார்ந்தவர்களுக்கு அனைத்து வரப்பிரசாதங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியமொன்று மட்டுமே இதுவரை அவர்களுக்கு கிடைக்காமலிருக்கின்றது என்றார்.

    Post Views: 44

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    காதலனை தோழிக்கு விருந்தாக்க ஆசைப்பட்ட காதலி.. அந்த நேரத்தில் அப்படி.. கட் ஆன ‘அந்த’ உறுப்பு

    September 27, 2023

    பொலிஸாரிடம் தப்பி ஓடிய இரு இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு.

    September 27, 2023

    உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடம்பெற்றது என்ன? 2005 முதல் அரசியல் கொலைகளை செய்தவர்கள் யார்? சிறையிலிருந்து சுரேஸ் சாலேக்கு பிள்ளையான் தெரிவித்த செய்தி என்ன? ஆசாத் மௌலான தெரிவித்துள்ள புதிய தகவல்கள்

    September 24, 2023

    Leave A Reply Cancel Reply

    August 2014
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jul   Sep »
    Advertisement
    Latest News

    பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்

    September 30, 2023

    பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ

    September 30, 2023

    ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!

    September 30, 2023

    நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்

    September 30, 2023

    காணாமல்போன பெண்ணின் சடலம் தலை, கை, கால்கள் அற்ற நிலையில் மீட்பு – வெளியான அதிர்ச்சி தகவல் !

    September 30, 2023
    • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்
    • பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ
    • ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!
    • நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version