ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இலங்கை அர­சி­யலில் மின்­னாமல் முழங்­காமல் பல சம்­ப­வங்கள் நடந்து வரு­கின்­றன. மூலவிளைவுகள், பக்க விளை­வுகள் என்று குறிப்­பி­டு­வது போல் மாகாண சபை ஆட்சி முறை­யிலும் பல மாற்­றங்கள் வந்து விடக்­கூடும் என ஆருடம் கூறு­வது போல் கிழக்கு மாகாண சபையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (25.11.2014) எதிர்­பா­ராத நிகழ்வு ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

கிழக்கு மாகாண சபையின் இரண்டாம்  பருவகால தேர்தல் 2012ஆம் ஆண்டு செப்­ெடம்பர் மாதம் (8.9.2012) நடந்து முடிந்­ததன் பின் கிழக்கு மாகாண சபையின் ஆட்­சியை யாருடன் கூட்­டுச்­சேர்ந்து யார் அமைக்­கப்­போ­கின்­றார்கள் என்ற எதிர்­பார்ப்­புக்­களும் எதிர்வு கூறல்­களும் இடம்­பெற்ற வேளையில் அர­சாங்­கத்தின்  பங்­காளிக் கட்­சி­க­ளாக ஆகிக்­கொண்டு ஆட்­சியை அமைத்­த­வர்கள்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீனின் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் ஆகும்.

இவ்­வாறு கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக கிழக்கு மாகாண சபை யின் ஆட்­சிப்­பங்­கா­ளர்­க­ளாக இருந்த அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் மூன்று உறுப்­பி­னர்கள் தாம் ஆளும் ஐக்­கிய மக்கள் சு.கூ. வழங்கி வந்த ஆத­ரவை வாபஸ் பெற்றுக் கொள்ளப் போவ­தாக அறி­வித்­துள்­ளார்கள்.

கிழக்கு மாகாண சபையின் உறுப்­பி­னரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தலை­மை­யி­லான குழு­வி­ன­ரான மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான எம். எஸ். சுபைர் மற்றும் ஸிப்லி பாறூக் ஆகிய மூவ­ருமே ஆட்­சிக்கு வழங்­கிய ஆத­ர­வி­லி­ருந்து விலத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

தாம் மூவரும் ஆளும் தரப்­புக்கு கிழக்கு மாகாண சபையில் வழங்­கிய ஆத­ரவை நிறுத்தி தனித்து இயங்கப் போவ­தா­கவும் இவ்­வா­றா­ன­தொரு தீர்­மா­னத்தை அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் உயர் பீடக் கூட்­டத்­தி­லேயே தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கட்­சியின் செய­லாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தனது அறிக்­கையில் தெரி­வித்­தி­ருந்தார்.

இவர்கள் மூவரின் அல்­லது அ.இ. மக்கள் காங்­கி­ரஸின் இந்த விலகல் கிழக்கு மாகாண ஆட்­சியில் மாற்­றத்தைக் கொண்டு வரக்­கூடும். குறிப்­பாக சொல்­லப்­போனால், ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் ஆட்­சிக்கு கிழக்கில் விரைவில் நெருக்­க­டிகள் ஏற்­ப­டக்­கூடும் எனக் கூறப்­ப­டு­கின்­றன.

இது சாத்­தி­ய­மா­னதா? இல்­லையா? என்­பது பற்றி ஆராய்­வ­தற்கு முன் கிழக்கு மாகாண சபையின் ஆட்­சிப்­பீடம் எவ்­வாறு அமைக்­கப்­பட்­டது. அதன்தற்போதைய ஆட்­சிப்­பலம் என்ன என்­பது பற்றி சுருக்­க­மாகப் பார்ப் போம்.

மூன்று மாவட்­டத்­தையும் 37 மொத்த உறுப்­பி­னர்­க­ளையும் கொண்ட கிழக்கு மாகாண சபையின் 2012ஆம் ஆண்டின் தேர்தல் முடி­வுகள் பின்­வ­ரு­மாறு அமைந்­தி­ருந்­தன.

கட்சி பெற்ற ஆச­னங்கள் ஐ.ம.சு. கூட்டு 14

த.தே.கூட்ட 11

முஸ். காங்­கிரஸ் 07

ஐ.தே.கட்சி 04

தே.சு.முன்­னணி 01

இந்த முடி­வு­களின் படி ஐ.ம.சு கூட்­ட­மைப்பின் 14 உறுப்­பி­னர்­களும் முஸ்லிம் காங்­கி­ரஸின் 07 உறுப்­பி­னர்­களும் தே. சுதந்­திர முன்­ன­ணியின் 1 உறுப்பினரு­மாக 22 உறுப்­பி­னர்கள் பலத்­துடன் ஐ.மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு கிழக்கு மாகாண ஆட்­சியை நிறுவிக் கொண்­டது.

இதில் குறிப்­பி­டக்­கூ­டிய முக்­கி­ய­மான விட­ய­மென்­ன­வென்றால், ரிஷாட் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் அமைச்சர் அதா­வுல்லா தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் ஆகி­யன கிழக்கு மாகாண சபைத் தேர்­தலில் ஐ.மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் சின்­னத்தில் போட்டியிட்டே தமது உறுப்­பி­னர்­களைப் பெற்றுக் கொண்­டார்கள்.

அந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் தாம் தனித்து இயங்­கப்­போ­கின்றோம் என அறி­வித்­துள்ள அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் தலை­மை­யி­லான கட்சியின் உறுப்­பி­னர்கள் மூவரும் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்தே தெரி­வா­ன­வர்கள் என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் குறித்த மூன்று உறுப்­பி­னர்­களும் கட்­சியின் நிய­திக்கு மாறாக செயற்­பட முடி­யுமா என்­பது சட்டம் சார்ந்த பிரச்சினையாகும்.

தற்­பொ­ழுது எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற அல்­லது எதிர்வு கூறு­கின்ற இன்­னொரு விடயம் கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு நல்கிக் கொண்­டி­ருக்­கின்ற முஸ்லிம் காங்­கிரஸ் ஆளும் தரப்­புக்கு வழங்கும் ஆத­ரவை வாபஸ் பெறும் முடி­வொன்று அக்­கட்­சியின் உயர்­பீ­டத்தால் எடுக்கப்படுமாயின் இப்­போ­தைய சூழ்­நி­லையில் ஆட்சி மாற்­ற­மொன்று நடை­பெற வாய்ப்­புண்டு.

அதா­வது கிழக்கில் ஆட்­சி­பு­ரியும் ஐ.மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் ஆட்சி கவி­ழக்­கூடும் என்ற அபிப்­பி­ரா­யங்கள் பொது­வாக பொது­மக்கள் மத்­தியில் பரவ­லாகப் பேசப்­படும் ஒரு மின் செய்­தி­யாகக் காணப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் காங்­கி­ரஸைப் பொறுத்­த­வரை தனித்­து­வ­மான கொள்கைப்பற்றுக் கொண்ட கட்சி. கிழக்கு மாகாண சபை யில் தமது கட்­சியின் தனித்­துவம் மீறப்ப­டாமல் தன் சின்­னத்தில் போட்­டி­யிட்டு 7 உறுப்­பி­னர்­களைப் பெற்றுக் கொண்­டது. சு. கூட்­ட­மைப்பின் சின்­னத்தில் போட்­டி­யிட வேண்டும்.

ஆளும் அர­சாங்­கத்தில் அங்கம் பெறும் கட்­சி­யாக இருக்கும் கார­ணத்­தினால் சேர்ந்தே போட்­டி­யிட வேண்­டு­மென அர­சாங்­கத்­தினால் பல்­வேறு அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட்ட போதும் அவற்றை உதா­சீனம் செய்து விட்டு தனித்­துப்­போட்­டி­யிட்­டார்கள் அதனால் மு. காங்­கி­ர­ஸினால் 7 ஆச­னங்­களைக் கைப்­பற்ற முடிந்­தது.

மறு­வார்த்­தையில் கூறு­வ­தானால், அர­சாங்க தரப்­பி­ன­ருடன் இணைந்தோ அவர் ­க­ளு­டைய சின்­னத்­திலோ போட்­டி­யிட்­டி­ருப்­பார்­க­ளே­யானால் குறித்த எண்­ணிக்கை உடைய ஆச­னங்­களைப் பெற முடி­யா­மலும் போயி­ருக்­க­லா­மென்ற விமர்­ச­னங்கள் இருக்­கத்தான் செய்­தது.

கிழக்கில் சிறு­பான்மை சமூ­கத்தின் கூட்டு இணை­வுடன் ஒரு ஆட்சி அமைக்­கப்­பட வேண்டும். அதற்கு எத்­த­கைய விட்டுக் கொடுப்­பு­க­ளையும் விட்டுக் கொடுக்கத் தயா­ராக இருக்­கிறோம். தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் இணைந்த ஒரு ஆட்சி அமைப்­பதன் மூலம் சிறு­பான்மை சமூ­கத்தின் பேரம் பேசும் சக்­தியை அதி­க­ரிக்க முடியும்.

எனவே, முஸ்லிம் காங்­கிரஸ் தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்­புடன் கைகோர்க்க வேண்­டு­மென்ற அழைப்­பையும் கோரிக்­கை­யையும் த.தே. கூட்­ட­மைப்­பினர் மிக விசு­வா­ச­மாக தேர்­த­லுக்கு முன்னும் பின்னும் விட்­டி­ருந்­துங்­கூட அந்த விசு­வா­ச­மான அழைப்­புக்கள் எல்லாம் உதா சீனம் செய்­யப்­பட்­டன.

தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மைப்­பீ­டத்­து­டனும் அதன் உயர் பீடத்­து­டனும் பல்­வேறு சந்திப்புக்களையும் பேச்சுவார்த்­தை­க­ளையும் நடாத்­தி­யுங்­கூட அவை புறக்­கு­டத்து நீரா­கவே ஆகி­யது. முடிவு முஸ்லிம் காங்­கிரஸ் அர­சுடன் இணைந்து ஆட்சி அமைத்­த­துடன் இரண்டு மாகாண அமைச்சர் பத­வி­க­ளையும் சுவீ­க­ரித்துக் கொண்­டது.

இதற்கு இடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸுக்கு முதல் அமைச்சர் பதவி வழங்­கப்­பட வேண்டும். கிழக்கின் முதல் அமைச்­ச­ராக முஸ்லிம் சமூ­கத்தை சேர்ந்த ஒரு­வரே நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு மத்­தியில் ஆளும் அர­சாங்­க­மான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்டமைப்பு மிக தந்­தி­ரோ­பா­ய­மாக காயை நகர்த்தி கிழக்கின் முதல் அமைச்­ச­ராக தமது கட்­சியைச் சேர்ந்த நஜீப் ஏ.மஜீ­துவை முத­ல­மைச்­ச­ராக நிய­மித்­ததன் மூலம் இரண்டு நோக்­கங்­களை நிறை­வேற்றிக் கொண்­டது.

ஒன்று தனது கட்­சியை சேர்ந்த ஒரு­வரை முதல் அமைச்­ச­ராக ஆக்­கி­யமை. மற்­றொன்று கிழக்கின் முத­ல­மைச்­ச­ராக முஸ்லிம் சமூ­கத்தை சேர்ந்த ஒருவரை நிய­மிக்க வேண்­டு­மென்ற ஏனைய கட்­சி­களின் கோரிக்­கையை நிறை­வேற்­றி­ய­மை­யாகும். இதில் இன்­னொரு விடயம் இரண்­டரை வரு­டங்­க­ளுக்குப் பின் முஸ்லிம் காங்­கி­ரஸைச் சேர்ந்த ஒரு­வரை முதலமைச்­ச­ராக நிய­மிக்க வேண்டும் என்­ப­தாகும்.

 

இப்­ப­டி­யான அர­சியல் சூழ்­நி­லை­யில் தான் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­வித்­தலும் அதனைத் தொடர்ந்து கட்சி மாற்­றங்­களும் தவல்­களும் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. இதன் தொடர் நிலை­யாக கடந்த புதன்­கி­ழமை (26.11.2014) அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹூனைஸ் பாறூக் ஐ.தே.கட்­சி­யு டன் இணைந்து கொண்ட சம்­ப­வமும் முஸ் லிம் அர­சியல் சமூ­கங்­க­ளுக்­கி­டையே பர­ப­ரப்பை உண்­டாக்­கி­யி­ருக்­கி­றது.

இந்த அர­சியல் சூழ்­நி­லையில் அனு­கூ­லங்கள் பிரதி கூலங்­க­ளுக்கு மத்­தியில் முஸ்லிம் காங்­கிரஸ் எத்­த­கைய தீர்­மா­னத்தை மேற்­கொள்­ளப்­போ­கின்­றது அது எடுக்­கப்­போகும் முடிவு முஸ்லிம் சமூ­கத்தின் சமூக அர­சியல் சார்ந்த போக்­கு­களில் கணி­ச­மான மாற்­றங்­களைக் கொண்டு வருமா? என்ற எதிர்­பார்ப்புக­ளாகும்.

குறிப்­பாக கிழக்கு மாகாண ஆட்சி முறையில் அதி­ர­டி­யான மாற்­றங்­களை உரு­வாக்கி விட­லா­மென்ற எதிர்­பார்ப்­புக்கள் எதிர்வு கூறல்கள் வியாக்கியானங்கள் முஸ்லிம் மக்கள் மத்­தியில் இன்று கார­சா­ர­மான உரை­யா­டல்­க­ளாக மாறி­யி­ருக்­கி­றது.

இதன் நடுவே முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச்செயலாளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய ஹசன் அலி இவ்­வாறு ஆரம்­பத்தில் அறிக்கை ஒன்றை விடுத்­தி­ருந்தார்.

அதில் இனப்­பி­ரச்­சினை தீர்வு உட்­பட்ட சிறு­பான்மை சமூ­கத்தின் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் எத்­த­கைய தீர்­வு­களை முன்வைப்­பார்கள் என்­ப­தி­லேயே முஸ்லிம் காங்­கி­ரஸின் அடுத்த கட்ட நகர்வு தங்­கி­யுள்­ளது.

ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களின் கொள்கைப் பிர­க­டனம் (தேர்தல் விஞ்­ஞா­பனம்) உட்­பட்ட சம கால அர­சியல் நிலை­மை­களை உன்­னிப்­பாக அவ­தா­னித்தே தீர்க்­க­மான முடிவை எடுப்போம் என தெரி­வித்­துள் ளார்.

இவரின் இவ்­வகை அறி­வித்­த­லுக்குப் பின்­னா­லான முடிவு எது­வாக இருக்­கப்­போ­கி­றது என்­பது பற்றி குறிப்­பாக சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்­கி­டையே பல்­வேறு அபிப்­பி­ரா­யங்­களும் கருத்­துக்­களும் இருந்து வரு­கிற போதும் இன்­றைய சூழலில் முஸ்லிம் மக்­களின் தீர்­மா­னங்கள் ஒரு திசை சாய்ந்­த­தாக இருப்பதே கசப்­பான உண்மை.

முஸ்லிம் மக்கள் மீது அண்­மைக்­கா­ல­மாக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட அட்­டூ­ழி­யங்கள் அநி­யா­யங்­களின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார்? இதை மிக நிதான­மா­கவும் கவ­ன­மா­கவும் ஆராய்ந்து முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு யாருக்கு ஆத­ரவு நல்க வேண்­டு­மென்­பதை தீர்­மா­னிக்க வேண்­டு­மென முஸ்லிம் மக்கள் உள்­ளூர வெம்பிக் கொண்­டி­ருப்­பதை கேட்க முடி­கி­றது.

ஜனா­தி­பதி தேர்­தலின் போக்­கு­களும் அது­பற்றி விமர்­ச­னங்­களும் ஒரு­பு­ற­மி­ருக்க முஸ்லிம் காங்­கிரஸ் எடுக்­கப்­போ­கிற முடிவு கிழக்கு மாகாண ஆட்­சியில் எவ்­வித மாற்­றங்­களை திருப்­பங்­களை உண்­டாக்­கப்­போ­கி­றது என்­பதே இன்று காணப்­படும் பிரச்­சினை.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸைப் போல் முஸ்லிம் காங்­கிரஸ் கிழக்கு மாகாண சபையில் அர­சுக்கு வழங்கி வரும் ஆத­ரவை இடை நிறுத்திக் கொள்­ளு­மாயின் ஆட்சி மாற்­ற­மொன்றைத் தவிர வேறு நிகழ்­வுகள் இடம்­பெற வாய்ப்­பில்லை. அவ்­வாறு இல்­லை­யாயின் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி கலைக்­கப்­பட வேண்டும்.

ஏலவே ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புக்குள் இருந்து கொண்­டி­ருந்த அ.இ.மக்கள் காங்­கி­ரஸின் மூன்று உறுப்­பி­னர்கள் அமீர் அலி தலைமையி­லான குழு­வினர் தனித்து நின்று   இயங்­கப்­போ­கி­றோ­மென அறி­வித்­தி­ருக்கும்  சூழ்­நி­லையில் முஸ்லிம் காங்­கிரஸ் தனது ஆத­ரவை விலத்திக் கொள்ளும் நிலை ஏற்­ப­டு­மாயின் எதி­ரணி தரப்பில் த.தே. கூட்­ட­மைப்பின் 11 உறுப்­பி­னர்கள் ஐ.தே.கட்­சியின் 4 உறுப்­பி­னர்கள் முஸ்லிம் காங்­கி­ரஸின் 7 உறுப்­பி­னர்கள் எதிர்த்­த­ரப்பு ஆகின்­ற­போது ஆளும் ஐக்­கிய மக் கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் கிழக்கு மாகாண ஆட்சி வீழ்ச்சி அல்­லது மாற வேண்­டிய நிலை­வரம் ஏற்­படும்.

கட்சி உறுப்­பினர்

த.தே.கூ. 11

மு. காங்­கிரஸ் 07

ஐ.தே.கட்சி 04

இந்த நிலை­மை­க­ளுடன் மக்கள் காங்­கி­ரஸின் மூன்று உறுப்­பி­னர்­களும் சேர்ந்து கொள்­வார்கள். ஆனால் கிழக்கு மாகா­ணத்தின் ஆட்சி தர்­ம­சங்­கட நிலைக்கு உள்­ளாகும். இதில் இன்­னு­மொரு விட­யத்தை கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் காங்­கிரஸ் அ. இ. மக்கள் கட்சி ஆகிய இரண்டும் தமது ஆத­ரவை வாபஸ்­பெற்­றுக்­கொள்ளும் சூழ்­நி­லையில் அமை ச்சர் அதா­வுல்லா தலை­மை­யி­லான தேசிய காங்­கி­ரஸை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற உறுப்­பி­னர்­க­ளான கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உது­மா­லெப்பை மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த சம்­மாந்­து­றையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற அமீர் நிந்­த­வூரை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற ஆரிப்­ஷம்­சுதீன் போன்­ற­வர்கள் தங்களின் ஆத­ரவை மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டிய சூழ்­நி­லை­யேற்­படும்.

ஏனெனில் சமூகம் சார்ந்த மாற்­றங்­க­ளுக்கு இவர்கள் உடன்­பட்டுப் போக­வில்­லை­ யாயின் தம் ஆட்­சிக்கு உட்­பட்ட உள்­ளூ­ராட்சி சபை­க­ளையும் மற்றும் நிலை­க­ளை யும் பறி­கொ­டுக்க வேண்டி வர­லா­மென்ற அபிப்­பி­ரா­யமே முஸ்லிம் மக்கள் மத்­தியில் நிலவி வரு­கி­றது.

எனவே தற்­போ­தைய இறுக்­க­மான அர­சியல் சூழ்­நி­லையில் முஸ்லிம் மக்கள் தம் சமூகம் சார்ந்த நல­னுக்­காக தலை­மைத்­து­வங்­களின் ஆணை­களை புறக்­க­ணிக்கும் நிலை­யொன்று வளர்ந்து வரு­கிற சூழ்­நி­லையில் முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட்ட கிழக்கின் முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள் என்ன முடிவை எடுக்கப்போகிறது என்பதிலேயே கிழக்கு மாகாணத்தின் ஆட்சி நிர்ணயிக்கப்படப்போகிறது என்ற உண்மை தெரியாத ஒரு விடயமல்ல.

 

Share.
Leave A Reply