காலத்­திற்கு காலம் மாற்­றங்கள் பல நாட்டில் இடம்­பெ­று­கின்­றமை வழக்­க­மா­னது. ஏதோ ஓர் வழி­மு­றையில் பல்­வேறு மாற்­றங்­க­ளுக்கு அனை­வரும் முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது. இலங்­கையில்  தற்­போதும் அவ்­வா­றான பல மாற்­றங்கள் நிறைந்த காலப்­ப­கு­தி­யாக இக்­காலம் அமைந்­துள்­ளது.

இன்று நாட்டில் சூடு­பிடித்­துள்ள அர­சியல் நிலை­மை­க­ளுக்கு அமைய பலர் பல்­வேறு மாற்­றங்­களை எதிர்­பார்க்­கின்­றனர். இல்­லையேல் விரும்­பு­கின்­றனர் என்று கூற வேண்டும். கடந்த காலங்­களை போன்ற வகையில் இல்­லாது இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் பல மாற்­றங்­க­ளுக்கும் அதிர்ச்­சி­க­ளுக்கும் உள்ளா­கி­யுள்­ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் 2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒரு தரப்­பினர் மிக உறு­தி­யான வெற்­றி­யினை கைப்பற்றுவர் என்­பது தெளி­வாக தெரிந்­தது.

குறிப்­பாக 2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பினர் தமது வெற்­றி­யினை தக்க வைத்­துக்­கொண்­டனர். இது 2009ஆம் ஆண்டு  விடு­தலைப்  புலி­க­ளு­ட­னான யுத்­தத்தில்  இரா­ணுவம் வெற்­றி­ய­டைந்­தமை மற்றும் சிங்­கள பெளத்த  மக்கள் தமது ஆத­ர­வினை வெளிப்­ப­டு த்­தி­ய­மை­யினால் 57 வீதத்­தினர் அரச வெற்­றி­யினை தக்க வைத்­தனர்.

எதி­ர­ணியில் பல கட்­சி­களின் கூட்­டணியில் இரா­ணுவ நாயகன் சரத் பொன்­சேகா கள­மி­றங்­கியும் தமது வெற்­றி­யினை உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை. நாட்டில் பெரும்­பான்மை சமூகம் முழு­மை­யாக அர­சாங்­கத்­தினை ஆத­ரித்­த­மையும் தேசியத் தலை­வ­ரென ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவை சித்திரித்தமை­யுமே  ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மிகப்­பெ­ரிய வெற்­றி­யினை பெற்­றுக்­கொள்ளக் காரணமாக அமைந்தது.

மேலும் இக்­காலப் பகு­தியில் பல பேரி­ன­வாத செயற்­பா­டுகள் மற்றும் சர்­வ­தேச தலை­யீ­டுகள் அர­சாங்­கத்தின் வெற்­றி­யினை உறு­திப்­ப­டுத்­தி­யமை சகலருக்கும் நன்று தெரிந்த விட­யமே.

எனினும் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் கடந்த தேர்­தலைப் போல் அர­சாங்­கத்­திற்கு நம்­பிக்­கை­யா­ன­தொரு தேர்­த­லா­கவோ அல்­லது ஆளும் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் வெற்றி உறு­தி­யாக்­கப்­பட்­டுள்ள தேர்­த­லா­கவோ கருத்­திற்­கொள்ள முடி­யாது.

ஏனெனில் 2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் சிறு­பான்மை வாக்­குகள் தவிர்த்து ஏனைய பெரும்­பான்மை வாக்­கு­களில் 80 வீத­மான வாக்­குகள் அரசாங்­கத்­திற்கு கிடைத்­தது.

எனினும் அன்று அர­சாங்கம் கூறிய கருத்­துக்கள், உதா­ர­ணங்கள் எவையும் இன்று பெரும்­பான்மை மக்­க­ளி­டையே ஏடு­ப­டாது போய்­விட்­டன. ஏனெனில் அன்று மக்கள் நாட்டில் அமை­தி­யையும், சுதந்­தி­ரத்­தையும்  தீவி­ர­வா­த­மில்­லாத சுத்­த­மா­ன­தொரு நாட்­டினை விரும்­பினர்.

எனவே அப்­போ­தைய நிலையில் நாட்டின் பொரு­ளா­தார சிக்­கலோ அல்­லது வாழ்க்கைச் செலவோ மக்­க­ளுக்குத் தெரி­ய­வில்லை. ஆயுத போராட்டம், தனி ஈழக் கொள்­கையில் விடு­தலைப் புலிகள் போரா­டிக்­கொண்­டி­ருந்த போது சகல கட்­சி­களும் ஆயுதப் போராட்­டத்­தினை எதிர்த்­தன.

சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­களை ஓர் அணியில் ஒன்று திரட்டும் முயற்சி பலரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. ஆனால் இன்று நிலைமை அவ்­வாறு இல்லை.

2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­திகள் அடுத்த ஆண்­டு­களில் பொய்­யாகி விட்­டது. தொடர்ந்தும் யுத்தம் என்ற கதை­யினை   மாத்­தி­ரமே இந்த அர­சாங்கம் பேசி­யதே தவிர மக்­களின் நிலை­மைகள் தொடர்பில் அக்­கறை செலுத்­து­வதில் சற்று பின்­நின்று விட்­டது என்றே கூற வேண்டும்.

யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கி­யி­ருந்தும் அர­சாங்­கத்தின் பிர­சார மேடைகள் முதற்­கொண்டு அரச நிகழ்­வுகள், சர்­வ­தேச மாநா­டுகள் வரை யில் விடு­தலைப் புலி­க­ளு­ட­னான யுத்த வெற்­றி­யினை மாத்­தி­ரமே பறை­சாற்­று­கின்­ற­னரே  தவிர மக்­களின் வாழ்­வா­தாரம், விவ­சாயம், கைத்தொழில் உற்­பத்­திகள் தொடர்பில் அக்­கறை செலுத்­தி­யது மிகவும் குறை­வா­னதே.

இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கும் 2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கும் இடையில் பல ஒற்­று­மை­களை காண முடி­கின்­றது.

அதேபோல் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ அர­சாங்­கத்­திற்கு பல அச்­சு­றுத்­த­லான எச்­ச­ரிக்கை அறி­கு­றி­களும் தென்­ப­டு­கின்­றன. 2005இல் ஜனா­தி­பதித் தேர்தலில் ஆளும்   ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் வெற்­றிக்கு மிகவும் துணை  நின்­ற­வர்கள் மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் ஜாதிக ஹெல உறு­மய ஆகிய சிங்­கள கட்­சிகள்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் கம்­யூ­னிசக் கட்­சி­யென தம்மை அடை­யாளம் காட்­டிக்­கொண்­ட­வர்கள் என்­றாலும் நாட்டில் விடு­தலைப் புலி­களை அழித்து நாட்டை காப்­பாற்ற வேண்டும் என்ற ஒரே கார­ணத்­தினை மையப்­ப­டுத்தி ஆளும் தரப்­பி­ன­ருடன் கைகோர்த்­தனர்.

அதே சந்­தர்ப்­பத்தில் 2004ஆம் ஆண்டு பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புடன் கைகோர்த்து 41 ஆச­னங்­களை பாராளுமன்­றிற்கு பெற்­றுக்­கொ­டுத்­த­துடன் இலங்கை அர­சியல் வர­லாற்றில் ஓர் தேர்­தலில் கட்சி பெற்ற இரண்­டா­வது அதி­கூ­டிய ஆச­னத்­தொகை இது­வே­யாகும்.

2004ஆம் ஆண்டே ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புடன் கைகோர்த்து அரசை பலப்­ப­டுத்­தி­யது மட்­டு­மன்றி 2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரங்­க­ளையும், பல எதிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு பெளத்த சிங்­கள வாக்­கு­களை குவித்தனர்.

jhuஅதேபோல் ஜாதிக ஹெல உறு­ம­ய­வி­னரும்   2004ஆம் ஆண்டு  பாரா­ளு­மன்ற தேர்­தலில்     ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் சார்பில் 9 ஆசனங்­களை வென்­றெ­டுத்­த­துடன் அத் தேர்­தலில் 5 இலட்­சத்து 52 ஆயி­ரத்து 724 வாக்­கு­களைப் பெற்­றி­ருந்­தனர். அதேபோல் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்­தலின் போது அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­திய மிக முக்­கி­ய­மான கட்­சி­யாக விளங்­கியது.

இவர்கள் இரு­வரும் இணைந்து விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ராக பிர­சாரம் செய்­த­துடன் விடு­தலைப் புலிகள் பயங்­க­ர­வா­தத்தை அழிக்க இவ் இரு கட்­சிகளும் அர­சியல் ரீதியில் மிகப்­பெரும் சக்­தி­யாக விளங்­கின.

என்­றாலும் அதில் தவ­றில்லை. அன்று எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி விடு­தலைப் புலி­க­ளுடன் செய்­து­கொண்ட இர­க­சிய ஒப்­பந்­தங்கள், பயங்கரவா­தத்­திற்கு துணை­போகும் செயற்­பாட்­டினை எதிர்க்­கட்சி செய்து விட்­ட­தென்­பதை இவர்­க­ளினால் தெளி­வா­கவும் உறு­தி­யா­கவும் பிர­சாரம் செய்ய முடிந்­தது.

எனினும் இவ்­விரு கட்­சி­க­ளி­டை­யேயும் ஓர் ஒற்­றுமைத் தன்­மையும் காணப்­பட்­டது. அதா­வது யுத்­தத்­தினை முடி­விற்கு கொண்டு வர வேண்டும்.

நாட்டில் வடக்கு தொடக்கம் தெற்கு வரையில் ஒரே அர­சியல், சமூக சூழ்­நிலை காணப்­பட வேண்டும் என்­ப­தையும் தாண்டி நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்­பதில் இரு­வரும் உறு­தி­யாக இருந்­தனர்.

71133909822ஜாதிக ஹெல உறு­மய இக் கொள்­கையில்   சற்று பின்­வாங்கிக் கொண்­டி­ருந்­தாலும்   மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் மிகவும் தெளி­வான கொள்கையில் செயற்­பட்­டனர்.

2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் அர­சுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக ஜே.வி.பி. யினர் தெரி­வித்­தி­ருந்­த­போது ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்றவுடன் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்க வேண்டும் என்ற உடன்­ப­டிக்­கை­யி­னையும் முன்­வைத்­தி­ருந்­தனர்.

அதன் பின்னர் ஜே.வி.பி. அரசை விட்டு வெளி­யே­றவும்   இவ் உடன்­ப­டிக்­கை­யினை அரசு ஏமாற்­றி­ய­மையே கார­ண­மாகும். அதேபோல் ஜாதிக ஹெல உறு­மய தொடர்ந்தும் 2010 ஜனா­தி­பதி தேர்­த­லிலும் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­தி­ய­தோடு நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை அகற்­று­வது தொடர்பில் மெளனம் காத்­தது.

எனினும் அதன் பின்னர் ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி நாட்டில் அதி­காரப் பகிர்­வினை மேற்­கொள்ள வேண்டும் என்­பதை அழுத்­த­மாக தெரி­விக்க ஆரம்­பித்­தனர்.

இறுதிக் காலத்தில் அதா­வது  தற்­போது ஜாதிக ஹெல உறு­மய அர­சாங்­கத்தை விட்டு வெளி­யே­றி­யுள்ள நிலையில் கடந்த இரு ஆண்­டு­க­ளாக ஜாதிக ஹெல உறு­ம­யவின் பிர­தான நோக்­க­மாக நிறை­வேற்று  ஜனா­தி­பதி முறை­மை­யினை  நீக்க வேண்டும் என்­பதை தெரி­விக்க ஆரம்­பித்து விட்­டனர்.

தற்­போது இவர்கள் ஆளும் தரப்­பி­னரை நிரா­க­ரித்து பொது எதி­ரணி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­கவும் இவ் நிறை­வேற்று முறை­மையின் மீது கொண்ட அதி­ருப்­தியே காரணம். எனவே மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் ஜாதிக ஹெல உறு­மய ஆகிய இரு கட்­சி­களும் அர­சாங்­கத்தை நிரா­க­ரிக்­கவும், தமது ஆத­ர­வினை விலக்­கிக்­கொள்­ளவும்  இவ் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையின் மீதான அதி­ருப்­தியும், அரசு செய்யும் ஏமாற்று வேலை­யுமே காரணமாக அமைந்து விட்­டது.

இன்று இவ் இரு கட்­சி­களும் ஒரே கொள்கைத் திட்­டத்தில் ஒரு கோட்­பாட்டில் நிற்­கின்­றன. 2004ஆம் ஆண்டு எவ்­வாறு அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­திய இவர்கள் இன்று அதே அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவே முரண்­பட்டு நிற்­கின்­றனர்.

இன்று ஜனா­தி­பதித் தேர்­தலில் இரு பெரும் தூண்கள் பலப்­ப­ரீட்சை நடத்­த­வி­ருக்­கின்­றன. யுத்­தத்­தினை வென்று நாட்டில் தீவி­ர­வா­தத்­தினை அழித்த தலைவரும் அதே அர­சாங்­கத்தில் இருந்து யுத்­தத்­திற்கு துணை நின்ற செய­லா­ள­ருமே ஒரு­வ­ருக்கு ஒருவர் சவா­லாக இரு அணி­களில் போட்டி போட்டியிடுகின்­றனர்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது உற­வி­னர்­களின் உத­வி­யு­டனும் அர­சாங்­கத்தின் ஒரு சில கூட்டுக் கட்­சி­க­ளு­டனும் களத்தில் இறங்­கி­யி­ருக்­கின்ற நிலையில் மறு­ப­டியும் மைத்தி­ரி­பால சிறி­சேன தனக்­கென பொது எதி­ர­ணி­யினை தயார்ப்­ப­டுத்­திக்­கொண்டு நாட்டின் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னையும் ஏனைய கட்­சி­க­ளையும் இணைத்­துக்­கொண்டு தயா­ரா­கி­யி­ருக்­கின்றார்.

ஆனால் இவை அனை­த்தும் தெரிந்த விட­ய­மாக இருந்தும் இதற்கு அப்பால் ஓர் சுவா­ரஷ்­ய­மான தன்மை உள்­ளது.

அதா­வது 2004ஆம் ஆண்டில் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்த, அர­சாங்கம் வெற்றி பெற பிர­தான பங்­கினை வகித்த மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் ஜாதிக ஹெல உறு­மய ஆகிய இரு கட்­சி­களும் இன்று பொது வேட்­பாளர் மைத்தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரித்து அவரின் கரங்­களை பலப்­ப­டுதவுள்­ளன. இது பொது எதி­ர­ணிக்கு மிகப்­பெ­ரிய சக்­தி­யாக மாற்றம் பெற்­றுள்­ளது என கூறு­வதில் தவ­றில்லை.

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் இன்­னமும் வெளிப்­ப­டை­யாக பொது எதி­ர­ணி­யி­னரை ஆத­ரிப்­பது தொடர்பில் தெரி­விக்­கா­வி­டினும் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தை வீழ்த்த சகல நட­வ­டிக்­கை­க­ளையும் எடுப்போம். இம்­மு­றை­யோடு அர­சாங்­கத்தின் குடும்ப அர­சியல் வீழ்ச்சி காண வேண்டும் என வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­து­விட்­டனர்.

எனவே இரு அணி­களின் மோதலில் ஓர் அணிக்கு எதி­ராக ஜே.வி.பி. கள­மி­றங்­கு­வது அடுத்த அணியின் வெற்­றிக்கே வழி­வ­குக்கும். எனவே மைத்தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஜே.வி.பி. மறை­மு­க­மாக தமது ஆத­ர­வினை வழங்­கு­கின்­றது என்­பதே உண்மை.

அதேபோல் ஜாதிக ஹெல உறு­மய தாம் நேர­டி­யா­கவே பொது வேட்­பாளர் மைத்தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஆத­ரவு வழங்­கு­வ­துடன் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சி­யினை வீழ்த்­து­வ­தற்கு சகல விதத்­திலும் உத­வு­வ­தாகத் தெரி­வித்­துள்­ளது.

எனவே 2004ஆம் ஆண்டின் அதே இரு கட்­சி­களின் பலமும் 2014ஆம் ஆண்டில் கைகோர்த்­துள்­ளன. இது மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­திற்கு மிகப்­பெ­ரிய அழுத்­தத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கம் தமது பலத்தில் பாதியினை இழந்து ஒரு சிலரின் நம்பிக்கையுடன் மாத்திரமே களத்தில் இறங்குகின்றது.

அதேபோல் அரசாங்கத்தில் அங்கம் வகித்த பலர் இன்று பொது எதிரணியில் பொது மேடையில் வீற்றிருப்பதும் ஏனைய எதிர்க்கட்சிகள் இக்கூட்டணியுடன் கைகோர்த்திருப்பதும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பாதி நம்பிக்கையினை ஏற்படு த்தியுள்ளது.

எனினும் தமது வெற்றியினை தீர்மானிக்கும் சக்தி மக்களிடையே உள்ளது. சிறுபான்மை தலைமைகள் இல்லாவிடினும் சிறுபான்மை வாக்குகள் யாருக்கு என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டது.

ஆனால் பெரும்பான்மை சமூகம் தமது மனச்சாட்சியின் படியா? அல்லது அறிவின் படியா? வாக்களிக்கும் என்பது மக்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியது.

எனவே யார் யாருடன் இருக்கின்றனர். யார் எந்த வேட்பாளருக்கு தமது வாக்கினை வழங்கப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மாற்றம் என்ற சொல்லை தவிர மற்றைய அனைத்தும் மாறக்கூடியது என்பதற்கு அமைய இம்முறை மாற்றம் ஏற்படுமா அல்லது மஹிந்த ராஜபக் ஷ அரசு தன்னை தொடர்ந்தும் நிலைநாட்டி புதிய அரசியல் வரலாறு படைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-ஆர்.யசி –

Share.
Leave A Reply