//”வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம்”,  நாட்டைப் பிரிக்கவோ அல்லது அதிகாரங்களை பகிரமாட்டோம் …பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிப்போம் //

இதுதான்… மைத்திரி  அணியினரின் உறுதியான  கொள்கை. இதுவே  மகிந்தவின் கொள்கையும் கூட.  இதைவிட  தமிழர்கள் அவர்களிடமிருந்து  பெரிதாக எதையும்  எதிர்பார்க்க முடியாது என்பது  தெட்டத் தெளிவாக தெரிகின்றது.

திரும்ப திரும்ப  மைத்திரி, மகிந்த   அணியினர் பிரச்சார மேடைகளில்  இதைதான் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.  தமிழர்களாகிய  நாங்கள் இதை கவனத்தில்  எடுத்துக்கொள்ளவேண்டும்.

சகல வசதிகளுடனும்  வாழும்…சம்பந்தன , சுமந்திரன் , விக்கினேஸ்வரன், மனோகணேசன் போன்ற கொழும்பு வாசிகள்  சொல்லுகிறார் என்பதற்காக  மைத்திரிக்காக வாக்களிக்கவேண்டாம்.

மைதிரிக்கோ, மகிந்தவுக்கோ வாக்களிப்பதை தவிர்த்து… தமிழர்கள்  இத்தேர்தலில் வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்கவேண்டும்.  இன்று  நம்மிடமிருக்கும்   ஒரே   சொத்து   நமது  “வாக்குகள்”   மட்டுமே.

இதுவரை  காலமும்.. தமிழ் தலைமைகள்  “சிங்கள  ஆட்சியாளர்களை  ஆட்சியில் அமர்த்துவதற்கும் அல்லது அவர்களை ஆட்சியிலிருந்து  அகற்றுவதற்கும்  தமிழர்களின்  வாக்குகளை  பயன்படுத்தினார்களேயொழிய, அவர்களிடமிருந்து எதையாவது..  60வருடகால  “அரசியல், ஆயுத”  போராட்டத்தில்  பெற்றுத்  தந்திருக்கிறார்களா?

ஆகவே … நமது பொன்னான வாக்குகளை   பயன்படுத்தி  “சிங்கள பேரினவாதிகளை”  ஆட்சியில் அமர்த்திவிட்டு, பின்பு அவர்களிடம்  பிச்சை பாத்திரம் ஏந்தி நிற்கவேண்டாம்.

Share.
Leave A Reply