விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து சிங்­கள மக்கள் மத்­தியில் பேரா­த­ர­வினைப் பெற்ற அசைக்க முடி­யாத சாம்­ராஜ்­ய­மாக விளங்­கிய ராஜபக் ஷ சாம்­ராஜ்­ய­மா­னது கடந்த மாதம் எட்டாம் திக­தி­யுடன் வீழ்ச்சியடைந்­தது.

ஆம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இலங்­கையின் ஏழா­வது ஜனா­தி­பதித் தேர்தல் கடந்த மாதம் எட்டாம் திகதி நடைபெற்­றது.

அந்தத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வை எதிர்த்து போட்­டி­யிட்ட எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்­ற­தை­ய­டுத்தே சரிந்­தது ராஜபக் ஷவின் சாம்­ராஜ்யம்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜ பக் ஷ தோல்­வி­ய­டைந்­த­தை­ய­டுத்து கடந்த மாதம் ஒன்­பதாம் திகதி காலை 6.30 மணிக்கு அலரி மாளி­கை­யி­லி­ருந்து வெளி­யே­றினார்.

மஹிந்த ராஜபக் ஷவின் மீது வெறுப்­புடன் இருந்­த­வர்­க­ளுக்குக் கூட அந்த சமயம் அவர் மீது அனு­தாபம் ஏற்­பட்­டது. இவ்வளவு பெருந்­தன்­மை­யாக கௌர­வத்­துடன்  தோல்­வியை ஏற்­றுக்­கொண்டு வெளி­யே­று­கி­றாரே என்று  அவர் மீது மதிப்பும் மரி­யா­தையும் கூட ஏற்­பட்­டது எனலாம்.

ஆனால் அதன் பின்­னரே பல்­வேறு இர­க­சி­யங்­களும் மர்ம முடிச்­சு­களும் அவிழ்க்­கப்­பட்­டன.

மஹிந்த ராஜபக்ஷ அவ்­வ­ளவு  இல­கு­வாக தனது ஜனா­தி­பதி பத­வியை விட்டுச் செல்­ல­வில்லை என்றும் இறுதி நிமிடம் வரை அதி­கா­ரத்தை  தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­கான முயற்­சி­க­ளையும்   சூழ்ச்­சி­க­ளை யும் மேற்­கொண்டார் எனவும்  தேர்தல் முடி­வ­டைந்து இரண்டு  தினங்­க­ளுக்குள்  செய்­திகள் வெளி­யாகத் தொடங்­கின.

இரா­ணு­வத்தைக் கொண்டு ஆட்­சியை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­கான சதி முயற்­சிகள் இறுதி நிமிடம் வரை மேற்கொள்ளப்பட்­ட­தாக  தற்­போ­தைய சுகா­தார அமைச்­சரும்   அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன கடந்த 10 ஆம் திகதி ஊட­கங்­க­ளுக்கு அறி­வித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவி­னு­டைய இந்த முயற்­சிக்கு இரா­ணு­வமும் பொலி­ஸாரும் ஒத்­து­ழைக்­க­வில்­லை­யெ­னவும் அதனாலேயே அவர் தனது சதி­மு­யற்­சியை கைவிட்டு வெளி­யே­றி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்­சியை தக்­க­வைப்­ப­தற்­காக சதி முயற்­சியில் ஈடு­பட்­ட­தாக வெளி­யு­றவு அமைச்சர் மங்­கள சம­ர­வீர முறை­ப்பா­டொன்­றையும் பதிவு செய்தார்.

அந்த முறைப்­பாட்­டை­ய­டுத்து அதனை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­து­மாறு சட்ட மா அதிபர் குற்­றப்­பு­ல­னாய்­வி­ன­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்தார். அத­ன­டிப்­ப­டையில் குற்­றப்­பு­ல­னாய்­வி­னரும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

இந்த சதி முயற்சி தொடர்பில் முழு­மை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கவும் இது தொடர்பில் பல அதிகா­ரிகள்  சாட்­சி­ய­ம­ளித்து  வரு­வ­தா­கவும்  அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

இதே­வேளை இந்த சதித்­திட்­ட­மா­னது நிறை­வே­றி­யி­ருந்தால் நாட்டில் இரத்த ஆறு பெருக்­கெ­டுத்­தி­ருக்­கு­மென்றும் இந்த சதி முயற்­சியின் பின்­னணி தொடர்பில் கண்­ட­றிந்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் மக்கள் விடு­தலை முன்னணி வலி­யு­றுத்­தி­யது.

அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு முறைப்­பா­டுகள் செய்யப்பட்­ட­துடன் பல்­வேறு அதிர்ச்சி தக­வல்­களும் வெளி­யாகத் தொடங்­கின.

92a9283fab1ce7a2c6c5da61f15878a7அலரி மாளி­கையில் கைவி­டப்­பட்டுச் சென்­றி­ருந்த 500 கோடி ரூபா பெறு­ம­தி­யான நாண­யத்­தாள்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

அது­மாத்­திர­மன்றி, அலரி மாளி­கைக்குள் தேர்தல் முடி­வு­களை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கென தயார்­ப­டுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்­படும் ஒரு அறை­யி­லி­ருந்து பெருந்­தொ­கை­யான கணி­னிகள் மீட்­கப்­பட்­டன. அத்­தோடு அங்குள்ள மேலும் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.

அதன் பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் புதல்­வர்கள் மற்றும் குடும்ப உறுப்­பி­னர்கள் பாவித்­த­தாகக் கூறப்­படும் சிறிய ரக விமா­னங்கள், குதி­ரைகள், போனிகள் மற்றும் அரிய வகை பட்­சிகள் போன்­ற­னவும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

நாரா­ஹேன்­பிட்டி பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்­தி­லுள்ள களஞ்­சி­ய­சா­லை­ யொன்­றி­லி­ருந்து சிறிய ரக விமா­ன­மொன்று கடந்த 13 ஆம் திகதி மீட்­கப்­பட்­டது.

குறித்த களஞ்­சி­ய­சா­லைக்கு இரத்­ம­லா­னையைச் சேர்ந்த ஏசியன் எயார் சென்டர் என்ற தனியார் விமான ஓட்­டுநர் பயிற்சி நிலையம் ஒன்றைச் சேர்ந்த நால்வர் நாரா­ஹேன்­பிட்­டி­யி­லி­ருந்து அந்த விமா­னத்தைக் கொண்டு செல்ல முனைந்­துள்ளனர்.

அத­னை­ய­டுத்து, பொலிஸார் அதனை கைப்­பற்­றி­யுள்­ளனர். இந்த சிறியரக விமா­ன­மா­னது இருவர் பய­ணிக்கக் கூடி­ய­தாகும்.

விமா­னத்தை எடுத்துச் செல்ல வந்த நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ள­ரான திரைப்­பட இயக்­குநர் சந்­திரன் ரத்னம் உள்­ளிட்ட பலரிடம் வாக்­கு­மூ­லங்­களை பதிவு செய்­துள்ள பொலிஸார் விசா­ர­ணை­களை தொடர்­கின்­றனர்.

அதே­போன்று வாழைச்­சேனை கட­தாசி ஆலையின் விடு­தி­களில் பொதி செய்­யப்­பட்ட நிலையில் உலர் உணவுப் பொருட்களும் பாட­சாலைப் பை மற்றும் முன்னாள் ஜனா­தி­ப­தியின் படம் பொறிக்­கப்­பட்ட அப்­பி­யாசக் கொப்­பிகள் என்­ப­வையும் பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

வாழைச்­சேனை கட­தாசி ஆலையின் மூன்று விடு­தி­களில் கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது பொது மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­காக கொண்­டு­வ­ரப்­பட்ட பொருட்­க­ளையே பொலிஸார் இவ்­வாறு மீட்­டுள்­ளனர்.

இதே­வேளை, காலி துறை­மு­கத்தில் நங்­கூ­ர­மி­டப்­பட்­டி­ருந்த மஹ­நு­வர என்ற கப்­ப­லி­லி­ருந்து பெருந்­தொ­கை­யான ஆயுதங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தன.

Ship-02இந்த ஆயு­தங்கள்  “எவன்ட் காட்” என்ற தனியார் பாது­காப்பு நிறு­வ­னத்­திற்கு சொந்­த­மா­னவை எனவும் பாது­காப்பு அமைச்சின் அனு­ம­தி­யுடன் அந்­நி­று­வனம் சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்­களின் பிடி­யி­லி­ருந்து கப்­பல்­களை பாது­காக்கும் பணி­க­ளுக்­காக பயன்­ப­டுத்தும் ஆயு­தங்­களே கப்­ப­லி­லி­ருந்த மிதக்கும் களஞ்­சி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­னது.

இந்த ஆயுத களஞ்­சி­ய­சா­லையும் அதி­லுள்ள ஆயு­தங்­களும் சட்ட ரீதி­யா­னதே எனக் கரு­தப்­படும் நிலையில் மேல­திக விசாரணைகள் தொடர்­கின்­றன.

அலரி மாளி­கை­யி­லி­ருந்த சில பொருட் கள் அடங்­கிய இரண்டு கொள்­க­லன்­களை பேலி­ய­கொடை பொலிஸார் கைப்பற்­றினர். இச்­சம்­ப­வமும் கடந்த வாரம் இடம்­பெற்­றது. கைப்­பற்­றப்­பட்ட கொள்­க­லன்­களில் ஆடைகள், மரத் தள­பா­டங்கள் மற்றும் நினை­வுச்­சின்­னங்கள் இருந்­துள்­ளன.

அந்த கொள்­க­லன்­க­ளுடன் சென்ற அதி­கா­ரி­க­ளிடம் இது தொடர்பில் விசா­ரணை நடத்­திய போது அது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவ­ரு­டைய குடும்­பத்தின் தனிப்­பட்ட பொருட்கள் என்றும் தெரி­வித்­துள்­ளனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவ­ரது மகன் நாமல் ராஜபக் ஷவின் உரு­வப்­படம் பொறிக்­கப்­பட்ட 68,000 சுவர் கடி­கா­ரங்கள் சபு­கஸ்­கந்­தையில் வைத்து பொலி­ஸா­ரினால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

இலங்கை துறை­முக அதி­காரி ஒரு­வ­ரினால் கடந்த 3 மாதங்­க­ளுக்கு முன்னர் வாட­கைக்கு வாங்­கப்­பட்ட களஞ்­சிய கட்டடத்தில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இக்­க­டி­கா­ரங்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் அறிவித்­துள்­ளது.

அது­மட்­டு­மன்றி, ராஜபக் ஷவி­னரின் சிகப்பு சால்வை பொறிக்­கப்­பட்ட தேநீர் கோப்­பை­களும் இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ளன.

இத­னை­விட கடந்த 19ஆம் திகதி ஹம்­பாந்­தோட்டை வீர­கெட்­டிய பிர­தே­சத்­திலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவ­ரது மகன் நாமல் ராஜபக் ஷவின்  உரு­வப்­படம்  பொறிக்­கப்­பட்ட  2500 கடி­கா­ரங்­களை பொலிஸார் கைப்­பற்­றினர்.

இவ்­விரு இடங்­க­ளிலும் கைப்­பற்­றப்­பட்ட கடி­கா­ரங்­களின் பெறு­மதி 1,15,000 அமெ­ரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அத்­துடன் இவற்றை ஒரு வர்த்­த­கரே சீனா­வி­லி­ருந்து தரு­வித்­துள்­ள­மையும் பொலிஸ் விசாரணைகளில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

அதே­போன்று, அலரி மாளி­கையில் இருந்­த­தாக கூறப்­படும் போனி எனப்­படும் சிறிய இன குதி­ரைகள், நான்கு கோழிகள் மற்றும் ஒரு தொகுதி கோழிக்­குஞ்­சுகள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

ஹம்­பாந்­தோட்டை பற­வைகள் சர­ணா­ல­யத்­துக்கு பொறுப்­பா­க­வி­ருந்த நப­ரி­ட­மி­ருந்தே மேற்­கு­றிப்­பிட்ட குதி­ரைகள், கோழிகள் மற்றும் கோழிக் குஞ்­சு­களை 80ஆயிரம் ரூபா­வுக்கு தாம் பெற்­ற­தாக பிலி­யந்­த­லையைச் சேர்ந்த வர்த்­தகர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

vehiclesஅதே­வேளை, ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு சொந்­த­மான 53 வாக­னங்கள் பிட்­ட­கோட்டே ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பகு­தி­யி­லி­ருந்து கடந்த வாரம் மீட்­கப்­பட்­டது. ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர கூட்­டு­றவு சங்­கத்­துக்கு சொந்­த­மான இடத்தில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வாக­னங்­களே இவ்­வாறு மீட்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

பழைய, புதிய மற்றும் பதிவு செய்­யப்­பட்ட, பதிவு செய்­யப்­ப­டாத பல்­வேறு ரகங்­களை சேர்ந்த வாக­னங்கள் அவ்­வி­டத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்­டன. அவற்றில் 34 கார்­களும் 13 ஜீப் வண்­டி­களும் 2வேன்­களும் 2 கெப் வண்­டி­களும் காணப்­பட்­டன.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் மொத்­த­மாக 750 வாக­னங்கள் இருந்­த­தா­கவும் அவற்றில் 84 டிபெண்டர் ரக வாக­னங்கள் இருந்ததாகவும் அவை தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவை இவ்­வாறு இருக்க முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ரான பல்­வேறு முறைப்­பா­டு­களும் குற்­றச்­ சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

Gota-400x250கோத்­தா­பய பெற்ற 1000 கோடி ரூபா கடனை செலுத்தும் பொறுப்பை சுமக்கும் மின்­சார சபைகொத்­த­லா­வல தனியார் மருத்துவ பீடத்தை அமைப்­ப­தற்­காக தேசிய சேமிப்பு

வங்­கி­யி­லி­ருந்து கடனைப் பெற்­றுள்ள முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக்ஷ அந்தக் கடனைச் செலுத்தும் பொறுப்பை மின்­சார சபை மீது சுமத்­தி­யுள்­ள­தாக மின்­சக்தி மற்றும் எரி­சக்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரணவக்க குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

கொத்­த­லா­வல பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீடத்­துக்­கான வைத்­தி­ய­சா­லையை அமைப்­ப­தற்­காக கோத்­தா­பய ராஜபக்ஷ தேசிய சேமிப்பு வங்­கி­யி­ட­மி­ருந்தே தேவை­யான கடனைப் பெற்­றுள்ளார்.

இந்­நி­லையில் அந்தக் கடனைச் செலுத்த வேண்­டிய பொறுப்பு மின்­சார சபை மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், தேசிய சேமிப்பு வங்­கி­யி­ட­மி­ருந்து அதிக வட்­டிக்கு 10 பில்­லியன் ரூபாவைப் பெறு­மாறு மின்­சார சபைக்குப் பணிக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க கூறு­கையில்,

“மானிய வட்­டிக்கு கோத்­தா­ப­யவின் தனியார் பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை, அதிக வட்­டிக்­கு­ரிய தொகையை மின்­சார பாவ­னை­யா­ளர்கள் செலுத்த வேண்­டி­யுள்­ளது” என்று குறிப்­பிட்­டுள்ளார்.

திறை­சே­ரிக்­கு­ரிய 100 கிலோ தங்கம் மோச­டி­யாக விற்­பனை அர­சாங்க திறை­சே­ரிக்­கு­ரிய 100 கிலோ தங்­கத்தை மோச­டி­யாக விற்ற சம்­பவம் தொடர்­பாக முன்னாள் முதல் பெண்­ம­ணியை குற்­றஞ்­சாட்டி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்­த­னவின் மனைவி சியா­மலி பெரேரா இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் மனை­விக்கு இந்த மோச­டி­யுடன் தொடர்­பி­ருப்­ப­தா­கவும் இதன் கார­ண­மாக வாஸ் குண­வர்­த­ன­வுக்கு தொடர்ச்­சி­யாக அச்­சு­றுத் ­தல்கள் ஏற்­பட்­ட­தா­கவும் தனது முறைப்­பாட்டில் அவர் பதிவு செய்­துள்ளார்.

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக அவர் கட­மை­யாற்­றிய போது திறை­சே­ரிக்­கு­ரிய 100 கிலோ தங்­கத்தை மோச­டி­யாக விற்க முயற்சி நடப்­ப­தாக புல­னாய்வு தகவல் கிடைத்­தது.

இது தொடர்­பாக அவர் விசா­ரணை நடத்­திய போது இதன் பின்­ன­ணியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக் ஷ இருப்­பது தெரி­ய­வந்­தது. இந்த நிலை யில் இது குறித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க இடையூறு ஏற்­பட்­டது. பல்­வேறு அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டன.

இவ்வாறான மேலும் பல தக­வல்கள் வாஸ் குண­வர்­த­ன­வி­ட­முள்­ளன. அவற்­றையும் வெளி­யிட அவர் தயா­ராக இருக்­கிறார். ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டி­ருப்­பதால் இந்த தக­வல்­களை வாஸ் குண­வர்­த­ன வின் கோரிக்கை படி வெளி­யி­டு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

‘திவி­நெ­கும’ அபி­வி­ருத்தி வங்­கியில் 145 கோடி ரூபா பணம் மோசடி

திவி­நெ­கும அபி­வி­ருத்தி வங்­கி­யி­லி­ருந்து சந்­தே­கத்­துக்­கி­ட­மாக 145 கோடி ரூபா பணம் பெறப்­பட்­டி­ருப்­பது குறித்து விசாரணை நடத்­து­மாறு சமுர்த்தி அபி­வி­ருத்தி வங்கி அதி­கா­ரிகள் சங்கம் கணக்­காய்­வாளர் நாய­கத்தை கோரி­யுள்­ளது.

தேர்­த­லுக்கு இரு தினங்­க­ளுக்கு முன் னர் பத்­த­ர­முல்ல வங்கிக் கிளை­யி­னூ­டாக இந்த பணம் மீளப் பெறப்­பட்­டுள்­ளது. திடீரென பெரு­ம­ளவு தொகை பணம் பெறப்­பட்­டி­ருப்­பது சந்­தே­கத்­திற்கு இட­மா­னது எனவும் மேற்­படி அமைப்பு சுட்­டிக்­காட்டியுள்­ளது.

இது தொடர்பில் கணக்­காய்­வாளர் நாய­கத்­திற்கு மேற்­படி அமைப்பு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, திவி­நெ­கும அபி­வி­ருத்தி வங்­கி­யி­னூ­டாக இலங்கை வங்கி தப்­ரபேன் கிளையில் கணக்கு வைக்­கப்­பட்­டுள்­ளது. இதி­லி­ருந்து கடந்த 6 ஆம் திகதி 145 கோடி 69,80,000 ரூபா பணம் மீளப்­பெ­றப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

ஜனா­தி­பதி தேர்­தலின் போது அங்­க­வீ­ன­முற்ற மற்றும் வய­தான சமுர்த்தி பய­னா­ளர்­களை வாக்­குச்­சா­வ­டி­க­ளுக்கு அழைத்து வரு­வ­தற்­கான போக்­கு­வ­ரத் துச் செல­வுக்­கென்று கூறி நாடு பூரா­க­வு­முள்ள திவி­நெ­கும அதி­கா­ரி­க­ளுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

பெரு­ம­ளவு தொகை பணம் திடீ­ரென மீள பெறப்­பட்­டமை சந்­தே­கத்தை தோற்­று­விக்­கி­றது. இது குறித்து விசா­ரணை நடத்­து­மாறு கடி­தத்தில் கோரப்­பட்­டுள்­ளது.

Screen-Shot-2015-01-31-at-9.32.37-AMமஹிந்த, கோத்­த­பாய, பஷில், நாமல் ஆகி­யோ­ருக்கு எதி­ராக ஜே.வி.பி.முறைப்­பாடு

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ முன்னாள் பொரு­ளா­தார அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ, ஹம்­பாந்­தோட்டை பாரா­ளு­ மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக்ஷ உள்­ளிட்ட 12 பேருக்கு எதி­ராக ஜே.வி.பி.யினால் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இலஞ்ச ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்கள் வெளி­நா­டு­க­ளுக்குத் தப்­பி­யோ­டுவதை தடுப்­ப­தற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தனது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்த வேண்டும் என்றும் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்­துள்­ளது.

பஷில், கோத்­த­பா­ய­வுக்கு எதி­ராக மேர்வின் முறைப்­பாடு

முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர்  பஷில் ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா ­பயராஜபக்ஷ ஆகி­யோ­ருக்கு எதிராக கடந்த 17ஆம் திகதி முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்களத்தில் முறைப்­பாடு செய்­துள் ளார். அம்­மு­றைப்­பாட்டில் வெள்ளை வேன் கலா­சாரம், ஆட்­க­டத்­தல்கள் மற் றும் படு­கொ­லைகள் உள்­ளிட்ட பல்­வேறு

குற்­றச்­சாட்­டுக்­க­ளுடன் மேற்­கூ­றிய இரு­வ­ருக்கும் தொடர்­புகள் உள்­ள­தாக அதிர்ச்சி தக­வலை அவர் வெளி­யிட்­டி­ருந்தார்.

yoshitha_rajaphasha_killer3யோஷித்த கடற்­ப­டையில் இணைந்­ததும் புலமைப் பரிசில் பெற்­றதும் எவ்­வாறு?

முன்னாள் ஜனா­தி­ப­தியின் புதல்­வ­ரான யோஷித்த ராஜபக் ஷ கடற்­ப­டையில் இணைந்­தமை மற்றும் வெளி­நாட்­டி­லுள்ள முன்­னணி கடற்­படை கல்­லூ­ரி யில் கற்­ப­தற்கு எவ்­வாறு புலமை பரிசில் பெற்­றுக்­கொண்டார் போன்ற மேலும் பல காரணங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய விசா­ர­ணை­களை மேற்கொள்ளு­மாறு கடற்­படை தள­ப­திக்கு புதிய பாது­காப்பு செயலாளர் எம்.யூ.டி.பஸ்­நா­யக்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

அத்­தோடு கோல்டன் ஸ்போட் தொலைக்­காட்சி சுயா­தீன தொலைக்­காட்­சியில் ஆங்­கில தொலைக்­காட்­சி­யான “பிரைம் ரீ.வி” என ஆரம்­பிக்­கப்­பட்டது. அத் தொலைக்­காட்சி அலை­வ­ரி­சையை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் மகன் யோஷித்த ராஜபக் ஷ எடுத்து கோல்டன் ஸ்போர்ட் சனல் என நடத்­து­கின் றார்.

நாட்டின் நாலா பாகத்­தி­லு­முள்ள சுயா­தீன தொலைக்­காட்­சியின் அன்­ட­னாக்­க­ளையும் சீ.எஸ்.என். தொலைக்­காட்சி பெற்றுக் கொண்­டுள்­ளது எனவும் ஊழியர் தொழிற்­சங்கம் தெரி­வித்­துள்ளது.

indexநாமல் ராஜபக் ஷ பி.எச்.டி. படிக்க அனு­மதி பெற்­றது எவ்­வாறு?

ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தில் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜ பக் ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ எவ்வாறு பி.எச்.டி.படிக்க அனுமதி பெற்றார் என்பது தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் நாமல் ராஜபக் ஷவின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன திட்டத் தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்ப டும் மோசடிகள் குறித்தும் முறைப்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களும் முறைப்பாடுகளும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருவதுடன் பல் வேறு மர்ம முடிச்சுகளும் அவிழ்க்கப் பட்டு வருகின்றன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மற்றும் கசிந்து வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் இது தன் மீது சேறு பூசும் செயற்பாடு எனவும் அவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை நிறுத்துமாறும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply