முதுகு வலிக்குரிய எளிய வேக்யூம் சிகிச்சை எம்மில் பலரும் தினமும் முகங்கொடுக்கும் பிரச்சினை முதுகு வலி. அலுவலகங்களில் பணி யாற்றுவோரும் சரி, வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோரும் சரி, வாகன ஓட்டிகளாக இருந்தாலும் சரி நிச்சயமாக முதுகு வலியால் அவதி யுறுவர்.
அமர்ந்த நிலையிலேயே அதிக நேரம் பணி யாற்றுவதாலும், தொடர்ச்சியாக வாகனத்தை ஓட்டுவதாலும், போதிய உடற்பயிற் சியில்லாத தாலும் முதுகு வலி ஏற்படுகிறது.
முதுகு வலிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட பலரில், பூரண குணமடைந்தவர்களைப் பற்றி தெளிவான விவரங்கள் இல்லை.
இது குறி த்து ஆராயத் தொடங்கினோம் என்றால், முதுகுவலிக்காக சென்று மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்கும் போது, அவர் வைக்கும் முதல் கோரிக்கையே சிறிது நாள் வாகனத்தை ஓட்டாதீர்கள்.
அலுவலகத்திற்குச் செல்லாதீர்கள். வீட்டில் நன்றாக சாப்பிட்டு உறங்கி ஓய்வு எடுங் கள் என்பது தான். அதிலும் முதுகு வலிக்காக நீங்கள் சத்திர சிகிச்சை செய்திருந்தால் இந்த கோரிக்கை கட்டாயமாகும்.
ஏனெனில் இவர்கள் முதுகு வலிக்கான சிகிச்சையின் போது, சென்சிடிவ்வான நரம்புகளின் சங்கமமான முதுகெலும்பில் இருக்கும் சத்து திரவத்தை பரிசோதனை என்ற பெயரில் உறிஞ்சி எடுத்துவிடுகிறார்கள்.
இதனால் கூட முதுகு வலி ஏற்படலாமல்லவா. இதையெல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டுவது எங்கள் நோக்கமல்ல. முதுகுவலிக்கு முதுகெலும்பு மட்டுமே காரணமல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.
அதே தருணத்தில் முதுகு வலிக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் எம். ஆர். ஐ. ஸ்கேன், சி. டி. ஸ்கேன் போன்ற வற்றால் உங்கள் உடலில் ஏற்படும் கதிர்வீச்சு அபாயகரமானவை என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
எம்முடைய வயிற்றின் இடப்புறமாக கீழிறக்கக்குடல் அமைந்துள்ளது. இங்கு சக்தி குறையும் போது, அதாவது பெருங்குடலின் சக்தி குறையும் போது, அதன் பாதிப்பு இடது முதுகில் அதிலும் குறிப்பாக முதுகெலும்பின் நான்காவது லம்பாரை ஒட்டிய சவ்வுகளில் வலிமூலம் உணரப்படுகிறது.
இதிலிருந்து பெருங்குடலின் சக்தியை தூண்டிவிட்டால் முதுகெலும் பின் வலி குறையும் என்பது ஊர்ஜிதமாகிறது.
முதுகு வலியை எப்படி நாம் கண்டறிவது?
இது மிகவும் எளிது. எம்முடைய கை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல் களுக்கு இடைப்பட்ட பகுதியில் கொஞ்சம் கீழ்ப் புறமாக சற்று அழுத்திப் பார்த்து தெரிந்து கொள்ளஇயலும்.
மெட்டாகார்பல் எலும்பு பகுதியான அந்த பகுதியை அழுத்தும் போது வலி இருப்பின் முதுகு வலி இருப்பதை உணரலாம். அதேபகுதியை தொடர்ந்து மிதமாக அழுத்தி வந்தால் அந்த முதுகு வலி மாயமாக மறைவதை யும் காணலாம்.
அதே போல் இதற்கு மற்றொரு சிகிச்சையும் இருக்கிறது. அதற்கு வேக்யூம் (Vacuum) சிகிச்சை என்று பெயர். இதற்கு தகுந்த ஒரு மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனைப் பெறுவது நல்லது.
வேக்யூம் (Vacuum) முறையில் இயங்கும் கண்ணாடி அல்லது றப்பரால் ஆன சிறு உபகரணங்களே இதற்கான கருவிகள். கழுத்தில் தொடங்கி, இடுப்பு வரையிலான பகுதியில் சீரான இடைவெளியில் வெற்றிட உபகரணங்களை வைத்துவிடவேண்டும்.
அதன் பிறகு சில நிமிடங்கள் படுத்திருந்தால் போதுமானது. இதை தொட ர்ந்து சில முறை செய்யும் போது பெருங்குடல் தனக்கு தேவையான சக்தியை பெறுகிறது.
சக்தியை பெற்றவுடன் முதுகு வலியை குறைக் கிறது. இதனை ஒரு சில நாட்கள் தொடர்ந்தால் முதுகு வலி மறையும்.
அதே தருணத்தில் முதுகு வலியுள்ளவர்கள் அவ்விடத்தில் சில மிளகுகளை வைத்து பிளாஸ்டர் ஒட்டிவிடலாம். பிறகு அவ்வப்போது அவ் விடத்தினை இதமாக அழுத்தி விடும் போது வலிக்கு நிவாரணம் கிடைப்பதை உணரலாம். முதுகு வலி உள்ளவர்கள் முன்னோக்கி குனி
வதை தவிர்க்கவேண்டும். தொடர்ந்து ஒரேயிடத்தில் அமர்ந்து பணி செய்யாமல், சிறிது ஓய்வெடுத் துக்கொண்டு பணியாற்றலாம்.
சர்வாங்காசனம் செய்ய தெரிந்திருந்தால் முதுகு வலி க்கு சிறந்த பயிற்சி அது. இதை செய்தாலும் வலிகுறையும்.
-மருத்துவர் M.N.சங்கர் M.D.,
– தொகுப்பு: அனுஷா