“பிறந்து 30 வரு­ஷ­மா­யி­டுச்சு. சினி­மாவில் நுழைஞ்­சப்ப நிறைய பண்­ண­னும்னு ஆசை இருந்­தது. இப்போ எதுக்­காகப் பொறந்­தோம்னு ஒரு ஆன்­மிகத் தேடல்தான் மன­சுக்­குள்ள ஓடிக்­கிட்டு இருக்கு.

மன­சுக்­குள்ள ஒரு தெளிவு இருக்கு. சினி­மாவில் எல்­லாத்­தையும் பார்த்­தி­ருக்கேன். கடைசி ரெண்டு வரு­ஷத்தில் எது­வுமே இல்­லாமல் இருந்த இன்­னொரு பக்­கத்­தையும் பார்த்­தி­ருக்கேன்.

அத­னால, இந்த வருடப் பிறந்த நாளை ரொம்ப நிம்­ம­தியா கொண்­டா­டினேன்!” என்று கூறும் சிம்­புவின் வார்த்­தைகள் ஒவ்­வென்­றிலும் வழி­கி­றது வாழ்க்கை தத்­து­வங்கள்.

உங்கள் பிறந்­தநாள் விருந்தில் நயன்­தாரா கலந்­து­கொண்­டது பர­ப­ரப்­பாகி இருக்­கி­றதே?

ஏன் அவங்க வரக் கூடாது? என்­னோட நடிக்க தின­சரி படப்­பி­டிப்­புக்கு வர்­ற­வங்க, என்­னோட பார்ட்­டிக்கு வந்­ததில் என்ன பரபரப்பு? நயன் மட்­டு­மில்ல, நிறைய பேர் அந்த பார்ட்­டிக்கு வந்­தாங்க. தனுஷ், நயன்­தா­ரான்னு எல்­லா­ரோ­டவும் நெருக்கமாத்தான் பழ­குறேன்.

ஹன்­சிகா, நயன்­தாரா இரு­வ­ரு­டனும் காதல் பிரி­விற்கு பிறகு நடித்­தி­ருக்­கி­றீர்கள். காத­லிக்­கும்­போது இருந்த மன­நிலை என்ன? நடிக்கும் போது இருந்த மன­நிலை என்ன?

பாக­வதர் காலத்தில் இருந்­தது போலவே இப்­பவும் நாம இருக்க முடி­யாது. வாழ்க்­கைங்­கி­றது ஒரு சில­ரோட மட்டும் முடி­யுற பொழப்பு இல்ல.

இப்­படி நடந்­தி­டுச்­சேன்னு நினைச்­சுக்­கிட்டே இருந்தால் வாழ்க்கை நக­ராது. இந்தப் புரிதல் என் மனசில் தெளிவா இருக்கிறதாலதான் நயன், ஹன்­சி­கா­வோட எதையும் பார்க்­காமல் நடிக்க முடி­யுது.

நிகழ்­காலம், வருங்­கா­லம்னு நினைக்­கி­றது முட்­டாள்­தனம். இப்போ நகரும் மணித்­து­ளிகள் மட்­டுமே உண்மை.

நீங்கள் காத­லிக்­கும்­போது பண்­ணிய வேடிக்­கை­யான விஷயம் என்ன?

நான் காதல் பண்­றதே க்ரேஸி­யான விஷ­யம்தான். என்னை மாதிரி ஒருத்தன் காத­லிக்­கவே முடி­யாது. மூன்று காதலைத் தாண்டி வந்­தி­ருக்­கிறேன் என்­பதை என்னால் நம்ப முடி­ய­வில்லை.

2015 இல் திரு­மணத் திட்டம் உள்­ளதா?

எதுக்கு நான் கல்­யாணம் பண்­ணிக்­கணும்? நான் கல்­யா­ணத்­திற்கு எதி­ரா­னவன் இல்லை. கல்­யா­ணம்­கி­றது நல்ல புரிதல் கொண்ட ஆணும், பெண்ணும் பண்­ணிக்­கொள்­வது. கல்­யாணம் நடக்­கிற அள­வுக்கு இப்போ விவா­க­ரத்தும் நடக்கத் தொடங்கி­டுச்சு.

கல்­யாணம் பண்ணி விவா­க­ரத்­தாகி, அப்­புறம் புரிதல் உண்­டாகி, அதுக்­கப்­பு­றம்தான் கல்­யாணம் சரியா அமை­யுது. ஒவ்வொரு பத்து வரு­டத்­துக்கும் நம்­மு­டைய கலா­சா­ரமும், சமூ­கமும் மாறிக்­கிட்­டேதான் இருக்கு.

அதுக்கு ஏற்­பத்தான் நாம வாழணும். அதை விட்­டுட்டு, பின்­னோக்­கிப்போய் நான் இப்­ப­டித்தான் இருப்­பேன்னு சொல்ல முடியாது.

சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாத்­திக்­கி­ற­வன்தான் இந்த சிம்பு. ஏதோ ஒரு பெண் பார்த்து, பேசி முடிச்சு, தாலி கட்டி வாழ்ந்­துட முடி­யாது. ‘இவ­கிட்ட சாகுற வரைக்கும் தோற்­கலாம்‘கிற அள­வுக்கு மனசைப் பொளக்­குற பொண்ணு கிடைக்­கட்டும்.

உங்கள் படங்கள் வெளி­யாக மூன்று வருட இடை­வெளி விழுந்­து­டுச்சே?

இனிமேல் இந்தப் பிரச்­சினை இருக்­கா­துன்னு நினைக்­கிறேன். அதனாலதான் ‘இது நம்ம ஆளு’ படத்தை நானே தயாரிக்கிறேன்.

அதற்குப் பிறகு வரக்கூடிய படங்கள் எல்லாமே தேர்ந்தெடுத்து சரியாத்தான் பண்ணுவேன். கெளதம் மேனன் படத்தை முடிச்சிட்டு, செல்வராகவன் இயக்கும் படத்துக்கு ‘டேட்’ கொடுத்திருக்கேன்.

“தமிழில் குழந்தை மாதிரிக் கொஞ்­சி­றாங்க”

showImageInStory‘இந்­தியா பாகிஸ்தான்’ படத்­துக்­காக விஜய் அன்­ட­னி­யுடன் டூயட் பாடிக் கொண்­டி­ருக்­கிறார் சுஷ்மா ராஜ். கன்­ன­டத்­தி­லி­ருந்து தமி­ழுக்கு வந்­தி­ருக்கும் சுஷ்மா ராஜ் வழங்­கிய நேர்­காணல்.

சுஷ்மா ராஜ் தமி­ழுக்கு வந்­தது எப்­படி?

சொந்த ஊர் ஆந்­திரா. படித்து வளர்ந்­த­தெல்லாம் பெங்­க­ளூரு. ஆடை வடி­வ­மைப்பு படித்­துக்­கொண்­டி­ருந்தேன். அப்­போது மொடலிங் செய்யப் பல வாய்ப்­புகள் கிடைத்­தன. விளம்­ப­ரங்கள் வழியே சினி­மா­வுக்கு வந்தேன்.

முதல் படம் ‘மக­ரந்தி’. கல்­லூரி படிக்­கும்­போதே நடித்த இப்­படம் பெரிய வெற்­றியைத் தந்­தது. அதைத் தொடர்ந்து தெலுங்கில் ‘மாயா’, ‘ஜோரு’ ஆகிய இரண்டு படங்­களில் நடித்தேன். இந்தப் படங்கள் தந்த வாய்ப்­புதான் ‘இந்­தியா பாகிஸ்தான்’.

சினி­மாவில் நடிக்க வந்­ததை உங்கள் வீட்டில் எப்­படி எடுத்­துக்­கொண்­டார்கள்?

அப்பா ரவிக்­குமார் கட்­டு­மானத் துறையில் இருக்­கிறார். அம்மா கஸ்­தூரி குடும்­பத்­த­லைவி. யஷ்வந்த், யாமினி என்று இரட்டை சகோ­தரச் சகோ­த­ரிகள் இருக்­கி­றார்கள்.

நான்தான் மூத்­தவள். மிகவும் முற்­போக்­கான குடும்பம். சினி­மாவில் நடிக்க வாய்ப்பு வந்­ததும் மறுக்­காமல் சம்­மதம் சொல்­லி­விட்­டார்கள்.

கன்­னடம், தெலுங்கு, தமிழ் சினிமா – எது பிடித்­தி­ருக்­கி­றது?

நான் கல்­லூரி படிக்­கும்­போதே கலை நிகழ்ச்­சி­களில் நடனம் ஆடி­யி­ருக்­கிறேன். இதனால், மேடை பயம் வந்­த­தில்லை. ஆனால், சினி­மா­வுக்குப் புதுசு என்­பதால் ஆரம்­பத்தில் இயக்­குநர், ஒளிப்­ப­தி­வாளர் என பலரும் என்னை நடத்­திய விதம் எரிச்சலை ஏற்­ப­டுத்­தி­யது.

பிறகு தமிழில் குழந்தை மாதிரித் தாங்கோ தாங்­கென்று தாங்கி கொஞ்­சவே ஆரம்­பித்து விட்­டார்கள். ஆனால் இந்த அன்பை, பாசத்தைத் தெலுங்­கிலோ, கன்­ன­டத்­திலோ எதிர்­பார்க்க முடி­யாது. நம்மைச் சுதந்­தி­ர­மாக விட்­டு­வி­டு­வார்கள்.

உங்கள் நாயகன் விஜய் அன்­டனி என்ன சொன்னார்?

விஜய் அன்­ட­னியின் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அவர் இசை­ய­மைத்த ‘நாக்க முக்க’ , ‘மக்­க­யாலா’ பாடல்கள் என்றால் தனி விருப்பம்.

அவர் நடித்த ‘நான்’, ‘சலீம்’ படங்கள் பார்த்தேன். இசை­ய­மைப்­பா­ள­ராக இருந்­து­கொண்டு, நடி­க­னாக , தயா­ரிப்­பா­ள­ராகக் கதை­களைத் தேர்வு செய்யும் திறமை விஜய் அன்­ட­னிக்கு அதிகம்.

Share.
Leave A Reply