ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, March 25
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உள்நாட்டு செய்திகள்

    பல்கலைக்கழக மாணவனின் கையை துண்டாக்கிய சம்பவம்: சந்தேகநபர்கள் அறுவர் கைது

    AdminBy AdminApril 28, 2015Updated:April 29, 2015No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    யாழ்ப்பாணம் செல்லமுத்து மைதானத்தில் சனிக்கிழமை(25) நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், அதேயிடத்தைச் சேர்ந்த 6 சந்தேகநபர்களை திங்கட்கிழமை (27) இரவு கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

    மேற்படி இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டில் வவுனியாவைச் சேர்ந்த ந.முரளிதரன் (வயது 23) என்ற மாணவனின் கை மணிக்கட்டுடன் வெட்டப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அத்துடன், வவுனியாவைச் சேர்ந்த க.ரஜீவன் (வயது 23), முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களான எஸ்.ஜெபர்சன் (வயது 23) ஆகிய இருவரும் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மாணவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், திங்கட்கிழமை (27) கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

    இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மானிப்பாய் பொலிஸார், சந்தேகநபர்கள் 6 பேரைக் கைது செய்ததுள்ளதாக கூறினர்.

    யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது வாள்வெட்டு! வெட்டப்பட்ட கை நிலத்தில் துடித்தது
    27-04-2015

    valveduயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு சுதுமலை சந்தியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

    யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட கலைப்பீடப் மாணவர்கள் 9பேர் நேற்று மானிப்பாயில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி பார்ப்பதற்கு சென்று கொண்டிருந்த போது இனந்தெரியாத சிலர் சுதுமலை சந்தியில் வைத்து வழிமறித்தவர்கள் வாள் வெட்டுக்களையும், போத்தல் மற்றும் கொட்டன்களாலும் சரமாறியாக தாக்கியுள்ளனர.

    எதிர்பாராத விதமாக  திடீரென தாம் தாக்குதலுக்கு உள்ளவதை உணர்ந்த மாணவர்கள் ஓடத்தொடங்கியிருக்கின்றார்கள் அந்த நேரத்தில் துரத்திவந்த சிலர் ஒரு மாணவனுக்கு வெட்டியதில் கை இரண்டானது வெட்டப்பட்ட கை நிலத்தில் துடித்துக்கொண்டு கிடந்திருக்கின்றது.

    மற்றைய ஒரு மாணவனுக்கு உடல் முழுவதும் வாளால் வெட்டியிருக்கின்றனர். இறுதியில் தாக்குதல்காரர்களின் வாள் வெட்டுக்கள் ஓய,  தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் ஒருவனின் தலைக்கவசத்தை கழட்டுமாறு கூறியிருக்கின்றனர்.

    அப்போது அவன் கழட்டி காட்டும்போது அவர்கள் தாங்கள் தாக்க வந்தவர்கள் இவர்கள் இல்லை என்பதை உணர்ந்து திரும்பிச்சென்றிருக்கின்றார்கள்.

    இதன் பின்னர் படுகாயமடைந்த மூன்று மாணவர்களையும் துண்டான கையையும் எடுத்துக்கொண்டு மானிப்பாய் வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்றார்கள் மாணவர்கள்.

    எனினும் அங்கிருந்து மேலதிக சிகிக்கைச்சாக யாழ்.போதானா வைத்தியாசலைக்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் கைத்துண்டாடப்பட்ட மாணவனை மேலதிக சிகிசிசைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்.

    இதேவேளை துண்டாடப்பட்ட கைது பொருந்துமா? பொருந்தாதா? என்பது இதுவரைக்கும் தெரியவில்லை.அங்கிருந்து கிடைக்கும் தகவலின் படி மூன்று நாட்களின் பின்னர்தான் முடிவு தெரியும்.

    அதேவேளை யாழ்.போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இரு மாணவர்களில் ஒருவருக்கு உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள், எழும்ப முடியாத நிலையிலேயே அம்மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

    இதுவரை குறித்த அந்த மாணவர்களுடைய பெற்றோர் வந்து சேரவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தாக்குதலுக்கு இலக்கான மாணவர்களில் இருவர் வவுனியா மாவட்டமும் மற்றுமொரு மாணவர் முல்லைத்தீவு மாவட்டம், எனவும் தெரியவருகின்றது.

    இதேவேளை இதுவரைக்கும் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினர் யாருமே பாதிக்கப்பட்ட மாணவர்களை வந்து பார்வையிடவில்லை என கூட இருக்கும் சகமாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

    அத்தோடு பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களில் ஒருவன் கருத்துத் தெரிவிக்கையில் தாங்கள் தூர இடங்களில் இருந்து வந்து இங்கே கல்வி கற்கின்றோம். இங்கே எங்களுக்கு எத்தனையோ துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவித்தக் கொண்டிருக்கின்றோம்.

    இவ்வாறான நிலையில் இப்படியான சம்பவங்கள் மேலும் எங்களை  பாதிப்பிற்குள்ளாக்குகின்றன எனத் தெரிவித்தார்.

    இதுவரைக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதேவேளை இதைக்கண்டித்து நாளை மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் பல்கலைக்கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Post Views: 5

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை; இளைஞன் தலைமறைவு

    March 25, 2023

    இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

    March 24, 2023

    வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு; அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை

    March 20, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2015
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ

    March 25, 2023

    “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்

    March 25, 2023

    இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது

    March 25, 2023

    14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை; இளைஞன் தலைமறைவு

    March 25, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!
    • ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ
    • “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்
    • இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version