முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 2ஆயிரம் மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி மானநஷ்ட வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நிதியமமைச்சர், லங்காபுர அபிவிருத்தி வங்கியின் ஊடாக சட்டவிரோதமாக கடன் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அண்மையில் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ஸவின் இந்த கருத்து தொடர்பிலேயே தான் மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன். எதையும் பேசுவதானால் ஆதாரத்தையும் முன்வைக்க முயலுங்கள். உங்கள் காலத்து ஆட்சியை போன்று செயற்பட வேண்டாம்.
அது போல் 2000 மில்லியன் ரூபா மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ய எமது சட்டத்தரணிக்கு பணித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.
ஞானசார தேரர் நாடு திரும்புகையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்றில் ஆஜராகது இருந்த குற்றச்சாட்டில் ஞானசாரவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாடு சென்றுள்ள ஞானசார தேரர் நாடு திரும்பியதும் அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் உள்ளிட்ட 27 பேருக்கு 8ம் திகதி நீதிமன்றம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி நீதிமன்றில் ஆஜரானவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும் ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அதனால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!
11-05-2015
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் இன்று (11) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தன்னுடைய அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாகக் கூறும் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு சவால் விடுக்கும் வகையில் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
கைது செய்தல் மற்றும் விசாரணை செய்யும் திட்டங்களில் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு உள்ள அதிகாரத்தை கோட்டாபய ராஜபக்ஷ தனது மனுவின் மூலம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்.
தன்னை கைது செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது மனுவில் கோரியுள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சரவை, ஜனாதிபதி செயலாளர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிதி மோசடி பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அறுவர் பெயரிடப்பட்டுள்ளனர்.