ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, May 23
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»வடக்கை வைத்து நடத்தப்படும் அரசியல் பிழைப்பு
    உள்நாட்டு செய்திகள்

    வடக்கை வைத்து நடத்தப்படும் அரசியல் பிழைப்பு

    adminBy adminAugust 4, 2015No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வடக்கில் சட்­டத்தை மீறும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ள­தாக, ராஜபக் ஷ சகோ­த­ரர்கள் தேர்தல் மேடை­களில் முழங்கத் தொடங்­கி­யுள்­ளனர்.

    தான் பத­வியில் இல்­லாத காலத்தில், வடக்கில் குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும், மீண்டும் தீவி­ர­வாதம் தலை­யெ­டுக்கும் ஆபத்தேற்­பட்­டுள்­ள­தா­கவும், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பல வாரங்­க­ளுக்கு முன்­னரே கூறத் தொடங்கிவிட்டார்.

    கடந்­த­வாரம் அவர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யிட்டு உரை­யாற்­றிய போதும் சரி, ஏனைய இடங்­களில் பிர­சாரக் கூட்­டங்­களில் உரை­யாற்றும் போதும் சரி, வடக்கில் பாது­காப்பு நிலை மோச­ம­டைந்து விட்­ட­தா­கவும் அங்கு குற்­றங்கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கவும் புலம்பி வரு­கிறார்.

    இப்­போது, முன்னாள் பாது­காப்­புச்­செ­யலர் கோத்­தா­பய ராஜபக் ஷவும், அதே­வ­ழியில், வடக்கில் குற்­றச்­செ­யல்கள் தலை­தூக்கும் ஆபத்து ஏற்­பட்­டுள்­ள­தாக கூறி­யி­ருக்­கிறார்.

    யட்­டி­நு­வ­ரவில் கடந்த வாரம் நடந்த கூட்டம் ஒன்றில் உரை­யாற்­றிய அவர், “மைத்­தி­ரி­பால சிறி­சேன — ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் காட்டும் அக்­க­றை­யீ­னத்­தினால், வடக்கில் சட்­டத்­துக்கு விரோ­த­மான சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­ப­டு­கின்­றன.

    இது போன்ற நிலை தான் 1980களிலும் காணப்­பட்­டது. நாட்டின் பாது­காப்பை கவ­னிக்­காது விட்டால், நாட்டில் மீண்டும் போர் ஒன்று ஏற்­படும் என்று தெரி­வித்­துள்ளார்.

    சட்­டத்தை மீறி சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­ப­டு­கின்­றன என்றால், அவை எத்­த­கைய சுவ­ரொட்­டிகள் என்­பது முக்­கி­ய­மான விடயம்.

    தேர்­த­லுக்­காக ஒட்­டப்­படும் சுவ­ரொட்­டி­களும் சட்­டத்­துக்கு முர­ணா­னது தான்.

    அதே­வேளை, பிரி­வி­னை­வாதம் அல்­லது தனி­நாட்­டுக்கு ஆத­ர­வாக சுவ­ரொட்­டிகள் ஒட்­டு­வதும் சட்­ட­வி­ரோதம் தான். ஆனால், அத்­த­கைய சுவ­ரொட்­டிகள் ஏதும் இப்­போது ஒட்­டப்­பட்­ட­தான தக­வல்­களோ செய்­தி­களோ வெளி­யா­க­வில்லை.

    முன்­ன­ரென்றால், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு, அத்­த­கைய ஒரு சில சம்­ப­வங்கள் நடந்­தி­ருந்­தாலும், அவ­ரது காதுக்கு புல­னாய் வுப் பிரி­வினர் மூலம் தெரிய வந்­தி­ருக்கும்.

    ஆனால், தனக்கு இப்­போது புல­னாய்வு அறிக்­கைகள் வரு­வ­தில்லை எனவே, பாது­காப்பு அச்­சு­றுத்தல் உள்­ளதா என்­பது குறித்து தனக்கு தெரி­யாது என்று சில வாரங்­க­ளுக்கு முன்னர்தான் அவர் கூறி­யி­ருந்தார்.

    எனவே, புல­னாய்வு பிரிவு மூலம் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்குத் தகவல் கிடைத்­தி­ருக்க வாய்ப்­பில்லை. அதே­வேளை, தேர்தல் காலங்­களில் வேட்­பா­ளர்கள் சட்­டத்தை மீறி சுவ­ரொட்டி மூலம் பிர­சாரம் செய்யும் வழக்கம், வடக்கில் இருப்­பதை விட தெற்கில் தான் அதிகம்.

    கோத்­தா­பய ராஜபக் ஷ குறிப்­பிட்ட சட்­ட­மீ­றல்கள் தேர்தல் பிர­சார சுவ­ரொட்­டி­களைத் தான் குறிக்­கி­றது என்றால், அவர் ஆத­ரவு தேடிப் பிர­சாரம் செய்து வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சுவ­ரொட்­டிகள் தான் வடக்கில் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றன.

    இது­போன்ற மீறல்­க­ளுக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் பொறுப்­புக்­கூற வேண்­டி­யுள்ள நிலையில், வடக்கின் மீது பயங்­க­ர­வாதச் சாயத்தைப் பூசு­வ­தற்கு ராஜபக் ஷவினர் முனை­வது அபத்­த­மா­னது.

    வடக்கில் மீண்டும் தீவி­ர­வாதம் தலை­யெ­டுப்­ப­தற்கு வாய்ப்­பில்லை, அதற்­கேற்­ற­வாறு புல­னாய்வுப் பிரி­வு­களை வலுப்­ப­டுத்தி, தக்க பாது­காப்பு முன்­னேற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்று, அர­சாங்­கத்தில் இருந்தபோது கூறிவந்த கோத்­தா­பய ராஜபக் ஷ தான், இப்­போது வெறும் சுவ­ரொட்­டி­களை வைத்து 1980களின் நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக கூறி­யி­ருக்­கிறார்.

    இந்த நிலை­மையை கவ­னிக்­காது போ னால் நாட்டில் மீண்டும் போர் வெடிக்கும் என்று அவர் கூறி­யுள்­ள­தையும் கவ­னிக்க வேண்டும்.

    போரை வைத்து எப்­ப­டி­யெல்லாம் பிழை ப்பு நடத்­தலாம் என்­பதை, ராஜபக் ஷ சகோ­த­ரர்கள் நன்­றா­கவே உணர்ந்­தி­ருக்­கி­றார்கள்.

    அதனால்தான் அவர்­களால் ஆயுதப் போர் முடி­வுக்கு வந்து ஆறு ஆண்­டுகள் முடி­வ­டைந்த பின்­னரும், அதனை வைத்து அர­சியல் செய்ய முடி­கி­றது,

    ஜனா­தி­பதித் தேர்­தலின் போதும், இது­போன்று போரை வைத்து சிங்­கள மக்கள் முன்­பாக மஹிந்த ராஜபக் ஷ நடத்த முற்­பட்ட அர­சியல் வியா­பாரம், களை கட்­ட­வில்லை. அவ­ருக்குத் தோல்­வியே ஏற்­பட்­டது.

    இந்­த­நி­லையில், மீண்டும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­காக வடக்கில் சட்­ட­மீ­றல்கள், குற்ற ங்கள் அதி­க­ரித்து விட்­டன, வடக்கு 80களின் நிலை­மைக்கு வந்து விட்­டது, இனிப் போர் தான் வெடிக்கப் போகி­றது என்று மிரட்டும் தொனியில் பிர­சா­ரங்கள் செய்­யப்­ப­டு­கின் ­றன.

    வடக்கு மக்­க­ளுக்கு வாக்­க­ளிக்கும் உரி­மையைப் பெற்றுக் கொடுத்­ததால்தான், ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்வி காண நேரிட்­ட­தாக அப்­பட்­ட­மாக கூறி­ய­வர்கள் தான் ராஜபக் ஷவினர்.

    இந்த ஒரு கருத்தில் இருந்தே, வடக்கு மக்கள் மீதான, – தமிழ் மக்­களின் மீதான வெறுப்பும் கோபமும் அவர்­க­ளிடம் உறைந்து போயி­ருப்­பதை உணர்ந்து கொள்ள முடி­கி­றது.

    ஜன­நா­யக அர­சியல் வழி­மு­றை­களின் மீது தமிழ் மக்கள் நம்­பிக்கை வைத்து, அதற்­கான பாதையில் பய­ணிக்கத் தொடங்­கி­யுள்ள நிலையில் தான், 80களின் நிலை­யுடன் ஒப்­பீடு செய்து தெற்கில் வாக்­கு­களை அள்ளும் உத்­தியை அவர்கள் கையா­ளு­கின்­றனர்.

    ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்னர், தோற்­க­டிக்­கப்­பட்ட போது, பிர­பா­க­ர­னுடன், ஈழக்­க­ன­வையும் புதைத்து விட்­ட­தாக கூறி­ய­வர்கள் இப்­போது, தேர்தல் ஆதா­யங்­களை அள்­ளு­வ­தற்­காக, புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தாலும் அவர்­களின் ஈழக்­க­னவு இன்­னமும் உயிர்­வாழ்­கி­றது என்று கூறத் தலைப்­பட்­டுள்­ளனர்.

    அதே­வேளை, ராஜபக் ஷவி­ன­ருக்கு ஒரு உண்மை புரிந்­தி­ருக்­காமல் போகாது.

    இலங்கைத் தீவில் தமி­ழர்­களின் நியா­ய ­மான பிரச்­சி­னைகள், அபி­லா­ஷைகள் தீர்க்­க ப்­ப­டாமல் போனால், அது என்றோ ஒருநாள் நெருப்­பாக வெடிக்கும் என்­பது அவர்­க­ளு க்குத் தெரியும். அமெ­ரிக்கா கூட இதனை சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர் எச்­ச­ரித்­தி­ருந்­தது.

    இலங்­கையில், தமி­ழர்­க­ளுடன் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி, நிலை­யான அமைதி ஏற்­ப­டுத்­தப்­ப­டாது போனால், 5 அல்­லது 10 ஆண்­டு­களில் மீண்டும் போர் வெடிக்கும் என்று, முன்­னைய தெற்கு, மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஓ பிளாக் கூறி­யி­ருந்தார்.

    அப்­போது, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் அதற்­கெல்லாம் வாய்ப்­பில்லை என்று மார்­தட்­டி­யி­ருந்­தது.

    இப்­போது கூட, ரொபேர்ட் ஓ பிளாக் கூறி­யது போன்ற சூழல் ஏதும், இலங்­கையில் ஏற்­பட்டு விட­வில்லை. ஆனால், அப்­ப­டி­யொரு சூழல் ஏற்­ப­ட லாம் என்று சிங்­கள வாக்­கா­ளர்­களை மிரட்டி அவர்­களின் வாக்­கு­களை அள்ளப் பார்க்­கின்­றனர் ராஜபக் ஷவினர்.

    தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாத வரையில் இலங்­கையில் எந்­நே­ரமும், இன­வி­டு­த­லைக்­கான உணர்­வுகள் என்­பது நீறு­பூத்த நெருப்­பா­கவே இருக்கும் என்­பது சிங்­களத் தலை­மைகள் அனை­வ­ருக்கும் தெரியும்.

    அதற்­கேற்­ற­வாறு, தமிழ்­மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து, நிலை­யான அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு, போருக்குப் பிந்­திய ஐந்­தரை ஆண்­டு­களை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை.

    அதற்கு மாறாக, வடக்­கி­லுள்ள மக்­க­ளுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுத்ததால் தான் தோற்க நேரிட்டது என்று சிங்கள மக்களிடையே, எதிர்மறையான பிரசாரத்தை மேற்கொண்டு, ஒரு அனுதாபத்தை தேடிக் கொள்ள முனைகிறார்கள்.

    இதன் மூலம், இனவெறுப்பு இன்னும் இன்னும் தூண்டப்பட்டு, தெற்கிலுள்ள மக்கள் தமிழ் மக்களுடன் இணக்க நிலைக்கு செல்லாமல் தடுக்க முனைகின்றனர்.

    சிங்கள அரசியல் சக்திகள், தேர்தலில் தமக்கு வாக்குகளை அள்ளுவதற்காக, அள்ளி வீசும் பொய்களும் புரட்டுகளும், இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர்களையே தாக்கும்.

    இப்­போது வடக்கு மக்­க­ளையும், வடக்கையும் வைத்து, சிங்­கள மக்­க­ளி­டையே அவர்கள் நடத்தும் அர­சி­ய­லுக்கு சாத­க­மான அறு­வடை­ யாக அமைந்தால், அது வடக்­கி­லுள்ள மக்­க­ளுக்குப் பெரும் சாபக்­கே­டா­கவே அமை யும்.

    கபில்

    Post Views: 601

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022

    கொழும்பில் பயங்கரம் – கர்ப்பிணியை கத்தியால் குத்தி வயிற்றிலிருந்த குழந்தையை கொன்ற கணவர்

    May 21, 2022

    ரயிலுடன் வேன் மோதி விபத்து: நால்வர் காயம்

    May 21, 2022

    Leave A Reply Cancel Reply

    August 2015
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Jul   Sep »
    Advertisement
    Latest News

    May 23, 2022

    வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு

    May 23, 2022

    எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்

    May 23, 2022

    மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை

    May 23, 2022

    இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை

    May 23, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • (no title)
    • வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு
    • எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்
    • மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version