அர­சியல், அர­சி­யல்­வா­திகள், அர­சாங்கம் ஆகிய இம் முப்­ப­தங்­களில் சுட்டிக் நிற்­கின்ற தரப்­பி­னரை இல்­லா­விட்டால் அம்­சங்­களை இன­ரீ­தி­யா­கவோ மத­ரீ­தி­யா­கவோ இல்­லா­விட்டால் குல­ரீ­தி­யிலோ பிரித்­தா­ளுகை செய்­து­விட முடி­யாது.

அர­சி­யல்­வா­திகள் எந்தத் தரப்­பி­ன­ராக இருந்­தாலும் அமைக்­கப்­ப­டு­கின்ற எத்­த ­கைய, எந்தக்கட்சியுடைய அர­சாங்­க­மா­னா லும் இந்த தரப்­புக்­களால் வழங்­கப்­ப­டு­கின்ற வாக்­கு­று­திகள் குறிப்­பாக தேர்தல் காலங்­களில் வழங்­கப்­ப­டு­கின்ற வாக்­கு­று­திகள் அனைத்தும் ஆற்று நீரில் எழு­தி­வைக்­கப்­பட்­ ட­மைக்கு ஒப்­பா­னவை.

இன்­றைய நிலை வரையில் இந்­நாட்டை ஆட்சி செய்­துள்ள எந்­த­வொரு அர­சாங்­கமும் சரி இல்­லா­விட்டால் அத்­த­கைய அர­சாங்­கங்­களின் பிர­தா­னி­களும் சரி எந்தத் தரப்­புமே தாம் வழங்­கிய தேர்தல் கால வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நிறை­வேற்­றிய வர­லாறே இல்லை என்றே சொல்­ல­ வேண்டும்.

பொய்­க­ளுக்கு மேல் பொய்­கூறி பித்­த­லாட்­டத்­துக்கு மேல் பித்­த­லாட்டம் செய்து அர­சியல் பிழைப்பு நடத்­தி­வரும் ஒவ்­வொரு வரும் எந்த முகத்­தைக்­காட்டிக் கொண்டு மக்­க­ளி­டத்தில் வாக்கு கேட்டு வரு­கின்­றனர் என்­ப­துதான் இங்கு எழு­கின்ற பிர­தான கேள்வி.

ஐக்­கிய தேசியக் கட்சி குறித்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் ஜே.வி.பி.யும் விமர்­சித்து வரு­கின்ற நிலையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி குறித்து ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஜே.வி.பியும் விமர்­சித்து வரு­கின்­றன.

இதே­வேளை மேற்­படி இரு பெரும்­பான்மைக் கட்­சி­களும் ஜே.வி.பி.யை விமர்­சிப்­பது மிக அரி­தாக காணப்படுகிறது என்னவோ விந் தையாகவுள்ளது.

கட்­சிகள் மாறி மாறி தமது விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்ற அதே­வேளை அர­சி­யல்­வா­திகள் ஒவ்­வொ­ரு­வரும் மாற்­றுத்­த­ரப்­பினர் மீது எல்­லை­யில்லா விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

ஒரு தரப்­பினர் மாற்றுத் தரப்­பினர் மீது வைக்­கின்ற குற்­றச்­சாட்­டுக்கள் ஊடாக வாக்­கா­ளர்கள் அவர் கள் தொடர்பில் நன்கு தெளிவ­டைந்து­கொ­ள்­கின்­றனர் என்­பது மட்­டுமே உண்­மை­யாகும்.

அது மத்­தி­ர­மின்றி விமர்­ச­னங்கள் மற்றும் பொய்­யா­னதும் போலி­யா­ன­து­மான வாக்­கு­று­திகள் மூல­மாக மக்­களை மடை­யர்­க­ளாக ஆக்­கு­வ­தற்கே முயற்­சிக்­கின்­றனர்.

நரம்பில்லாத நாவால் எதனையும் கூறுவர் என்பர் இவ்வாசகம் இன்றைய அர­சியல் கள த்தில் வாக்­கு­று­தி­களை அள்ளி வீசு­கின்­ற­வர் க­ளுக்கே பொருந்தும்.

பெரும்­பான்மைக் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் இருந்து வரு­கின்ற அதி உச்­சக்­கட்ட அதி­காரப் போட்­டித்­தன்­மைக்­கி­டையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற் றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லேயே வைராக்­கிய அதி­காரப் போட்­டி­யொன்று இன்றைய அரசி யல் மேடையில் சூடு பிடித்துள்ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆறு­மாத கால அர­சாங்கம் நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் என்ன செய்­தி­ருக்­கின்­றது என்று கேட்­கின்ற தரப்­பினர் கடந்த தசாப்த கால அதி­கா­ரத்தை கையில் வைத்­தி­ருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் செய்­தது என்ன என்­பது குறித்தும் சிந்­தித்து கேள்வி கேட்டுப் பார்க்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.

தேர்தல் என்­றாலே வாக்­கு­று­தி­க­ளுக்குப் பஞ்­ச­மி­ருக்­காது. அந்த வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னது வாக்­கு­று­திகள் மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் வாக்­கு­று­திகள் ஆகி­ய­வற்றை ஒப்­பிட்டு சீர்­தூக்­கிப்­பார்த்து செயற்­பட வேண்­டிய பொறுப்பு வாக்­கா­ள­ரி­டத்தில் இருக்­கின்­றது. வாக்­கா­ளர்­களின் தீர்­மா­னத்­தி­லேயே ஒட்­டு­மொத்த மக்­க­ளி­னதும் மாணவ செல்­வங்­க­ளி­னதும் எதிர்­காலம் தங்­கி­யுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்சி கடந்த 10 வரு­டங்­க­ளாக எதிர்க்­கட்­சி­யாக இருந்­தது. இதே­கா­லப்­ப­கு­தியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆட்­சி­ய­தி­கா­ரத்­தோடு வலம்­வந்து கொண்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் கடந்த 10 வரு­ட­கால ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­த­வர்கள் தங்­க­ளது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­னரா? இல்­லா­விட்டால் இன்று கூறு­கின்ற வாக்­கு­று­தி­களை அன்று நினைத்­துப்­பார்த்­த­னரா என்­பது அவர்­க­ளுக்கும் வெளிச்சம் தான்.

மேலும் கடந்த ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி ஏற்­பட்ட புரட்­சி­யுடன் அமைந்த நல்­லாட்சி அர­சாங்கம் மக்­களை ஏமாற்றி விட்­டது என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீது குற்­றத்தை சுமத்தி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தப்­பித்­துக்­கொள்ள நினைத்தால் அது முழுப்­பூ­ச­ணியை சோற்றில் மறைக்கும் முயற்­சி­யா­கவே பார்க்க வேண்டும்.

ஏனெனில் கடந்த 6 மாத­கால அர­சாங்கம் குறிப்­பி­டத்­தக்க, மக்கள் அனு­ப­விக்­கத்­தக்­க­தான நிவா­ர­ணங்­களைப் பெற்றுக் கொடுத்­துள்­ளதை மறுக்­க­மு­டி­யாது.

நாடு முழு­வதும் உள்ள முச்­சக்­க­ர­வண்டி பாவ­னை­யா­ளர்கள் முச்­சக்­க­ர­வண்­டி­களை குடும்ப வரு­மா­னத்­துக்­காக பாவித்­து­வரும் குடும்­பஸ்­தர்கள் பெற்றோல் விலை­கு­றைப்பின் அனு­கூ­லத்­தை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.

இதற்கு அவர்களே சாட்சிகளாகவும் இருக்கின்றனர். இது போன்று பல உதா­ர­ணங்­களை கூறி­னாலும் கூறா­விட்­டாலும் மாற்றுக் கட்­சி­யி­ன­ருக்கும் நன்­றா­கவே புரியும்.

அது மாத்­தி­ர­மல்­லாது கடந்த 6 மாத கால அர­சாங்கம் எனும்­போது அது ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் என்று கூறி­வி­ட­மு­டி­யாது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான தேசிய அர­சாங்­க­மா­கவே அது செயற்­பட்டு வந்­தது.

ஆகவே தேசிய அர­சாங்­கத்தின் நன்­மை­களைப் போன்றே அதனால் தவ­றி­ழைக்­கப்­பட்­டி­ருக்­கு­மானால் அதனையும் அனைத்துத் தரப்­பி­ன­ரும் ஏற்­றுக்­கொள்ள வேண்­டுமே தவிர மக்­களை மடை­யர்­க­ளாக்கி ஒரு தரப்பின் மீது குற்­றத்தை சுமத்தி தான் நல்­ல­வ­ராக மாறி­விட முடி­யாது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி தோல்­வி­ய­டைந்து 9 ஆம் திகதி அதி­காலை வேளையில் அல­ரி­மா­ளி­கையில் இருந்து புறப்­பட்டு மெத­மு­ல­ன­வுக்கு சென்று அங்கு ஜன்­னலில் தொங்­கி­ய­வாறு பேசி இன­வாத பிர­சா­ரத்தை ஆரம்­பித்து வைத்தார்.

அன்று ஆரம்­பிக்­கப்­பட்ட அந்த பய­ணமே இன்றும் தொடர்­கின்­றது. அவ­ரது பின்­ன­ணியே 100 நாள் வேலைத்திட்டம் முழு­மை­ய­டை­யா­மைக்கும் குறித்த காலப்­ப­கு­தியில் தேர்­தலை நடத்த முடி­யா­மைக்­கு­மான கார­ணி­க­ளாக அமைந்­தி­ருந்­தன. பாரா­ளு­மன்­றத்தை படுக்­கை­ய­றை­யாக மாற்­றி­ய­மைத்த வர­லாற்­றையும் நிகழ்த்­தி­விட்­டனர்.

இன்று நாட்டு மக்கள் சகல விடயங்களை யும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் சீர்தூக்கிப் பார்த்து தீர்மானிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றே கூற வேண்டும்.

நிலை­மைகள் இப்­படி இருக்­கையில் மேற்­படி அர­சி­யல்­வா­திகள் முன்­வைக்­கின்ற குற்­றச்­சாட்­டுக்கள் போலி­யான வாக்­கு­று­தி­களில் நாட்டின் ஒட்­டு­மொத்த மக்­களும் மயங்கிக் கிடக்கப் போவ­தில்லை.

எனினும் அர­சியல் வாதிகள் நினைப்­பது போன்று மடை­யர்­களும் இருக்­கத்தான் செய்­கின்­றனர்.

இன்­றைய நிலையில் நாட்டின் 75 சத வீத­மானோர் இந்­நாட்டின் அர­சி­ய­லையும் அர­சியல் வாதி­க­ளையும் பகுத்­த­றியும் தன்­மையை வளர்த்துக் கொண்டு விட்­டனர். ஆதலால் மக்­களை மடை­யர்­க­ளாக்கும் முயற்சி ஒரு­போதும் பல­ன­ளிக்­காது.

ரணி­லுக்கும் மஹிந்­த­வுக்­கு­மி­டை­யி­லான அதி­காரப் போட்­டியில் வெல்­லப்­போ­வது யார் என்ற கேள்­விக்கு எதிர்­வரும் 17 ஆம் திகதி பதி­ல­ளிக்கும் மக்கள் அதன் பிர­தி­ப­லனை 18 ஆம் திகதி விடி­யற்கா­லையில் தெரிந்து கொள்வர்.

இந்­நி­லையில் நாடு முழு­வதும் விருப்­பு­வாக்கு வேட்­டையில் இறங்­கி­யுள்ள வேட்­பா­ளர்கள் தாம் சார்ந்த கட்சி வெற்றி பெறு­கி­றதா இல்­லையா என்­ப­தற்குப் பதி­லாக தாம் பாரா­ளு­மன்­றத்­துக்கு வந்­து­விட வேண்டும் என்ற ரீதியில் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

ரணிலுக்கும் மஹிந்தவுக்குமிடையிலான அதிகாரப் போட்டிக்கு மத்தியில் இவ்விரு வரையும் சார்ந்து நிற்கின்றவர்கள் எப்படியான தீர்மானத்தை அறிவிக்கப் போகின்றனர் என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

நல்லாட்சியை நாட்டு மக்கள் எதிர்பார்க் கின்றனர். அது யாரால் சாத்தியமாகும் என் பதை மக்கள் தீர்மானிக்க வேண்டியவர்க ளாக இருக்கின்றனர்.

மலை­யக அர­சி­யலை எடுத்து நோக்­கு­வோ­மானால் மலை­யக மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தாகக் கூறு­கின்ற தலை­மைகள் பிர­தான கட்­சி­க­ளிலும் தனித்தும் போட்­டி­யி­டு­கின்­றனர்.

இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ், மலை­யக மக்கள் முன்­னணி, தொழி­லாளர் தேசிய சங்கம் ஆகிய மூன்று பிர­தான மலை­யகக் கட்­சி­களும் பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுடன் இணைந்து போட்­டி­யி­டு­கின்ற அதே­வேளை இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் தனித்தும் போட்­டி­யி­டு­கின்­றது.

ஒரு­வ­கையில் பாரா­ளு­மன்­றத்தில் மலை­யகப் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரித்­துக்­கொள்ளும் எண்­ணத்தில் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தாகக் கூறி­னாலும் மலை­ய­கத்தில் வேட்­பா­ளர்­க­ளி­டத்தில் இருந்து வரு­கின்ற குரோத மனப்­பான்மை வெட்­டுக்­குத்­துக்கள் போட்­டி­க­ளுக்கு அப்பால் மிஞ்சி நிற்­கின்ற பொறா­மைகள் மலை­யக வாக்­கா­ளர்­களை சலிப்­ப­டைய செய்­துள்­ளது.

மலை­யக இளைஞர் யுவ­தி­களும் சரி ஒட்­டு­மொத்த மக்­களும் சரி எல்­லோ­ருமே இத்­த­கைய அர­சி­யல்­வா­தி­களால் ஏமாற்­றப்­பட்டே வந்­துள்­ளனர்.

அரச ஊழி­யர்கள், ஆசி­ரி­யர்கள் உள்­ளிட்­டோரும் கூட இவ்­வாறு மாயா­ஜால வார்த்­தை­களால் மயக்­க­ம­டைந்­துள்­ளனர். அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவும் பத­வியை அடைந்து கொள்­வ­தற்­கா­க­வுமே இவர்கள் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றனர்.

ஒவ்­வொரு அர­சி­யல்­வா­தியும் தான் பய­ணித்துக் கொண்­டி­ருக்கும் பாதை எத்­த­கை­யது? தனது செயற்­கா­ரி­யங்­கள் திருப்­தி­யா­ன­வையா? போலி­யா­ன­வையா? தேர்தல் கால வாக்­கு­று­திகள் எந்­த­ளவில் சாத்­தி­ய­மா­னவை? நடை­பெ­று­கின்­றவை நடை­பெ­றப்­போ­கின்­றவை எல்­லா­வற்­றை­யுமே அறிந்­தி­ருக்­கின்­றனர்.

இருப்­பினும் இவர்கள் அனை­வ­ருமே அவ­ரவர் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப அர­சியல் காய்­களை நகர்த்தி வரு­கின்­றனர்.

நிலைமை இவ்­வா­றி­ருக்­கையில் நுவரெலியா மாவட்டத்தில் பாம்­புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டி ஏமாற்­று­கின்ற விலாங்­கினைப் போன்று இரட்டை வேட­மிட்­டுத்­தி­ரியும் ஒரு சில அர­சி­யல்­வா­தி­களும் புல்­லு­ரு­வி­களைப் போன்று மலை­யக அர­சி­ய­லுக்குள் புகுத்து நாசம் செய்­கின்ற நயவஞ்­சக மேதா­வி­க­ளையும் காண­மு­டி­கின்­றது.

மலை­ய­கத்தில் மாத்­தி­ர­மின்றி வடக்கு மக்­க­ளையும் இவ்­வாறு ஏமாற்றி பூச்­சாண்டிக் காட்டிக் கொண்­டி­ருக்கும் அர­சி­யல்­வா­திகள் வாழ்­வ­தற்கு மலை­ய­கத்தில் ஒரு கூட்டம் துணை­நிற்­பது கவ­லைக்­கு­ரிய விடயம்.

சுயேச்சைக் குழு­வொன்றில் அப்­பாவிப் பெண்­களை களத்தில் இறக்­கி­விட்டு செயற்படும் ஒருவர் தன்னை மலை­ய­கத்தில் இப்­ப­டி­யான ஒரு பகு­தி­யி­ன­ரிடம் மேதா­வி­யாகக் காட்­டிக்­கொண்­டி­ருக்­கிறார்.

இப்­ப­டி­யான கோமாளி அர­சி­யல்­வா­திகள் மலை­ய­கத்­துக்குள் நுழை­வ­தற்கு கார­ணமே மலை­யக அர­சி­யல்­வா­திகள் தான். மலை­யக அர­சி யல்வாதிகள் உண்­மை­யான அர­சியல் வாதி­ க­ளாக நடந்து கொண்­டி­ருந்தால் இப்­ப­டி­யா­ன­வர்கள் வந்து புகு­வ­தற்கு இட­மி­ருந்­தி­ருக்­காது.

கோமாளி அர­சி­யல்­வா­தியின் சூழ்ச்­சிக்குள் சிக்­கி­யுள்ள அப்­பாவிப் பெண்கள் தாம் நம்­பி­யி­ருக்கும் நபர் பற்­றிய உண்மைத் தோற்­றத்தை காணா­துள்­ளனர்.

மலை­யக அர­சியல் இன்று சிதைந்து காணப்­ப­டு­கின்ற நிலையில் மேலும் இங்கு கும்­மி­ய­டிப்­ப­தற்கு எத்­த­னித்­துள்ள வஞ்­சக அர­சியல்வாதி­யொ­ரு­வரின் தாளத்­துக்கு ஆடிக் கொண்­டி­ருக்கும் மேற்­படி மலை­ய­கத்தின் குறிப்­பிட்ட பகு­தி­யினர் என்றோ ஒரு நாள் தமது தவறை உணர்வார்கள்.

போக்­கிடம் இல்­லாது அர­சியல் அநா­தை­யா­கி­விட்ட இப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளுக்கு தமிழ் மக்கள் குறிப்­பாக மலை­யக மக்கள் வெகு விரை­வி­லேயே வெள்ளைய­டித்து அனுப்­பி­வைக்­கப்­போ­கின்­றனர்.

இப்­ப­டி­யா­ன­வர்­க­ளுக்கு மத்­தி­யில்தான் இன்று நாட்­டி­லுள்ள புத்­தி­ஜீ­விகள், சமூக அமைப்­புகள், நலன் விரும்­பிகள், மாற்றுக் கொள்­கை­யா­ளர்கள் மற்றும் மதத்­த­லை­வர் கள் என பல்­வேறு தரப்­பி­னரும் வேண்டி நிற்­பது என்­ன­வென்றால் ஒவ்­வொரு வாக்­கா­ள னும் நாடு குறித்தும் எதிர்­காலம் குறித்தும் சிந்­திக்க வேண்டும் என்­ப­தாகும்.

நல்ல சமு­தா­யத்தை, சிறந்த நாட்டை, நற்­பண்­பு­களை, ஒழுக்க சீலர்­களை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்­பது இவர்­களின் எதிர்­பார்ப்­பா­கவும் ஆதங்­க­மா­கவும் இருக்­கின்­றது.

இன்று மலை­ய­கத்­தி­லி­ருந்து தமிழ்ப் பிர­தி­நி­திகள் அதி­க­மாக உரு­வாக வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை.

எனினும் அதிகப்பிரதிநிதிகள் வேண்டும் என்பதற்காக சண்டியர்களையும் ஏமாற்றுக்காரர்களையும் பித்தலாட்டக்காரர்களையும் பொய்யர்களை யும் பிரதிநிதிகளாக ஆக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

உண்மையான சமூகப் பற்றாளர்கள் சேவையாளர்கள் மக்களோடு மக்களாக இருந்து வருபவர்கள், தோட்டத் தொழில ாளியை தோழனாக நினைப்பவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக படித்தவர்கள், அரசியல் ரீதியிலான ஞானமுள்ளவர்களை மலையக வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்ய வேண்டியது அவசியமாகும்.

பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகமான தமிழ்ப்பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாக வேண்டும்.

இன்று வாக்குக் கேட்டு நிற்பவர்கள் தாம் வழங்குகின்ற தேர்தல் வாக்குறுதி என்ன என்பதை மறந்துவிடக் கூடாது.

ஏனெனில் மக்கள் அதனை மறக்கப்போவதில்லை. ஐந்து வருடங்களின் பின்னர் இதேநிலைமை மீண்டும் வரத்தான் போகின்றது.

அது மாத்திரமன்றி உள்ளூராட்சித் தேர்தல்களும் இடம்பெறவுள்ளமை இங்கு நினைவுபடுத்த வேண்டிய விடயமாகும். எப்படி இருப்பினும் மலையகத்தினின்று தமிழ்ப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் மக்கள், இளைஞர் யுவதிகள் ஆழமாக சிந்தியுங்கள்.

மதத்தலை வர்களும் கல்விமான்களும் கூறுகின்ற அறிவுரைகளை செவிமடுங்கள். அரசியல் வாதிகளது சுயரூபம் தொடர்பில் பகுத்த றியுங்கள். அது தொடர்பில் தீர்மானியுங் கள். பின்னர் வாக்களியுங்கள். அப்படி செய் வீர்களானால் நீங்களே வெற்றியாளர்கள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரம் ஆசிரிய உதவியாளர்களுக்கான சம்பள விவகாரம் தொடர்பில் மேற்படி இரு தரப்பினருமே பேராசையை வளர்த்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

ஜே.ஜி.ஸ்டீபன்

Share.
Leave A Reply