குஜ­ராத்தில் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­தி ற்கு உள்­ளான பெண் ஒரு­வரின் பத்­தி­னி­தன்­மையை நிரூ­பிக்க 40 கிலோ எடை­யுள்ள கல்லை தலையில் சுமக்க வேண்டும் என பஞ்­சா­யத்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

குஜ­ராத்தில் திரு­ம­ண­மான பெண் ஒருவர், அவ­ரது ஊரைச் சேர்ந்த ஒரு­வ­ராலே பலாத்­காரம் செய்­யப்­பட்­டுள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்­ப­ம­டைந்த நிலையில், கருவை கலைக்க அனு­மதி வேண்டி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்­தார்.

ஆனால், கர்ப்­பத்தை கலைக்க உயர் நீதி­மன்றம் அனு­மதி வழங்­க­வில்லை. குழந்­தை யைப் பெற்று நீதி­மன்­றத்தில் ஒப்­ப­டைக்­கும்­படி உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இந்­நி­லையில், அந்த பெண் மீண்டும் தனது கண­வ­னுடன் சேர்ந்து வாழ விரும்­பி­யுள்ளார்.

ஊர் பஞ்­சா­யத்தார் அதற்கு, கண­வ­ருடன் வாழ 40 கிலோ எடை­யுள்ள கல்லை தலை யில் சுமக்க வேண்டும் என தீர்ப்­ப­ளித்­துள்­ளனர்.

அந்தக் கல்லை சுமக்க முடியவில்லை என்றால் அந்த பெண் கணவருடன் மீண்டும் வாழ முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

கலாமின் சமா­தியில் தினமும் 10 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்டோர் அஞ்­சலி: வல்­ல­ரசு கன­வுக்காக அய­ராது உழைப்போம் என இளை­ஞர்கள் உறு­தி­மொழி

13-08-2015

 kalamaaaaaaaஇரா­மேஸ்­வ­ரத்தில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி அப்­துல்­க­லாமின் சமா­தியில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் வீதம் அஞ்­சலி செலுத்தி வரு­கின்­றனர்.

இது­வரை 2 இலட்சம் பேர் இவ்­வாறு அஞ்­சலி செலுத்­தி­யுள்­ளனர்.

கலாம் சமா­திக்கு தமிழ்­நாடு, கேரளா, கர்­நா­டகா, ஆந்­திரா, மக­ராஷ்­டிரா உள்­ளி ட்ட வட மாநி­லங்­களை சேர்ந்த இளை­ஞர்கள், மாண­வர்கள், பொது­மக்கள் திரண்டு வந்து அஞ்­சலி செலுத்தி வரு­கின்­றனர்.

இரா­மேஸ்­வரம் கோயி­லுக்கு வரும் பக்­தர்­களில் பெரும்­பா­லானோர் தவ­றாமல் கலாம் நினை­வி­டத்­திற்கு வந்து அஞ்­சலி செலுத்தி விட்டு செல்­கின்­றனர்.

ஒரு நாளைக்கு சாரா­ச­ரி­யாக 10 ஆயிரம் பேர் வீதம் அஞ்­சலி செலுத்தி உள்­ளனர்.

அப்­துல்­கலாம் சமா­திக்கு அஞ்­சலி செலுத்­திய உசி­லம்­பட்டி கல்­லூரி மாண­வர்கள் கருத்து தெரி­விக்­கையில் “தூங்­கும்­போது வரு­வது கனவு அல்ல, உன்னை தூங்க விடாமல் செய்­வது தான் உண்­மை­யான கனவு’ என கூறிய அப்­துல்­கலாம் மாண­வர்கள், இளை­ஞர்­க­ளுக்கு விடி­வெள்­ளி­யாக திகழ்ந்தார்.

அவர் மறை­ய­வி ல்லை, கோடிக்­க­ணக்­கான மாண­வர்கள் மனதில் வாழ்­கிறார். அவர் வழி­காட்­டிய இலட்­சிய பயணம் வெற்றி பெறவும், இந்­தியா வல்லரசு நாடாக உருவாக நாங்களும் அயராது உழைப்போம் என அவரது சமாதியில் உறுதி மொழி எடுத்துள்ளதாக தெரி வித்தனர்.

Share.
Leave A Reply