மொட­லாக தொழில்­பு­ரியும் யுவ­தி­யொ­ருவர் விமா­னத்தில் தனது பூனையை கடத்திச் சென்­ற­போது, ஏற்­பட்ட மோதல் கார­ண­மாக சர்­வ­தேச பய­ணிகள் விமா­ன­மொன்று அமெ­ரிக்க யுத்த விமா­னங்­க­ளினால் சூழப்­பட்ட நிலையில் அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

1194649செக் குடி­ய­ரசைச் சேர்ந்த ஸனேட்டா ஹசி­கோவா, இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து அமெ­ரிக்க அதி­கா­ரி­களால் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.

34 வய­தான ஸனேட்டா ஹசி­கோவா அண்­மையில், அமெ­ரிக்­காவின் லாஸ் வேகாஸ் நக­ரி­லி­ருந்து ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரை நோக்கிச் சென்­று­கொண்­டி­ருந்த எயார்லைன்ஸ் விமா­ன­மொன்றில் பயணம் செய்தார்.

விமா­னத்தில் பிரா­ணி­களை கொண்­டு ­செல்­வ­தற்கு ஜேர்­மனி பல நிபந்­த­னை­களை விதித்­துள்­ளது.

ஆனால், மொடல் ஹசி­கோவா, தனது பைக்குள் வைத்து பூனையொன்றை தன்­னுடன் விமா­னத்­துக்குள் எடுத்துச் சென்றார்.

விமானம் புறப்­பட்டு சுமார் அரை மணித்­தி­யா­லத்தின் பின்­னரே விமான ஊழி­யர்கள் இந்த பூனையைக் கண்­டனர்.

அதன்பின் அப்­பூ­னையை ஹசி­கோ­வா­வி­ட­மி­ருந்து கைப்­பற்றி, விமா­னத்தின் கழி­வ­றை­யொன்றில் அடைத்து வைத்­தனர்.

சிறிது நேரத்­தின்பின் அப்­பூ­னையை பார்ப்­ப­தற்­காக ஸனேட்டா ஹசி­கோவா அந்தக் கழி­வ­றையை நோக்கி நடந்தார். அப்­போது விமானப் பணிப்பெண் ஒருவர், ஹசி­கோ­வாவை தடுத்­த­துடன், அவரின் ஆச­னத்­துக்குச் திரும்பிச் செல்­லு­மாறு அறி­வு­றுத்­தினார்.

11946Untitled-4இதனால், ஹசி­கோவா ஆத்­தி­ர­ம­டைந்து, மேற்­படி விமானப் பய­ணிப்­பெண்ணை தாக்­கினார்.

அத்­துடன் “விமா­னத்தை நான் வீழ்த்­தப்­போகிறேன்” எனவும் அவர் அச்­சு­றுத்­தினார்.

அந்த போயிங் 767 விமா­னத்தில் 250 பய­ணிகள் இருந்­தனர்.

ஹசி­கோ­வாவின் வன்­மு­றை­யான நட­வ­டிக்கை மற்றும் அச்­சு­றுத்தல் குறித்து பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு விமானி தக­வல்கள் கொடுத்தார்.

250 பேர் கொண்ட அப்­பய­ணிகள் விமா­னத்தை வீழ்த்­தப்­போ­வ­தாக அச்­சு­றுத்­தப்­பட்­டதை பார­தூ­ர­மா­ன­தாக அதிகா­ரிகள் கரு­தினர்.

அதை­ய­டுத்து விமா­னத்தை கட்­டுப்­பாட்­டுடன் தரை­யி­றக்­கு­வ­தற்கு வச­தி­யாக அமெ­ரிக்க விமானப் படையின் இரு எவ்.16 ரக போர் விமா­னங்கள் மேற்­படி பய­ணிகள் விமா­னத்தை சூழ்ந்து­கொண்­டன.

1194642பின்னர், ஜேர்­மனி நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த அவ்­விமானம் திசை திருப்­பப்­பட்டு அமெ­ரிக்­காவின் டென்வர் நகரில் அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்­டது.

அதை­ய­டுத்து அமெ­ரிக்க குடி­வ­ர­வுத்­துறை அதி­கா­ரிகள் விமா­னத்­துக்குள் நுழைந்து ஸனேட்டா ஹஸி­கோ­வாவை கைது செய்­தனர்.

அவரின் விஸாவில் சிக்கல் இருப்பதகாவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1194650அவ்விமானத்தில் இருந்த ஏனைய 249 பயணிகளும் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

சுமார் 24 மணித்தியால தாமதத்தின்பின் அப்பயணிகள் மீண்டும் ஜேர்மனி நோக்கி புறப்பட்டனர்.

ஸனேட்டா ஹசிகோவா, அமெரிக்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.

செக்கஸ்லோ வாக்கியாவின் மிஸ் மல்டிவேர்ஸ், மற்றும் ஸ்விம்சூட் யூ.எஸ்.ஏ. வேர்ல்ட் ஆகிய அழகுராணி போட்டிகளிலும் தான் பங்குபற்றியதாக ஸனேட்டா ஹசிகோவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply