என்னை நன்­றாக படம் எடுங்கள். எடுத்­துக்­கொண்டு ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்­தோ­ஷப்­ப­டுவர் என முன்னாள் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் (பிள்­ளையான்) நேற்று நீதி­மன்ற வளாகத்தில் வைத்து குறிப்­பிட்டார்.

முன்னாள் பார­ளு­மன்ற உறுப்­பினர் ஜோஸப் பர­ரா­ஜ­சிங்கம் படு­கொலை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஞாயி­றன்று மாலை கைது செய்­யப்­பட்ட பிள்­ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

பிள்ளையான் நேற்று பிற்­பகல் 1.00 மணி­ய­ளவில் புதுக்­கடை முதலாம் இலக்க நீதிவான் நீதி­மன்றின் நீதி­பதி கிஹான் பிலப்­பிட்­டிய முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு தொடர்ந்து தடுத்து வைத்து விசா­ரிப்­ப­தற்­கான அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

நீதி­வானின் உத்­தி­யோ­க­பூர்வ அறையில் சட்­டத்­த­ர­ணிகள், குற்றப் புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரிகள் பிள்ளையான் ஆகியோர் மட்டும் இருக்க தடுப்புக் காவல் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து திறந்த நீதி­மன்ற பகு­திக்கு பிள்­ளையான் அழைத்து வரப்­பட்ட நிலையில் அங்கு அவ­ரது சட்டத்த­ர­ணியால் அவ­ருக்கு ஆலோ­ச­னைகள் வழங்க­ப்­பட்­டன.

‘ எதிர்­வரும் நவம்பர் 4 ஆம் திகதி உங்­களை இதே மன்றில் முன்­னிலைப் படுத்­துவர். அப்­போது நாம் வருவோம். ஒன்றும் பயப்­பட தேவை­யில்லை. உங்கள் உற­வி­னர்­க­ளுக்கு சனிக்கிழமை உங்­களை பார்­வை­யி­டலாம். உணவும் கொண்­டு­வந்து தரலாம் என இதன் போது அந்த சட்­டத்­த­ரணி பிள்­ளை­யானிடம் கூறினார்.

pilaiyanஇதனைத் தொடர்ந்து கைவி­லங்­கி­டப்­பட்ட பிள்­ளையான் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நீதி­மன்­றத்­துக்கு வெளியே அழைத்து வரப்­பட்டார்.

இதன்­போது மன்றின் புதுக்­கடை நீதி­மன்ற வளா­கத்தின் பிர­தான வாயிலை பிள்­ளையான் அடைந்த போது அங்கி­ருந்த புகைப்­படப் பிடிப்­பா­ளர்கள் அவரை புகைப்படம் எடுத்­தனர்.

 

பிள்ளையானின் தடுப்புக்காவல் நீடிப்பு 

pillaiyannndஇலங்கையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் இரு வாரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தினால் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுத் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் பொலிஸ் விசாரணைக்காக 72 மணித்தியாலங்களுக்கு மேல் ஒருவரை தடுத்து வைக்க முடியாது. 72 மணி நேரத்துக்கு மேல் தடுத்து வைத்து விசாரணை செய்வதாயின் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும்.

இதன் பிரகாரம் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு துறையினரால் இன்று புதன்கிழமை முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், எதிர்வரும் 4ம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதியளித்துள்ளது.

நான்காவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டு பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை

13-10-2015

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உப தலை­வரும் முன்னாள் மட்­டக்­க­ளப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்­சியின் தலை­வ­ரு­மான சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் (பிள்­ளையான்) நீண்ட விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

நேற்று முன் தினம் கைது செய்­யப்­பட்ட அவ­ரிடம் முன்னாள் எம்.பி. பர­ரா­ஜ­சிங்­கத்தின் கொலை தொடர்பில், புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வுக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் கீழ் நேற்று மாலை­யாகும் போதும் விசேட விசா­ர­ணைகள் இடம்­பெற்றுக்கொண்டிருந்த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சட்­டத்­த­ரணி ருவான் குண­சே­கர தெரி­வித்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி நத்தார் சிறப்பு ஆரா­த­னை­களின் போது மட்­டக்­க­ளப்பு, தேவா­லயம் ஒன்றில் வைத்து முன்னாள் எம்ஜ்பி ஜோஸப் பர­ராஜ சிங்கம் அடையாள்ம் தெரி­யாத ஆயுததாரிகளால் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­ட­துடன் அவ­ரது மனைவி உள்­ளிட்ட 8 பேர் சம்ப்­வத்தில் காயங்களுக்கு உள்­ளா­கினர்.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரிவுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன் பணிப்­பாளர் சுதத் நாகஹமுல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவு விசேட விசா­ர­ணை­களை நடத்­து­கின்­றது.

கடந்த புதன்­கி­ழ­மை­யன்று மட்­டக்­க­ளப்­புக்கு சென்­றி­ருந்த விசேட பொலிஸ் குழு­வினர், ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் படு­கொலை சம்­பவம் தொடர்­பாக மட்­டக்­க­ளப்பு மாந­கர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் முன்னாள் தேசிய அமைப்­பா­ளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பின­ரு­மான பிரதீப் மாஸ்டர் என்று அழைக்­கப்­படும் எட்வின் சில்வா கிருஷ்­ணா­னந்­த­ராஜா மற்றும் கஜன் மாமா என்­ற­ழைக்­கப்­படும் ரெங்­க­சாமி கன­க­நா­யகம் ஆகிய இரு­வ­ரையும் கைது செய்­தனர்.

இரு­வ­ரையும் கொழும்­புக்கு அழைத்து வந்த புல­னாய்வுப் பிரி­வினர் அவர்­களை 90 நாள் தடுப்புக் காவலில் பயங்க­ர­வாத தடை­சட்­டத்தின் கீழ் மன்றில் பெற்றுக் கொண்ட அனு­ம­திக்கு அமைய விசா­ர­ணை­களை முன்னெடுத்து வரு­கின்­றனர்.

அவர்­க­ளி­ட­மி­ருந்து விசா­ர­ணை­களில் பெறப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக பிள்­ளை­யான கைதுசெய்யப்பட்டதுடன் தொடர்ந்தும் நான்காம் மாடியில் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்படுத்தப்பட்­டுள்ளார்.

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் பிள்­ளை­யான கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் நேற்று மாலை 6.15 ஆகும் போது கைதாகி 24 மணி நேரமே நிறை­வ­டைந்­தி­ருந்­தது.

அதன்­படி பொலிஸாருக்கு பிள்ளையானை 48 மணி நேரம் தடுத்து விசாரிக்க அனுமதியுள்ள நிலையில் இன்று அவர் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவல் உத்தரவொன்றின் கீழ் விசரணை யொன்றுக்கு உட்படுத்தப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Share.
Leave A Reply